பின்பற்றுபவர்கள்

ஜெய்ஷங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெய்ஷங்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 நவம்பர், 2012

மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு


அந்த கால கட்டத்தின் சரியான குத்து பாடல் இது. வாணி ஜெயராம் கூட இப்படி பாடுவாரா என்பதாக இருந்தது. (P சுசீலா அம்மா வாங்கோன்ன அட வாங்கோன்ன பாடியது போலே) இசையில்தான் வழக்கம் போல பாபி பாடலிசையை இணைத்துக் கொண்டார்கள் ஷங்கர் கணேஷ்.

திரைப் படம்: பாலாபிஷேகம்
நடிப்பு:  ஜெய்ஷங்கர், ஸ்ரீபிரியா
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
பாடியவர்கள்: வாணி ஜெயராம், கோவை சவுந்திரராஜன்
பாடல்: A மருதகாசி
இசை: ஷங்கர் கணேஷ்





தையாரி தையாரி
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்

செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து
நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடி தான்
உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடி தான்

செவ்வப்பு என் வனப்பு உன் நெனப்புல மயங்க
கொடியும் மெல்ல வளையும் சிறு கொடியில் கனி குலுங்க
தை மாசம் கல்யாண நாள் குறிச்சி
தை மாசம் கல்யாண நாள் குறிச்சி
ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சி
ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சி
செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து
நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடி தான்
உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடி தான்

வயல்வெளி வரப்பினில் மறைவிடம் இருக்கு
பெண்ணே நான் வந்தேன் எனை தந்தேன் பயம் எதுக்கு
பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே
பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே
போறாமை உண்டாகும் உறவுக்குள்ளே
போறாமை உண்டாகும் உறவுக்குள்ளே
மச்சானே என்
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்

கனியிது கனிந்தது அணில் வரும் என்று
கொத்தும் கிளி வர்க்கம் கிட்ட வருமோ என்னை கண்டு
காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்
காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்
ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்
ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்
மச்சானே என்
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்

திங்கள், 12 நவம்பர், 2012

வா வாத்யாரே ஊட்டாண்டே


சும்மாவா சொன்னாங்க ஆச்சியை பொம்பளை சிவாஜின்னு! என்னா கலக்கு கலக்குறாங்க! தமிழ் திரை உலகில் இவர் ஒரு சகாப்தம். இவரை ஈடு செய்ய யாரும் இல்லை இன்று வரை.

படம்: பொம்மலாட்டம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: வி. குமார்
பாடியவர்: மனோரமா

இயக்கம்: V ஸ்ரீனிவாசன்
நடிப்பு: மனோரமா, சோ, ஜெய்ஷங்கர், ஜெயலலிதா




வா வாத்யாரே ஊட்டாண்டே
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு அட
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு

வா வாத்யாரே ஊட்டாண்டே
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
நைனா
ஆ ஆ ஆ ஆ ஆ   ஆ ஆ ஆ ஆ ஆ
நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சே பாத்து சால்னா நெனப்பு வந்தாச்சு அட
மச்சான்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மச்சான் ஒன் மூஞ்சே பாத்து சால்னா நெனப்பு வந்தாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு

வாவா மச்சான் வா மச்சான் வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் ஒண்ணா சேந்து வாராவதிக்கே போகல்லாம்

வா வாத்யாரே ஊட்டாண்டே
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

என் உள்ளம் அழகான வெள்ளித் திரை


ஒரு சினிமா பைத்தியம் எப்படி சினிமா, சினிமா என்று அலைந்து கேடு கெட்டு போனாள் என்பது இந்த படம் பார்த்தால் புரியும். அழகானப் பாடல்.

திரைப் படம்: சினிமா பைத்தியம்
இசை: சங்கர் கணேஷ் (விஸ்வனாதன்???)
நடிப்பு: ஜெய்ஷங்கர், கமல், ஜெயசித்ரா
இயக்கம்: முக்தா வீ ஸ்ரீனிவாசன்
குரல்: வாணி ஜெயராம்



http://www.divshare.com/download/19446054-05f




என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை

கண்ணாடி திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்து பாராமல் துயர் கொண்டது
கண்ணாடி திருமேனி அவன் தந்தது
நீ கண் வைத்து பாராமல் துயர் கொண்டது
பொன் மஞ்சள் பூந்தேகம் பொன் போன்றது
அது பொழிகின்றது உன்னை வலம் வந்தது
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை

இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே
இதமான இதழ் உண்டு படம் போடவே
தினம் இசை கூட்டும் இடை உண்டு ஒலி கேட்கவே

பனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
பனிகின்ற முகம் உண்டு ஒளி பார்க்கவே
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி
நீ கதை நாயகன் மங்கை கதை நாயகி

என் உள்ளம் அழகான வெள்ளித் திரை
அதில் உன் வண்ணமே பொன்னோவியம்
நிழல் ஆடும் படம் என்றும் நீ அல்லவா
என் உள்ளம் அழகான வெள்ளித் திரை

புதன், 2 மே, 2012

நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை


ஒரு அரிய S P Bயின் ஆரம்ப காலக் குரலில் நல்லதொரு பாடல்

திரைப் படம்: நான்கு சுவர்கள் (1971)
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: S P B, P சுசீலா
இயக்கம்: K பாலசந்தர்
நடிப்பு: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ



http://www.divshare.com/download/15725591-de8




நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
வின் மீனால் பூவொன்று சீர்க்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

காமதேனு வந்து
கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை
அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம்
தெய்வ வீணை நாதம்
கேட்கும்போது மெல்ல
கிள்ள வேண்டும் கன்னம்

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
லா லா லா லா ஆ ஆ ஆ

தேவ மாதர் கூட்டம்
காம தேவன் ஆட்டம்
ஆடும்போது நாமும்
ஆடிப் பார்க்க வேண்டும்
ஆகாய கங்கை
அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும்
ஒளிந்து பார்க்க வேண்டும்

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
வின் மீனால் பூவொன்று சீர்க்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும் ஒன்றென்ன நூறாய்

நல்லதொரு இளமை பாடல்.


அம்மன் அருள் (1973)
பாடியவர்கள்: S P B, P சுசீலா,
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: பட்டு
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி


ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான் தானே

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

பட்டுத் தளிர் கொடியில் பச்சை பசும் கிளிகள்
தொட்டு கொண்டு பேசும் சிந்து
புன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
ஓடை நீரில் வாளை மீன்கள்
ஜாடையில் சொல்லும் நாடகம் என்னென்ன
ஓடும் தென்றல் பூவை பார்த்து
கூறும் கதைகள் என்னென்ன

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

உன்னைக் கண்டு எனக்கு என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா
இன்னும் என்ன மயக்கம் நெஞ்சில் உள்ள வரைக்கும்
அள்ளி அள்ளி எடுப்போம் ஒண்ணா
நாலில் ஒன்று நாணம் என்று
பெண் மனம் கொஞ்சம் அஞ்சுவதென்னென்ன
அச்சம் என்ன ஆசை கொண்டு
துள்ளிடும் உள்ளம் பூப்பந்து..

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹ்
ல ல ல ல

வியாழன், 19 ஏப்ரல், 2012

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

ஒரு அழகான பாடல். அப்போதைய கால கட்டத்தில் அரசியல் அர்த்தமுள்ள பாடலும் கூட. கவிஞர் சரியாக இந்த காதல் பாடலை பயன்படுத்திக் கொண்டார் என்பார்கள்.


திரைப் படம்: பட்டணத்தில் பூதம் (1967)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: R கோவர்தனம் (நன்றி திரு நாகராஜன்)
நடிப்பு: ஜெய்ஷங்கர், K R விஜயா



http://www.divshare.com/download/15140852-089




ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை

பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே

நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி

ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ

காலம் மாறினால் காதலும் மாறுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ

மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை

இந்த சிவகாமி மகனுடன்
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...

ஆ......ஆ......ஆ ஆ ஆ ஆ

அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....

வியாழன், 22 மார்ச், 2012

இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம்


மிக மென்மையான சாதாரணமான இசை கருவிகளுடன் இசையும் அழகான குரல்களும் அலங்கரிக்கும் அபூர்வமாகிப் போன இனிமைப் பாடல்.

திரைப் படம்: வைரம் (1974)
இசை: T R பாப்பா
குரல்கள்: S P B, ஜெயலலிதா
இயக்கம்: T R ராமண்ணா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெயலலிதா, ஜெய்ஷங்கர்





http://www.divshare.com/download/17016096-578



http://www.divshare.com/download/17016174-ca9

இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா
பொங்குது நாணம் பார்த்தது போதும்

ஹோ ஹோ ஹோ பார்வைக்கு யோகம்
மங்கல மேளம் குங்கும கோலம் மணவரை மகிமை
ஹா ஹா ஹா அதுவரை பொறுமை
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்

திரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்
அதில் ஓடும் ஜாடையிலே போதையும் பார்த்தேன்
சிரிப்பால் என்னை மாணிக்க பதுமை அழைத்தது கண்டேன்
எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பது கண்டேன்
இன்றே நான் பார்க்கவோ இல்லை நாள் பார்க்கவா
ஹா அவசரம் என்ன
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்

இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே
அதை காமன் வேண்டும் என்றான் அவனிடம் தந்தேன்
கடை கண் வீசும் பனிமொழியாகும் பால் அபிஷேகம்
இடை எனும் பதுமை நடை எனும் தேரில் ஊர்வல கோலம்
மாலை பொன் மாலையா இல்லை பூ மாலையா
ஆ ஆ ஆ ஆ ஆ
கோவிலில் பார்ப்போம்
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
ஓ ஓ ஓ
ஏங்குது மோகம்
ஆ ஆ ஆ
பாடுது ராகம்
ல ல ல
ஏங்குது மோகம்
ம் ம் ம்
பாடுது ராகம்