பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 2 டிசம்பர், 2016

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா


வாழைத் தோட்டம் பூத்தது போல் கால்கள் இரண்டு
அதை வட்டம் போட்டு வருவதென்ன கண்களிரண்டு
நல்ல பாலும் தேனும் பெண் வடிவில் ஒன்று திரண்டு
உன்னைப் பருகச்சொல்லி உருகியதோ அருகினில் வந்து

அஹா என்ன  ஒரு  கவிதை..? இது  போல  வரிகள்  கொண்ட பாடல்களை  காலம் பூராவும் கேட்டுக் கொண்டிருக்கலாமே.. மற்ற  வரிகளும் சோடை  போகவில்லை. பாடல்  வரிகளுக்கு ஏற்ற இசையும், பாடியவர்களின்  அருமைக் குரலும் ஆஹா  ஆகாதானே.. கேட்டு மகிழ்வோம்..


திரைப்படம்: பழனி (1965)
இசை: M S விஸ்வநாதன் - T K ராமமூர்த்தி
பாடியவர்கள்: P.சுசீலா, T M.சௌந்தரராஜன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, முத்துராமன், தேவிகா
இயக்கம்: பீம்சிங்க்

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா

கன்னத்துக்குள்ளே கனிந்திருப்பது ஆயிரம் கண்ணே
கன்னத்துக்குள்ளே கனிந்திருப்பது ஆயிரம் கண்ணே
கண்ணால் அதைக்கண்டால் மட்டும் சுகமில்லை கண்ணே
சுகமில்லை கண்ணே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணே கண்ணே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே

அல்லிப்பூவைப் போலிருக்கும் அழகிய மேனி
நான் அங்கு வந்து தேன் எடுத்துப்பாடிடும் தேனி
அல்லிப்பூவைப் போலிருக்கும் அழகிய மேனி

நான் அங்கு வந்து தேன் எடுத்துப்பாடிடும் தேனி
இங்கு போதை கொண்டு ஜாடை காட்டும் மலையினில் ஏறி
நான் பொய்கை மீது தாவிடுவேன் உன் பெயர் கூறி

அஹாஹா அஹாஹா ஆ  ஆ  அஹாஹா....

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே

வாழைத் தோட்டம் பூத்தது போல் கால்கள் இரண்டு
அதை வட்டம் போட்டு வருவதென்ன கண்களிரண்டு
நல்ல பாலும் தேனும் பெண் வடிவில் ஒன்று திரண்டு
உன்னைப் பருகச்சொல்லி உருகியதோ அருகினில் வந்து

அஹாஹா அஹாஹா ஆ  ஆ  அஹாஹா....

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா

மெல்ல மெல்ல கண்ணை மூடித் திறந்திட வேண்டும்
கதை சொல்ல சொல்ல இதழிரண்டும் சிவந்திட வேண்டும்

சொல்லும் போது பெண்ணைக் கொஞ்ஜம் கவனிக்க வேண்டும்
என்னைத் தோழி பார்த்து சிரித்திடாமல் அருள் செய்ய வேண்டும்

அஹாஹா அஹாஹா ஆ  ஆ  அஹாஹா....
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா கண்ணா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணே

ஞாயிறு, 27 நவம்பர், 2016

எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா


திருமதி சுசீலாம்மா  பாடினால்  விமர்சிக்க இடமே இல்லை. அவ்வளவு
பாடல்களும்  உயிரை  உருக்கும்  விதமாக  இனிமையாக  பாடி இருப்பார். இந்த பாடலும் அதற்கு விதிவிலக்கில்லை. எந்த  விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல், நடிப்பவர் பாடுவது போல  பாடும்  சிறப்பு  அவருக்கு மட்டுமே  சொந்தம்.

திரைப்படம்: பூவும் பொட்டும் (1968)
இசை: R. கோவர்த்தன்
நடிப்பு: முத்துராமன், A V M ராஜன், பாரதி, ஜோதி லக்ஷ்மி
பாடிய குரல்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: தாதா மிராஸி



Upload Music - Share Audio -






எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
பொன்னை எடுத்து மாலை தொடுத்து
பூவும் பொட்டும் சூடி என்னை அள்ளி அணைத்து
கண்ணன் வழங்கும் இந்த உறவு
தென்றல் போல வானம் போல என்றும் வளர
பள்ளியறையில் மெல்ல நடந்து
கண்ணன் வரும் நாள் என்று வருமோ
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா

ராதை மடியில் கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
ராதை மடியில் கண்ணன் இருந்தான்
கண்ணன் வேறு பெண்ணை நெஞ்சில் எண்ணியிருந்தான்
சீதை மடியில் ராமன் இருந்தான்
ராமன் வேறு பெண்ணை நெஞ்சில் காண மறந்தான்
கண்ணன் என்பது மோக வடிவம்
ராமன் என்பது காதல் வடிவம்

எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
எண்ணம்போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா



சனி, 26 நவம்பர், 2016

ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி

இனிமையான பாடல். டி எம் எஸ் அவர்களின் குரல் ஜெயஷங்கர் பாடுவது போலவே அமைந்திருக்கும். காதைக் கிழிக்காத இனிய பின்னணி இசை.

திரைப்படம்: மகனே நீ வாழ்க (1969)

பாடியவர்கள்: டி எம் எஸ், P. சுசீலா

இசை: M. S விஸ்வநாதன்

இயக்கம்: M. கிருஷ்ணன்

நடிப்பு: ஜெயஷங்கர், லக்ஷ்மி.

பாடல்: தெரியவில்லை



Free Music - Podcast Hosting -






ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து

கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
வொத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான்
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்

அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில்

வெள்ளி, 18 நவம்பர், 2016

நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு.. Naloru medai pozhuthoru




திரைப்படம்: ஆசை முகம் (1965)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு

கணீர் என்ற  குரலில் தெளிவான  ஆர்பாட்டம் இல்லாத பாடல். கருத்து மிக்க  பாடல். இன்று அல்ல  எந்த  காலகட்டத்து பொருத்தமான  பாடல்.









நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன் பேர் உள்ளமல்ல
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன் உலகத்தில் கோழைகள் தலைவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
பிறந்தால் யாருக்கு லாபம்?
பிறந்தால் யாருக்கு லாபம்?
பகையில் துணையாய் பசியில் உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம்
இருந்தால் ஊருக்கு லாபம்
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
கூரைகளெல்லாம் கூட வளர்ந்தால் கோபுரமாவதில்லை
கோபுரமாவதில்லை
குருவிகளெலாம் உயரப் பறந்தால் பருந்துகள் ஆவதில்லை
பருந்துகள் ஆவதில்லை
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு

அவன் பேர் மனிதனல்ல

திங்கள், 24 அக்டோபர், 2016

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது.... Unnai thotta kaatru vandhu


SPBயின்  ஆரம்ப  கால  பாடல்களில்  இதுவும்  ஒன்று. இதிலும் அவரை ஹம்மிங்  மட்டுமே  பண்ண  வைத்திருக்கிறார்  இசையமைப்பாளர். கூட சுசீலாம்மாவின்  இனிமையான  மென்மை குரலில்  கவிதையை  இசைக்க வைத்திருக்கிறார். அருமை. கேட்க  கேட்க  திகட்டாத  பாடல்.

படம்: நவக்கிரகம் (1970)
இசை: V. குமார்
நடிப்பு: சிவக்குமார், லக்ஷ்மி
குரல்கள்:  SPB, P. சுசீலா
பாடல்: கவிஞர் வாலி



Upload Music - Audio Hosting -








ஆஹா ஆஹா ஆ ஆ
ஹும்ம்ம் ஹும்ம்ம்ம்
ஹா ஹா ஹா ஆ ஆ ஆ

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது
உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது

அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது
உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது

உன் பாதம் தொட்ட அலைகளை என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலமிட்டது

ஹஹா ஒஹோ ஆ ஹா

உன் பாதம் தொட்ட அலைகளை என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலமிட்டது

இந்த நேரம் பார்த்து நானம் வந்து கோலமிட்டது
கொஞ்ச நாள் வரையில் பொருத்திருக்க ஆணையிட்டது

ஹஹா ஒஹோ ம்ம்ம்ம் லலாஆ

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று கேட்டுக்கொண்டது

மழை தூரல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது

ஹ ஹா ஆ ஆ.. ஓ ஓ..ஹோ  ஹோ   .ஹோ  ஹோ. ஆஆஆ

மழை தூரல் போட்டு சாரல் வந்து உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது என்னை நனைத்தது
அது துளித்துளியாய் எனது தோளில் மீது இடம் பிடித்தது
இந்த இயற்கையெல்லாம் இருவரையும் இணைத்து பார்க்குது
அதுவே போதும் என்ற பெண்மை இன்று கேட்டுக்கொண்டது
வரலாம் தொடலாம் மணநாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது

உன்னை தொட்ட காற்று வந்து என்னைத்தொட்டது.

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா


நீண்ட நாட்களுக்கு பிறகு, முக நூல் நண்பர்கள் சிலரின் விருப்பமாக இன்று இந்த பாடலை எனது பிலாகில் பதிவிடுகிறேன்.
திரைப்படம்: நீ பாதி நான் பாதி (1991)
 நடிப்பு: ரகுமான், கெளதமி
இசை: மரகதமணி
இயக்கம்: வசந்த்

இந்த பாடல் கருத்தும், பாடல் வரிகளும் முழுக்க கொடுத்து உதவியவர்கள்... myspbblogspot.in.
எனது  நன்றிகள்  அவர்களுக்கு. கேட்க்காமல்  கையாண்டதுக்கு மன்னிக்கணும்.. கோவை ரவி சார்..


சேற்றில் முளைத்த (யப்பாடி... இப்போதுதான் தமிழில் எழுதும் திருப்தி கிடைக்கிறது!) செந்தாமரை போன்று ஒரு அழகான பாடல். பாடலின் விசேஷமே பாடல் என்று எந்த வரிகளுமில்லாததுதான்!.
ஸ்வரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு "நிவேதா" என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டு ஒரு பாடல் என்று சொன்னால் நம்புவதற்கு வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். கேட்பதற்கு - சான்ஸே இல்லை :) 

இம்மாதிரிப் பாடல்களைக் கேட்கவைக்க வேண்டுமென்றால் குரலில் தேனொழுக வேண்டும். "பிடி பாலுவை" என்று பிடித்துக்கொண்டு வந்து மரகதமணி பாட வைத்திருப்பார் போல. மனுஷர் 'பாட வேண்டுமே' என்றா பாடுவார்?. வெளுத்து வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். மரகதமணியும் பாலுவும் சேர்ந்து கொண்டு நமக்கு விளையாட்டு காட்டியிருக்கிறார்கள்.
ஆ... இன்னொரு முக்கிய ஆளும் விளையாட்டுக் காட்டியிருக்கிறார் - அவர் ஒளிப்பதிவாளர். ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு அதிகமான காட்சிகள் அமைக்கப்பட்ட பாடல் இதுவாகத்தானிருக்கும். சில நொடிகளே நீடிக்கும் ஏகப்பட்ட "கட் ஷாட்"கள். அழகான விளம்பரப் படம் போல வர்ணமயமாக பலவித உடைகளில் ரகுமானும் கெளதமியும் வருவார்கள் - இயல்பான செய்கைகளுடன். ஸ்வரங்களை அழகாகப் பாடியது போதாதென்று "நிவேதா"வைக் குழைத்துக் குழைத்து பாலு பாடியிருக்கிறார் பாருங்கள். இந்த மாதிரியெல்லாம் எனக்குப் பாடத் தெரிந்தால் வீட்டில் சப்பாத்திக் கட்டையெல்லாம் பறக்க விடுவேனா?


  Download Music - Embed Audio - ஸஸஸ


ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா
ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா
பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ ஸரிகமகரீக ஸாரிதாஸ பாதகா நிவேதா
ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நிவேதா
ஸரிகமா பதநிஸ ஸநிதப மகரிஸ ஸரிகமா பதநிஸ ஸநிதப மகரிஸ நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிதபா நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிவேதா நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிதபா நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநிநி நிவேதா
காரிஸ ரிரிரி ரிஸநி ததத (உ) தாபம ககக ஸரிகதபா ரிஸரிக ஸா காரிஸரிதப மபக நிவேதா
ஸஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நி வே தா
ஸாஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நி வே தா
பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ பபதநிஸ ரீகரீக ஸ ஸரிகமகரீக ஸாரிதாஸ பாதகா நிவேதா
ஸாஸஸ ஸநி தாஸநி பாநிதா மாதபாமகா நி வே தா.........

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்

மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்- ஆண்டாள் ஆடிப்பூரம்- கல்யாணப் பாடல்.
தானாகவே கால்களை தாளமிட சொல்லும் பாடல்.
மிகப் பெரிய பாடலின் ஒரு பகுதிதான் இது.
இதன் மூலம் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்தப் பாடல் அருமையாக பாடி வழங்கப் பட்டுள்ளது.


Listen Music Files - Audio Hosting - Malai Matrinal Kothai Malai ...












மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள் மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே
மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலடைந்து மதிலரங்கன் மாலை அவர்தன் மார்பிலே
மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்

மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மையலாய் தையலாள் மாமலர் கரத்தினால்
மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்

ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
 ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட
ரங்கராஜனை அன்பர் தங்கள் நேசனை
ஆசை கூறி பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
அன்புடன் இன்பமாய் ஆண்டாள் கரத்தினால்
பூ மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்
மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்
பூ மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்
சீதா மாலை சார்த்தினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்
துளசி மாலை சார்த்தினாள்
கோதை மாலை மாற்றினாள்
மாலை சார்த்தினாள் கோதை மாலை மாற்றினாள்
மண மாலை சார்த்தினாள்
கோதை மாலை மாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்
கோதை மாலை மாற்றினாள்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

சுசீலா அம்மாவின் குரல் இனிமையே இனிமை. அதுவும் இந்தப் பாடலில் மிக அழகாக குரல் கொடுத்திருக்கிறார். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் பாடல், இசை, நடிப்பு என எல்லாம் சிறப்பாக அமைந்த பாடல்.


திரைப்படம்: கந்தன் கருணை (1967)

நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி,

கே. ஆர். விஜயா, ஜெயலலிதா

பாடல்: கண்ணதாசன்

பாடியவர்: P.சுசீலா

இசையமைப்பாளர்: கே.வி.மகாதேவன் 


இயக்குநர்: ஏ.பி.நாகராஜன்  




Embed Music - Upload Audio Files - Solla Solla -Kandhan Karunai...







தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து
தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா
மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த
என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா

பிள்ளை பிராயத்திலே
பெரிய பெயர் பெற்றவனே
பிள்ளை பிராயத்திலே
பெரிய பெயர் பெற்றவனே
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரனென்று
மன மொழி கூறும்
முருகன் என்றால் அழகன் என்று
தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரனென்று
மன மொழி கூறும்
உயிரினங்கள் ஒன்றை ஒன்று
வாழ்த்திடும் போது
உயிரினங்கள் ஒன்றை ஒன்று
வாழ்த்திடும் போது
அதன் உள்ளிருந்து வாழ்த்துவது
உன் அருளன்றோ கந்தா உன் அருளன்றோ
முருகா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்
உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகள் எல்லாம்
உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறி
சந்திக்கும் போது
யுகங்கள் எல்லாம் மாறி மாறி
சந்திக்கும் போது
உன் முகமலரின் அழகு மட்டும்
முதுமை வராது
கந்தா முதுமை வராது
குமரா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா

புதன், 27 ஜனவரி, 2016

தெரியாதோ நோக்கு தெரியாதோ

பெண் சிவாஜி என்றழைக்கப் பட்ட, ஒரு பெண் சிங்கம் பாடி நடித்தது. என்னவொரு குரல், நடிப்பு.
இன்றைக்கும் பெண் நடிகைகள் அழகாகத்தான் இருக்கிறார்கள். தங்களை திரைப்படத்துறையில் நிலை நிறுத்த நடிப்பு கலையை விட தாராளமான முத்தக் கலையே அவர்களுக்கு கைக் கொடுக்கிறது. என்ன பண்ணுவது அவர்களுக்கு தெரிந்ததைதானே செய்ய முடியும்?



திரைப்படம்: சூர்ய காந்தி (1973)
பாடியவர்: மனோரமா
இசை: M S விஸ்வநாதன்
பாடல்: வாலி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
நடிப்பு: முத்துராமன், ஜெயலலிதா











தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

அவாளவா ஆத்துக்குள்ளே ஆயிரம் இருக்கும்
காதல் ஆரம்பிக்கும் நேரம் முதல் நாடகம் இருக்கும்
தானா சிரிப்பா அவ தனியா நடப்பா
ஏதோ நினைப்பா சும்மா பேசிண்டே இருப்பா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

பூஜைக்காக போறவம்போல் ஆம்பிளை போவான்
அங்கே பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா
சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
அந்த சாமியக்கண்டாளா அவ பூஜயக்கண்டாளா
வந்த மூர்த்தியக்கண்டாளா பையன் மூஞ்சியக்கண்டாளா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

படத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
சினிமாபடத்த பாத்து பட்ட பாடு நடத்திப்பாக்குறான்
அவ பழைய கால டூயட் பாட்ட பாடி பாக்கறா
மனமோகனா....
அங்கே வாடுதே கனவெனும் என் மனம்
தரையில் உருள
அவன் தலயைத் தடவுறான்
இவ தரையில் உருளரா
அவன் தலயைத் தடவுறான்
அறையில் நடப்பதை அவ அம்பலமாக்குறா

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ

தெரியாதோ நோக்கு தெரியாதோ
சின்ன பருவத்திலே காதலிப்பது
பைத்தியம்போல் தோணுமுன்னு தெரியாதோ


ஞாயிறு, 17 ஜனவரி, 2016

சங்கத்தில் பாடாத கவிதை உன்

விஜயகாந்தின் ஆரம்பக் கால படங்கள் கொஞ்சம் சூடாகவும்,  இருந்தன. பின்னர்தான் பப்ளிசிடிக்காக  ஆரம்பித்தார். பாடல்கள் இயற்கையாகவே கவனிக்கப்பட தக்க வகையில் இருந்தன. அதில் இதுவும் ஒன்று.

படம்: ஆட்டோ ராஜா (1982)
இசை: இளையராஜா
பாடல்: கங்கை அமரன் (புலமைபித்தன் ??)
பாடியவர்கள்: இளையராஜா, ஜானகி
இயக்கம்: K விஜயன்







சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது

கையின்றே செங்காந்தழ் மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்
பொய் கொஞ்சம்
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே

அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா அ
கொஞ்சம் தா ஆ
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்திலே

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே அனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு ஆ
மெய் தொட்டு ஆ
சாமத்திலே தூங்காத விழிகளில்
சந்தித்தேன் என்னென்ன மயக்கம்
தமிழ் சங்கத்திலே பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது


திங்கள், 11 ஜனவரி, 2016

பெண் மானே சங்கீதம் பாடி வா

இன்று வரை இந்தப் பாடலை பதிவேற்றிவிட்டேன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது கிணற்றுத்தவளையில் எங்கு தேடினாலும் இல்லை இல்லை என்கிறது.
இளையராஜ, SPB, ஜானகி கூட்டணியில் ஒரு மகா அருமையான பாடலை உங்களுக்கு வழங்குவதில் miss பண்ணப் பார்த் தேன்..



திரைப்படம்: நான் சிவப்பு மனிதன் (1985)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
நடிப்பு: ரஜினி, அம்பிகா
இயக்கம்: S A சந்திரசேகர்
பாடல்: வாலி (சரியா?)




Download Music - Play Audio - Pen Mane Sangeetham-naan siv...






ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா  ஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா  ஹா

பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா

தேன் மழை நீ ஹோய்
மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய்
நான் தினம் தேடவோ

கையருகில் பூமாலை
காதல் என்னும் கோபுரம்
மை விழியில் நீ தானே
வாழ்கிறாய் ஓர் புறம்

என் காதல் வானிலே
வெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை
கண்களின் விழாவில்

உன் மானே சங்கீதம்  பாடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
உன் மானே சங்கீதம்  பாடவா

லாலால்ல லாலா லாலால்ல லாலா
யாத்திரை ஏன் ஹோய்
ராத்திரி நேரமே
போர்களம் தான் ஹோய்
பூக்களின் தேகமே

தேக மழை நான் ஆகும்
தேவியை தேடுவேன்
ஈர வயல் நீயாக
மேனியை மூடுவேன்

கண்ணோரம் காவியம்
கை சேரும் போதிலே
வானமும் தேடியே
வாசலில் வாராதோ

பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம்
உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா


சனி, 9 ஜனவரி, 2016

அங்கே மாலை மயக்கம் யாருக்காக


இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை... இந்த இரண்டு வரிகளில் காதலை சொல்லிவிட்டார் கவிப்பேரரசு கண்ணதாசன். அந்தக் காலத்தில் BOXHIT படமும் பாடலும். இன்றைய தலைமுறைக்கு பிடிக்காதுதான்...



திரைப்படம்: ஊட்டி வரை உறவு (1967)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P சுசீலா, டி எம் எஸ்
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: சிவாஜி, K R விஜயா
















அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

கேட்டுக் கொள்வது காதலின் உரிமை
கேட்டால் தருவது காதலி கடமை
கேட்டுக் கொள்வது காதலின் உரிமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை

லாலா
ஆஹா

அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

வெள்ளி, 1 ஜனவரி, 2016

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....


திரைப்படம்: குடும்பத்தலைவன் (1962)

இசை: கே. வி. மகாதேவன்
நடிப்பு: எம். ஜி. ஆர் சரோஜா தேவி
இயக்கம்: எம். ஏ. திருமுகம் 
பாடியவர்:டி எம் எஸ்

பாடல்: கண்ணதாசன்


உலகில் வாழும் மிருகங்களுக்கும் பிற உயிரினங்களும் இயற்கையாகவே சில குணங்கள் அமைகின்றன. புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு இயல்பாகவே சினத்துடன் சீறும் குணமுள்ளது. யானை அனைத்து விலங்குகளிலும் அதிக பலம் கொண்டதாக விளங்கினாலும் அது பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிறது. புதிய நபர்களையோ வேறு நாய்களையோ கண்டால் குரைக்கும் குணம் எல்லா நாய்களுக்கும் உண்டு. கூடி வாழும் இயல்பு காக்கைகளிடம் அமைந்துள்ளது.  இவ்வாறாக அனைத்து உயிரினங்களுக்கும் பிரத்தியேகமான குணங்களைப் படைத்த இறைவன் மனிதர்களுக்கு மட்டும் மாறுபட்ட குணங்களைக் கொடுத்தது ஏனோ?


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்

என்றாள் ஔவைப் பிராட்டி. இங்கே குலம் என்பது ஒருவர் பிறந்து வளரும் சூழ்நிலையைக் குறிப்பதாகும். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியையோ சேர்ந்தவர் என்று எடுத்துக் கொள்வது தவறு. ஒருவன் இளம் வயது முதலே கல்வியிலும் தர்ம நெறிகளிலும் சிறந்து விளங்கும் நல்லோரின் சேர்க்கையைப் பெற்று வளர்வானாகில் அவன் நல்ல குணங்களையே பெறுதலும், தீய குணங்களும் தீய பழக்க வழக்கங்களும் நிறைந்தவருடன் பழகும் சூழ்நிலையில் வளர்கையில் தீய குணங்களைப் பெறுதலும் இயல்பு.
இயல்பாகவே அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, பொய் நீக்கி உண்மையே உரைத்து வாழும் உத்தமர்கள் என்றும் தீய வழியில் செல்வதில்லை, எத்தகைய துன்பங்கள் நேரிட்டாலும் தீய குணங்களைப் பெறுவதுமில்லை.
இயல்பாகவே காமம், குரோதம், கோபம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் முதலிய தீய குணங்களை வளர்த்துக்கொண்ட மனிதர்கள் பொதுவாகத் தம் வாழ்நாளில் என்றும் திருந்துவதில்லை. அவர்களது தீய குணத்தாலும், தீய செயல்களாலும் விளைந்த தீமைகள் அவர்கள் இறந்து அவர்களது உடல்களைக் கட்டையில் வைத்து எரிக்கையிலும் மறைவதில்லை.

www.thamizhisai.com







மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

ஓஹோஹோஹோஹொஹொஹோ
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்