பின்பற்றுபவர்கள்

சரோஜாதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரோஜாதேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 செப்டம்பர், 2012

தனிமையிலே..தனிமையிலே இனிமை காண முடியுமா

சில பாடல்களில் திருமதி சுசீலா அம்மா குரலில் தேனொழுகும். அந்தவகையில் இது ஒன்று. இசையின் இனிமையோடு போட்டி போட்டுக் கொண்டு பாடும் குரல்கள். இணைந்து வரும் சோகப் பாடலும் ஒரு இனிமைதான்.


திரைப் படம்: ஆடிப் பெருக்கு (1962)
இசை:  A M ராஜா
நடிப்பு: ஜெமினி, சரோஜா தேவி
இயக்கம்: K சங்கர்
பாடல்: கண்ணதாசன்




தனிமையிலே தனிமையிலே

இனிமை காண முடியுமா

தனிமையிலே இனிமை காண முடியுமா

நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா

தனிமையிலே தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா

நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதை சொல்லி சொல்லி திரிவதனால் துணை வருமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா

தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலனும்
இந்த அவணியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்

தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்

மிக லாவகமாகவும் எளிமையாகவும் இசையமைத்து சிறப்பாக பாடி இருக்கிறார்கள்.


திரைப் படம்: மாலதி (1970)
பாடியவர்கள்: S P B, P சுசீலா
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: ஜெமினி, சரோஜாதேவி

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்
அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்

உந்தன் கையில் விழுந்தேனோ கன்னிக் கனியே - இல்லைக்
கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே
யாரும் சொல்லித் திரியாத இன்பக் கலையே - அதை
அள்ளிக் கொள்ள வந்தேன் தன்னந்தனியே
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா
சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்..

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்

என்னை கட்டி வைத்த விலங்கோ கண்கள் இரண்டும் - அங்கு
வெட்டி வைத்த கரும்போ கன்னம் இரண்டும்
உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னை கொடுத்தேன் - அங்கு
காதல் எனும் அமுதை அள்ளிக் குடித்தேன்
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா
சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்..

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...