பின்பற்றுபவர்கள்

P B S லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
P B S லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஜனவரி, 2013

பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம்

இனிமையான குரல் மற்றும் இசையில் புரட்சி தலைவரின் ஒரு நல்ல பாடல்.

திரைப் படம்: பாசம் (1962)
பாடியவர்கள்: P சுசீலா, P B S
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: T R ராமண்ணா
நடிப்பு:  எம் ஜி யார், சரோஜா தேவி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி 



Upload Music - Upload Audio Files -








பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


கண்ணம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னும் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா..

கண்ணம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னும் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா..

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

பூ வண்ண பாடம் சொல்ல எண்ணமில்லையா..


பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..


மஞ்சள் வண்ண வெயில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும்போது ஆசையில்லையா..

மஞ்சள் வண்ண வெயில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும்போது ஆசையில்லையா..

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

வா என்று அள்ளி கொண்ட மங்கையில்லையா..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை பட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா..


நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

ஊர்வலம் போய் வர ஆசையில்லையா..


கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்..


பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்..

சனி, 16 ஜூன், 2012

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசை கிளியே அழகிய ராணி


M S விஸ்வனாதன் T K ராமமூர்த்திக்கு  அமைந்த பல சிறந்த பாடல்களில் இந்தப் பாடல் தனி இடம் எடுத்துக்  கொண்டது. எப்படி இத்தனை நாட்கள் இந்த பாடலை தரம் ஏற்றாமல் விட்டேன் என்பதில் எனக்கே ஆச்சர்யம்தான். மிக அருமையான பாடல்.

திரை படம்: வீர திருமகன் (1962)
குரல்கள்: P B S, P சுசீலா
நடிப்பு: C L ஆனந்தன், சச்சு
இயக்கம்: A C திருலோகசந்தர்
பாடல்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/18380764-21f





ல ல லல லா ல ல ல லல ல ல ல
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா ஹோய்

வருவதும் சரி தானா

உறவும் முறை தானா



வாராய் அருகே மன்னவன் நீயே

காதல் சமமன்றோ ஹோய்

பேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ ஹோய்

உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ



வானத்தின் மீதே பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மேலே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலரன்றோ


ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலரன்றோ



மன்னவர் நாடும் மணிமுடியும்

மாளிகை வாழ்வும் தோழியரும்

பஞ்சனை சுகமும் பால் பழமும்

படையும் குடையும் சேவகரும்

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே


ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோ



ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா ஹோய்

வருவதும் சரி தானா

உறவும் முறை தானா

பாடும் பறவைக் கூட்டங்களே

பச்சை ஆடைத் தோட்டங்களே

விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஓர் வழி கண்டோம் ஒரு மனம் ஆனோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

ஓர் வழி கண்டோம் ஒரு மனம் ஆனோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

ரோஜா மலரே ராஜகுமாரி

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

உண்மை இதுவன்றோ ஹோய்

உலகின் முறை அன்றோ

என்றும் நிலை அன்றோ


ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹாஹ்ஹா
ஹா ஹா ஹா ஹாஹா ஹாஹாஹா

சனி, 9 ஜூன், 2012

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்


இனிமையான S ஜானகி அம்மாவின் குரலில் இது தணிக்கையில் வெட்டுபடாத அசல் பாடல்.

திரைப் படம் : திருவிளையாடல்
குரல்கள்:P B S, S.ஜானகி
கவிதை: கண்ணதாசன்
இசை: K V மகாதேவன்
இயக்கம்: A P நாகராஜன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி, முத்துராமன்



http://www.divshare.com/download/18232190-7b6




பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
இந்த பாண்டியனார் பைங்கிளியை தீண்டிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

கார் குழலை நீராட்டி கண்ணிரண்டை தாலாட்டி
கார் குழலை நீராட்டி கண்ணிரண்டை தாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல்
வண்ண தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல்
போக வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

வான் பறக்கும் கொடியினிலே
மீன் பறக்கும் மதுரையிலே
வான் பறக்கும் கொடியினிலே
மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்யும் தளிர் மணி தென்றல்

அது வான் திறந்த போது வந்த வாலிப தென்றல்
வான் திறந்த போது வந்த வாலிப தென்றல்

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்

கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும்
கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும்
தன்னுடலைக் காட்டாத தந்திர தென்றல்
ஆளும் தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல்
தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல்

பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்