பின்பற்றுபவர்கள்

சரோஜா தேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சரோஜா தேவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

யாரது யாரது தங்கமா... பேரெது பேரெது வைரமா


நல்ல கவித்துவமான பாடல். மேற்கத்திய இசையை தேவையான இடத்தில் புகுத்தி இனிமையான குரல்களைக் கொண்டு பாடவைத்து இனிமைக்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள்.

திரைப் படம்: என் கடமை (1964)
நடிப்பு: எம் ஜி ஆர், சரோஜா தேவி
இயக்கம்: எம் நடேசன்
இசை:  M S விஸ்வனாதன், T K ராம மூர்த்தி
பாடல்: இந்த படத்தின் எல்லா பாடல்களும் கண்ணதாசனால் எழுதப் பட்டவை. இதுவும் அவராகத் தான் இருக்கனும். திரு நாகராஜன் தெளிவுபடுத்தவேண்டும்.

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MjI4NV9pc2o0cl81MGMy/yaarathu%20yaarathu.mp3







யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரெது சொர்கமா
ஊறிடும் தேன் அது வெட்கமா

யாரது யாரது சிங்கமா
ம்
பேரெது பேரெது செல்வமா
ஆஹா
ஊரெது ஊரெது வீரமா
ஊறிடும் தேன் அதன் சாரமா

யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா

1 2 3 1 2 3
ல ல லம்பம் ல ல லம்பம்
ல ல லம்பம் ல ல லம்பம்

ல ல லம்பம் ல ல லம்பம்
ல ல லம்பம் ல ல லம்பம்


கல்லூறும் மலரென்ன பெண்ணானதோ
கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ

கல்லூறும் மலரென்ன பெண்ணானதோ
கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ

தள்ளாடி தள்ளாடி நடை போடுதோ
தனியாத சுகம் என்னும் தடை போடுதோ

ஆஹா ஓஹோ
ஆஹா ஓஹோ


யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா
ஊரெது ஊரெது சொர்கமா
ஊறிடும் தேன் அதன் சாரமா
யாரது யாரது தங்கமா
123 123

முதிராத கனியென்ன முகமானதோ
முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
முதிராத கனியென்ன முகமானதோ
முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
சிதராத முத்தென்ன நகையானதோ
சிங்கார ரசம் எந்தன் துணையானதோ

யாரது யாரது தங்கமா

அனைத்தாலும் அனையாத தீபம் என்ன
அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன
மறைத்தாலும் மறையாத மாயம் என்ன
மழைப்போல பொழிகின்ற இன்பம் என்ன
ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்
அடங்காது அடங்காது காதல் உள்ளம்

தீராது தீராது சேரும் இன்பம்

தெளியாது தெளியாது இருவர் உள்ளம்

யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா
யாரது யாரது தங்கமா

ஞாயிறு, 24 ஜூன், 2012

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்


இந்தப் பாடலை பற்றிய விளக்கம் ஏதும் தேவை இல்லை என் நினைக்கிறேன். எவர் கிரீன் (Ever Green) பாடல் என்பார்கள். படகாட்சியாக இரண்டு வகை பாடல்களை இணைத்துள்ளேன். கேட்டு பார்த்து மகிழுங்கள்.

திரைப் படம்: புதிய பறவை (1964)
இயக்கம்: தாதா மிராஸி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, சரோஜா தேவி, சௌகார் ஜானகி
பாடல்: கண்ணதாசன்



http://www.divshare.com/download/18405161-910

பாடல் 1



பாடல் 2



உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

என்ன பாட தோன்றும்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை

தாலாட்டு பாட தாயாகவில்லை

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

நிலவில்லா வானம் நீரில்லா மேகம்

பேசாத பெண்மை பாடாது உண்மை

கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்

பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

தனிமையில் காணம் சபையிலே மௌனம்

உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்

அன்பு தந்த நெஞ்சில் அனுபவம் இல்லை

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்

என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

வெள்ளி, 25 மே, 2012

பொன்னெழில் பூத்தது புதுவானில்


கொஞ்சம் கடினமான தமிழில் கவிதையாக பொழிந்திருக்கும் பாடல். கவிஞருக்கு பாட்டெழுதுவதில் துணையாக இருந்த  பஞ்சு அருணாசலம்
அவர்கள் எழுதிய முதல் பாடல் என்கிறார்கள். பாடலில் கவிதை மட்டுமில்லாமல் இசை, குரல்கள் எல்லாமே அருமை.

திரைப் படம்: கலங்கரை விளக்கம் (1965)
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: K சங்கர்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்கள்: T M S, P சுசீலா




http://www.divshare.com/download/14961649-8ce

சிவகாமீ! சிவகாமீ! சிவகாமீ!

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

சென்றது எங்கே சொல் சொல் சொல்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி  தூவும் நிலவாத்தினில்வே நில்



தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்

உன் பட்டு கைப்பட பாடுகிறேன்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி  தூவும்  நிலவே நில்



முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

கிண்ணம் நிரம்பிட செங்கனி சாருண்ண

முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே



பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா

உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

வந்தது இங்கே வா வா வா

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா



தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு

மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தாளென்று

சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா



என்னுடல் என்பது உன் உடல் என்றபின்

என்னிடம் கோபம் கொள்ளுவதோ

என்னிடம் கோபம் கொள்ளுவதோ

ஒன்றில் ஒன்றானப்பின் தன்னை தந்தானபின்

உன்னிடம் நானென்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா

உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

வந்தது இங்கே வா வா வா