பின்பற்றுபவர்கள்

எம் ஜி யார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம் ஜி யார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 டிசம்பர், 2012

மழை முத்து முத்துப் பந்தலிட்டு

பாடலாசிரியர் மாயவ நாதன்....இவர் குறைந்தளவே பாடல்களை (மொத்தமாகவே 15 பாடல்கள் இருக்கலாம்) தமிழ் திரையில் எழுதி இருக்கிறார். ஆனாலும் அத்தனை பாடல்களும் சிறப்பானவை. தாலாட்டு என்ற படத்தில் மல்லிகை பூ போட்டு, தன் நிலவு தேனிறைக்க மற்றும் பூம்புகார் படத்தில் சில பாடல்கள் என சிறந்த வரிகளைக் கொண்ட பாடல்கள். தமிழ் திரை அரசியல் தெரியாதவர். ஆகையால் ஏழையாகவே இறந்து போனார். அவருடைய பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலை கேட்டு மகிழ்வோம்.
பாடலின் ஆரம்பத்தில், உண்மையிலேயே மழையில் நனைந்து குளிரில் நடுங்கும் ரெண்டு இளம் ஜோடிகளாக  பாடியவர்கள் உருவகப் படுத்தியுள்ளது பிரமாதம்.

திரைப்படம்: தேர்த்திருவிழா (1968)

இசை: கே.வி. மஹாதேவன்

பாடகர்கள்: டி.எம்செளந்தராஜன், பி.சுசீலா

இயற்றியவர்: மாயவநாதன்

நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா

இயக்கம்: எம் ஏ திருமுகம்








மழை முத்து முத்துப் பந்தலிட்டு

கிட்டக் கிட்டத் தள்ளுது

ஹோ

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது

ஹோ

என்னம்மா பண்ணுது

உள்ளதைச் சொல்லு

என்னமோ பண்ணுது

என்னத்தை சொல்ல

மழை முத்து முத்துப் பந்தலிட்டு

கிட்டக் கிட்டத் தள்ளுது

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது

கட்டுக் குலையாத அரும்பைத்

தொட்டு விளையாட

நெருங்கி ஒட்டி உறவாட

வந்தது காத்து

மொட்டுச் சிரிப்பாட இடையில்

பட்டு விரிப்பாட

அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி

குலுங்குது பூத்து

கட்டுக் குலையாத அரும்பைத்

தொட்டு விளையாட

நெருங்கி ஒட்டி உறவாட

வந்தது காத்து

மொட்டுச் சிரிப்பாட இடையில்

பட்டு விரிப்பாட

அழகைக் கொட்டி மகிழ்ந்தாடி

குலுங்குது பூத்து

பூ வாகிப்பிஞ் சாகிக்கா யாகிக்கனியாச்சி

அந்தக் கனியும் இப்போ கைக்கு வந்தாச்சி

மழை முத்து முத்துப் பந்தலிட்டு

கிட்டக் கிட்டத் தள்ளுது

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது

வெத்திலை பாக்கு வச்சி

விருந்து வீட்டுலே கூட்டிவச்சி

தாலிகட்டியே கைபுடிச்சி

கலந்திட வேண்டும்

குத்துவிளக்கு வச்சி

குலுங்கும் மெத்தையில் பூவிரிச்சி

இனிக்கும் வித்தை எல்லாம் படிச்சி

சுகம் பெறவேண்டும்

வெத்திலை பாக்கு வச்சி

விருந்து வீட்டுலே கூட்டிவச்சி

தாலிகட்டியே கைபுடிச்சி

கலந்திட வேண்டும்

குத்துவிளக்கு வச்சி

குலுங்கும் மெத்தையில் பூவிரிச்சி

இனிக்கும் வித்தை எல்லாம் படிச்சி

சுகம் பெறவேண்டும்

கா லாடமே லாடக் கையாடமுகம் சிவக்கும்

என் கைகளில் உன் பூ உடல் மிதக்கும்

மழை முத்து முத்துப்

பந்தலிட்டு கிட்டக் கிட்டத் தள்ளுது

நெஞ்சைத் தொட்டு தொட்டு

ஆசைகளைப் புட்டு புட்டு சொல்லுது


செவ்வாய், 20 நவம்பர், 2012

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்


நல்ல கருத்து செறிந்த பாடல். ஒரு நல்ல மனிதரை நினைத்து பாடும் அழகான தெளிவான குரல்.

படம்: அரச கட்டளை (1967)
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா, சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
இயக்கம்:  எம் ஜி சக்கரபாணி
குரல்: P சுசீலா
பாடல் வரிகள்: வாலி

http://www.mediafire.com/?5dovmy3m6q3na6b



என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்
விரிவான்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்
வள்ளல்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

வெள்ளி, 25 மே, 2012

பொன்னெழில் பூத்தது புதுவானில்


கொஞ்சம் கடினமான தமிழில் கவிதையாக பொழிந்திருக்கும் பாடல். கவிஞருக்கு பாட்டெழுதுவதில் துணையாக இருந்த  பஞ்சு அருணாசலம்
அவர்கள் எழுதிய முதல் பாடல் என்கிறார்கள். பாடலில் கவிதை மட்டுமில்லாமல் இசை, குரல்கள் எல்லாமே அருமை.

திரைப் படம்: கலங்கரை விளக்கம் (1965)
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: K சங்கர்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்கள்: T M S, P சுசீலா




http://www.divshare.com/download/14961649-8ce

சிவகாமீ! சிவகாமீ! சிவகாமீ!

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி தூவும் நிலவே நில்

என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

சென்றது எங்கே சொல் சொல் சொல்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி  தூவும் நிலவாத்தினில்வே நில்



தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்

உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்

உன் பட்டு கைப்பட பாடுகிறேன்

பொன்னெழில் பூத்தது புதுவானில்

வெண் பனி  தூவும்  நிலவே நில்



முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே

கிண்ணம் நிரம்பிட செங்கனி சாருண்ண

முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே



பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா

உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

வந்தது இங்கே வா வா வா

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா



தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு

வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு

வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு

மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தாளென்று

சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா



என்னுடல் என்பது உன் உடல் என்றபின்

என்னிடம் கோபம் கொள்ளுவதோ

என்னிடம் கோபம் கொள்ளுவதோ

ஒன்றில் ஒன்றானப்பின் தன்னை தந்தானபின்

உன்னிடம் நானென்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா

வெண்பனி தூவும் இறைவா வா

உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை

வந்தது இங்கே வா வா வா