பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை




மென்மையான இசை மற்றும் குரல்களில் இனிமை பாடல். பின்னனி பாடகி ராணி அவர்கள் பிற்காலத்தில் வாய்ப்பு குறைந்ததால் இஸ்லாமிய கீதங்கள் பாட ஆரம்பித்தார்.

திரைப் படம்: இந்திரா என் செல்வம் (1962)
நடிப்பு: பாலாஜி, சாவித்திரி
குரல்கள்: P B ஸ்ரீனிவாஸ்,K  ராணி
இசை: R ஸுதர்ஸனம்



http://www.divshare.com/download/16877862-078

ஆ ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஓ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை

தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீக காதல் வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீக காதல் வேளை

மலர் கோலம் மேவுமாஞ்சோலை
மகரந்தம் தூவும் வேளை
மலர் கோலம் மேவுமாஞ்சோலை
மகரந்தம் தூவும் வேளை

கலைக் காதல் வாழ்வின் கவி பாடுமே
ஆ ஆ ஆ ஆ ஆ
கலைக் காதல் வாழ்வின் கவி பாடுமே
மனம் கான வெள்ளம் நீராடுமே
மனம் கான வெள்ளம் நீராடுமே
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ம் ம் ம் ம் ம் ம் ம்

இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீக காதல் வேளை

அமர வாழ்வினில் காதல் தெய்வம்
ஆவதேன்
அன்பினால்
ஆவதேன்
அன்பினால்
அமுத வாழ்வில் மாறாத உறவே
ஆடி பாடுவோம் ஆனந்தம் பெறவே
அமுத வாழ்வில் மாறாத உறவே
ஆடி பாடுவோம் ஆனந்தம் பெறவே

இன்பம் கொண்டாடும் மாலை
இதுவே உல்லாச வேளை
தென்றல் வந்தாடும் மாலை
தெய்வீக காதல் வேளை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும் இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்


சுகமான குரலில் இனிமையான இசையில் இந்தப் பாடல்.

திரைப் படம்: தெய்வீக உறவு (1968)
பாடியவர்: P சுசீலா
இசை: கே.வி.மகாதேவன்
நடிப்பு: தேவிகா, ஜெய்ஷங்கர்
இயக்கம்: சத்யம்



http://www.divshare.com/download/16837645-208


ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்

மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்

வனக்குருவி போல வந்து வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கின்றேன்
வனக்குருவி போல வந்து வாழ்வில் இன்பம் சேர்த்தவளே
உனக்காக உழைப்பதிலே சிரிக்கின்றேன்
வாழையிலே நாரெடுத்து வளர் கொடியில் மலரெடுத்து
மாலை என்று பெயர் கொடுப்பார் உலகிலே
அந்த மகிமை தனை சொல்வதெந்த மொழியிலே

மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்

கோடி பெறும் கோபுரமே குறையாத தேன் குடமே
கனிக் குலையே உன்னழகை ரசிக்கின்றேன்
கோடி பெறும் கோபுரமே குறையாத தேன் குடமே
கனிக் குலையே உன்னழகை ரசிக்கின்றேன்
காலம் என்றும் துணையிருந்து கண்மணியே உனை வளர்க்க
தினமும் அந்த இறைவனிடம் கேட்கின்றேன்
நம் தெய்வீக உறவை எண்ணிக் களிக்கின்றேன்

மரம் பழுத்தால் பறவை எல்லாம் தேடி வரும்
இந்த மனம் திறந்தால் உறவு வெள்ளம் ஓடி வரும்
நான் நினைத்தேன் அன்னை என்று பேர் எடுத்தேன்
நீ நடப்பதற்கு நெஞ்சத்திலே பூ விரித்தேன்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

புன்னகையோ பூ மழையோ பொங்கி வரும் தாமரையோ

இந்த பாடல் காட்சியில் ஸ்ரீவித்யா என்ன அழகு? இனிமையான பாடல்.

திரைப் படம்: டெல்லி டு மெட்ராஸ் (1972)
இயக்கம்: I N மூர்த்தி
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஸ்ரீவித்யா
இசை: V குமார்
பாடியவர்கள்: T M S, P சுசீலா

















புன்னகையோ பூ மழையோ
பொங்கி வரும் தாமரையோ
மானினமோ நாடகமோ
மாதரசி யார் உறவோ

தென் பொதிகை சந்தனமோ
சிந்தி விழும் செந்தமிழோ
மங்கையரின் மாளிகையோ
மன்னவனின் மார்பகமோ

என்னை பந்தாடும் நடை அல்லவா
கன்னி பழமான இதழ் அல்லவா
வந்து விளையாட மனம் இல்லையா
இனி விடிகின்ற பொழுதில்லையா

நான் பெண்ணென்ற நினைவில்லையா
இது பேசாத உறவில்லையா
இங்கு விளையாட இடமில்லையா
பொழுது விடிந்தாலும் நமதில்லையா

நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா
முழு நிலவில்லையா தனி இடம் இல்லையா

தென் பொதிகை சந்தனமோ
சிந்தி விழும் செந்தமிழோ
மானினமோ நாடகமோ
மாதரசி யார் உறவோ

இது விரிகின்ற மலர் அல்லவா
மது வழிகின்ற குடமல்லவா
கையில் விழுகின்ற கனி அல்லவா
இன்னும் சரி என்று நான் சொல்லவா

உடல் கல்வாழை இலை அல்லவா
குழல் கடலோர அலை அல்லவா
காதல் பொல்லாத கலை அல்லவா
நாம் போராடும் களம் அல்லவா

நல்ல இரவில்லையா தென்றல் வரவில்லையா
முழு நிலவில்லையா தனி இடம் இல்லையா

புன்னகையோ பூ மழையோ
பொங்கி வரும் தாமரையோ
மங்கையரின் மாளிகையோ
மன்னவனின் மார்பகமோ
புன்னகையோ பூ மழையோ

புதன், 22 பிப்ரவரி, 2012

தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா


திருமதி சுசீலா என்ற கிளியும், உண்மைக் கிளி குரலில் சதன் அவர்களும் பாடிய இனிமையும் இளமையும் நிறைந்த பாடல்.

திரைப் படம்: சர்வர் சுந்தரம் (1964)
பாடியவர்கள்: P சுசீலா, சதன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமுர்த்தி
பாடல் வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: கே.ஆர்.விஜயா, முத்துராமன்
இயக்கம்: கிருஷ்ணன் பஞ்சு






தத்தை நெஞ்சம்
நெஞ்சம்
முத்தத்திலே
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
இல்லையா
முத்தம் அந்த
அந்த
தத்தை நெஞ்சில்
நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
இல்லையா

தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா

கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா
கத்தும் கடல் முத்துக்களால் பொட்டிட்டதா இல்லையா
பொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத் தொட்டிட்டதா இல்லையா

தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா

கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா
கொத்தும் கிளி கன்னங்களில் கோடிட்டதா இல்லையா
கோடிட்டதால் கோடி சுகம் நேரிட்டதா இல்லையா

தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா இல்லையா

அஹா ஓஹோ ஓஹோ ஓ அஹா ஹா  அஹா ஹா அஹா ஹா அஹா ஹா ஆ

கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா
கண் பட்டதும் கை பட்டதும் புண் பட்டதா இல்லையா
புண் பட்டதும் பெண்மை கொஞ்சம் பண் பட்டதா இல்லையா

தத்தை நெஞ்சம்
நெஞ்சம்
முத்தத்திலே
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
இல்லையா
முத்தம் அந்த
அந்த
தத்தை நெஞ்சில்
நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
இல்லையா

திங்கள், 20 பிப்ரவரி, 2012

அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம் நங்கை முகம் நவரச நிலவு

இதுவும் வழக்கமான S P Bயின் ஆரம்ப கால தேன் குரல் பாடல். பழம் பெரும் பாடகி L R ஈஸ்வரி அவர்களுக்கு ஈடு கொடுத்து பாடி இருக்கிறார்.

திரைப் படம்: வீட்டுக்கு வீடு
பாடியவர்கள்: S P B, L R ஈஸ்வரி
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி




லா லா லா லா
அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு
அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
நவரச நிலவு
அதிசய கனவு
நவரச நிலவு
அதிசய கனவு

பூவிரி சோலைகள் ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ
தேவியின் வெண்ணிற மேனியில்
விளையாடும் பொன் அழகு
மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள்
மயங்கி களிக்கும் அழகோ
காதலின் ஆனந்த போதையில்
உறவாடும் உன் அழகு
கற்பனை அற்புதம்
காதலே ஓவியம்
தொட்டதும் பட்டதும்
தோன்றுமே காவியம்
கற்பனை அற்புதம்
காதலே ஓவியம்
தொட்டதும் பட்டதும்
தோன்றுமே காவியம்

அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு

தேன் சுவையோ இல்லை நான் சுவையோ
எனத்தேடி அணைக்கும் அழகே
மைவிழி நாடகப் பார்வையில்
கதை நாளும் சொல்லிவிடு
பாலிலும் மெல்லிய பனியிலும் ஊறிய
பருவக் கால இசையே
பார்த்தது மட்டும் போதுமா
ஒரு பாடம் சொல்லிவிடு
வந்தது கொஞ்சமே
வருவதோ ஆயிரம்
ஒவ்வொரு நினைவிலும்
உலகமே நம்மிடம்

அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம்
நங்கை முகம் நவரச நிலவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய
உங்கள் முகம் அதிசய கனவு
ஹா நவரச நிலவு
ஹோ அதிசய கனவு

சனி, 18 பிப்ரவரி, 2012

நீ இன்றி நானோ நான் இன்றி நீயோ நிலவின்றி வானோ


நினைவில் இனிமையாக நின்ற பாடல் இது.

திரைப் படம்: மகரந்தம் (1981)
நடிப்பு: அருணா, ராதிகா, ஆண் நடிகர் யார் என்று தெரியவில்லை
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
இசை: ஷங்கர் கணேஷ்
குரல்கள்: S P B, P சுசீலா




http://www.divshare.com/download/16769644-cd0



http://www.divshare.com/download/16769629-25c


நீ இன்றி நானோ
நான் இன்றி நீயோ
நீ இன்றி நானோ
நான் இன்றி நீயோ
நிலவின்றி வானோ
இதை நினைவில் கொள்வாயோ

ஏன் இந்த கோபம்
இதில் என்ன லாபம்
ஏன் இந்த கோபம்
இதில் என்ன லாபம்
என் காதல் தீபம்
என்னாளும் நீயன்றோ

வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ
காதலோ கோடி
மலராம் அன்றோ
காட்சியின் சாட்சி
மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ

வாடாத மேனி
சூடான ராணி
வாடாத மேனி
சூடான ராணி
பாடாத தேனி
பெண் பாவை நீ அன்றோ

பாடாத ராகம்
போடாத தாளம்
பாடாத ராகம்
போடாத தாளம்
ஆடாத தீபம்
என் தெய்வம் நீ அன்றோ
வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ
காதலோ கோடி
மலராம் அன்றோ
காட்சியின் சாட்சி
மனம் தானன்றோ
வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ

விரும்பாத எண்ணம்
திரும்பாத வண்ணம்
விரும்பாத எண்ணம்
திரும்பாத வண்ணம்
அரும்பான முல்லை
குறுநகையும் சிந்தாதோ

அரும்பாக மின்னும்
குறும்பான எண்ணம்
அரும்பாக மின்னும்
குறும்பான எண்ணம்
கரும்பாகும் வண்ணம்
கண் பார்வை சொல்லாதோ

வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ

காதலோ கோடி
மலராம் அன்றோ

காட்சியின் சாட்சி
மனம் தானன்றோ

வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ
வானவில் ஏழு வண்ண
காட்சி அன்றோ

புதன், 15 பிப்ரவரி, 2012

தை மாத மேகம் அது தரையில் ஆடுது


ஒரு பாடல் என்பது எவ்வளவு தூரம் மனதை சாந்தப் படுத்த முடியும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு நல்ல உதாரணம். பாடலும் குரலும் இசையும் அற்புதம் என சொல்லலாம்.

திரைப் படம்: குழந்தைக்காக (1969,)
பாடியவர்: சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
நடிகை: பத்மினி, மேஜர் சுந்தரராஜன்




http://www.divshare.com/download/16741550-43e



http://www.divshare.com/download/16795352-958

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது
நிலவே பாடுது

முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாகும்
பூமாலை வெண்மேகமே

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது

இரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு
எல்லோர்க்கும் குல விளக்கு
இரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு
எல்லோர்க்கும் குல விளக்கு
உயரத்தில் இருந்தே உலகத்தைக் காக்கும்
கல்யாணத் திருவிளக்கு
அழுகின்ற குழந்தை காணும் கண் காட்சி
அம்மா வெண்ணிலவில் அரசாட்சி
குற்றம் புரிவோரை கண்டு கொள்ளும் சாட்சி
நல்லோர்கள் நெஞ்சில் உள்ள மனசாட்சி

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது


நிலவுக்கு தீமை நினைப்பவரில்லை
குழந்தைக்கு நினைப்பாரோ தீமை
குழந்தைக்கு நினைப்பாரோ
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்
என்பதை மறப்பாரோ


பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ
பாப்பாவைப் படைத்தவன் அவன் தானே
பாப்பாவைப் படைத்த கைகளினாலே
பால் போன்ற நிலவைப் படைத்தானே

முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாகும்
பூமாலை வெண்மேகமே

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது
நிலவே பாடுது
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

திங்கள், 13 பிப்ரவரி, 2012

அழகிய தென்னஞ்சோலை அமைதியுலாவும் மாலை


இந்த பாடலை நானும் சிறிய வயதில் கேட்டு ரசித்ததுண்டு. இனிமையான இசை மற்றும் குரல்கள்.

திரைப் படம்: தெய்வீக உறவு
பாடியவர்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், தேவிகா




http://www.divshare.com/download/16766070-88a




ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அழகிய தென்னஞ்சோலை
அமைதியுலாவும் மாலை
அழகிய தென்னஞ்சோலை
அமைதியுலாவும் மாலை
இளையவன் ஒருவன் வந்தான்
அங்கு இயற்கையில் எதையோ கண்டான்
தொடரும் தொடரும் இது
தொடர்க்கதை போல தொடரும்

குளிர்ந்தது தென்றல் காற்று
இசை தொடுத்தது தென்னங்கீற்று
குளிர்ந்தது தென்றல் காற்று
இசை தொடுத்தது தென்னங்கீற்று
எழுந்தது சலங்கையின் ஓசை
நெஞ்சை இழுத்தது ஏதோ ஆசை
தொடரும் தொடரும் இது
தொடர்க்கதை போல தொடரும்

ஆசையில் மலர்ந்தது நெஞ்சம்
அதில் அவசரம் இருந்தது கொஞ்சம்
ஆசையில் மலர்ந்தது நெஞ்சம்
அதில் அவசரம் இருந்தது கொஞ்சம்
ஓசை வரும் திசை பார்த்தான்
ஓசை வரும் திசை பார்த்தான்
அங்கு ஒருத்தியின் கனிமொழி கேட்டான்

தொடரும் தொடரும் இது
தொடர்க்கதை போல தொடரும்

தானே விழுந்ததனாலே அவன்
தழுவிக்கொண்டான் கைகளாலே
தானே விழுந்ததனாலே அவன்
தழுவிக்கொண்டான் கைகளாலே
மானே கனி இதழாலே
மானே கனி இதழாலே
முத்தம் வழங்கெனக் கேட்டான் மேலே
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் லலலல லால லலலா

இப்படியும் ஒரு பெண்ணா
அதில் இத்தனை மொழி சொல்லும் கண்ணா
இப்படியும் ஒரு பெண்ணா
அதில் இத்தனை மொழி சொல்லும் கண்ணா
கைப்பிடியில் அவள் கிடந்தாள்
கைப்பிடியில் அவள் கிடந்தாள்
இரு கன்னங்களில் மழை பொழிந்தாள்
லலலா லலலா லல லலலல லால லலலா

இரவினில் ரகசியம் கேட்டு
ஓர் இதயத்தில் இதயத்தைப் போட்டு
விடியும் வரை விளையாட்டு
அன்று முடியவில்லை அந்தப் பாட்டு

சனி, 11 பிப்ரவரி, 2012

சொல்லாமல் தெரிய வேண்டுமே சொல்லவும் தனிமை வேண்டுமே


நான் முன்பே சொன்னது போல் திருமதி S ஜானகி அம்மாவின் ஆரம்பகாலக் குரல் இப்போதைய குரலை விட மிக இனிமையானது. கேட்டு பாருங்கள் தெரியும்.

திரைப் படம்: விளையாட்டு பிள்ளை (1970)
பாடியவர்: S ஜானகி
பாடல்: கண்ணதாசன்
இசை: கே வி மகாதேவன்
இயக்கம்:A P  நாகராஜன்
நடிப்பு: சிவாஜி, பத்மினி, காஞ்சனா




http://www.divshare.com/download/16741515-135



http://www.divshare.com/download/16741607-d37

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே - யாரும்
காணாமல் சிரிக்க வேண்டுமே

சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
ஒரு முறை பார்த்ததில் உருவம் நின்றது
உள்ளம் முழுவதும் மயக்கம் வந்தது
மறு முறை காணவே மனதும் சென்றது
மறு முறை காணவே மனதும் சென்றது
மங்கையின் ஆசையை நாணம் வென்றது

சொல்லாமல் தெரிய வேண்டுமே

ஆனந்தம் இன்றுதான் ஆரம்பமானது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
ஆனந்தம் இன்றுதான் ஆரம்பமானது
அதற்கொரு காரணம் யாரிடம் கேட்பது
மனதில் இருப்பது மறைமுகமானது
மனதில் இருப்பது மறைமுகமானது
மௌனம் சம்மதம் மற்றென்ன சொல்வது

சொல்லாமல் தெரிய வேண்டுமே

தேடிய செல்வமும் கைகளில் கிடைத்தது
திருநாள் போலவே ஒரு நாள் மலர்ந்தது
பாடிய யாவையும் கவிதையில் படித்தது
பாவை ஒருத்தி எழுத்தினில் வடித்தது

சொல்லாமல் தெரிய வேண்டுமே
சொல்லவும் தனிமை வேண்டுமே
கண் ஜாடை புரிய வேண்டுமே - யாரும்
காணாமல் சிரிக்க வேண்டுமே

சொல்லாமல் தெரிய வேண்டுமே

வியாழன், 9 பிப்ரவரி, 2012

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே

நல்ல இனிய பாடல்.

திரைப் படம்: நீரும் நெருப்பும் (1971)

நடிப்பு: M G R, ஜெயலலிதா

இயக்கம்: P நீலகண்டன்

இசை: M S விஸ்வனாதன்

பாடியவர்கள்: S P B, P சுசீலா




http://www.divshare.com/download/16728986-754




ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ



மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ

என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ

மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ

என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ

பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ

இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ



மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ



ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு

பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு

தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு

பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு



அணைத்தாலும் அடங்காதோ அது

போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ..

அணைத்தாலும் அடங்காதோ அது

போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காதோ....விளங்காதோ



மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ



கண்மணி என் மனம் உன் வசம் வந்தது

உன் மந்திரப்புன்னகையோ ......

உன் மந்திரப்புன்னகையோ

கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது

நீ முத்தாடும் வித்தைகளோ

கை வண்ணம் என்னென்று சொல்லவோ

கட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ

கை வண்ணம் என்னென்று சொல்லவோ

கட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ

மெல்லவோ அள்ளவோ சொல்லவோ கிள்ளவோ

ஹஹஹா ஹஹஹா ஹஹஹா

ஹஹஹா ஹஹஹா ஹஹஹா



மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ

என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ

பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ

இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ

மாலை நேர தென்றல் என்ன பாடுதோ

என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

ஹஹஹா ஹஹஹா ஹஹஹா

ஹஹஹா ஹஹஹா ஹஹஹா



செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம் அவள் நாயகன் பாவம் பிள்ளை சிங்கார ராகம்


கணவன் மனைவியின் அன்னியோனியத்தை மிக அழகாக வர்ணிக்கும் பாடல். கவிஞர் திறமையாக இந்தப் பாடலில் இடம் பெறும் நடிகர்களின் பெயர்களையும் பாட்டில் இணைத்துள்ளார்.

திரைப் படம்: அவன் அவள் அது
நடிப்பு: சிவகுமார், லக்ஷ்மி
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்




http://www.divshare.com/download/16728813-f89



http://www.divshare.com/download/16728848-25e

இல்லம் சங்கீதம்
அதில் ராகம் சம்சாரம்
அவள் நாயகன் பாவம்
பிள்ளை சிங்கார ராகம்
இல்லம் சங்கீதம்
அதில் ராகம் சம்சாரம்
அவள் நாயகன் பாவம்
பிள்ளை சிங்கார ராகம்

எல்லாம் பெண்ணாலே என்று முன்னோர் சொன்னார்கள்
எல்லாம் பெண்ணாலே என்று முன்னோர் சொன்னார்கள்
அந்த பெண்மை அன்று பேதை அல்லவோ

பேதை என்றாலும் மங்கை மேதை என்றாலும்
அந்த பெண்மை என்றும் உண்மை அல்லவோ
ஏதோ உண்மை சொன்னேன் கோபம் வந்ததோ
கொஞ்சம் மாற்றிச் சொன்னேன் சொல்ல கூடாதோ

இல்லம் சங்கீதம்
அதில் ராகம் சம்சாரம்
அவள் நாயகன் பாவம்
பிள்ளை சிங்கார ராகம்

லக்ஷ்மி வந்தாளாம் வீட்டில் தீபம் வைத்தாளாம்
லக்ஷ்மி வந்தாளாம் வீட்டில் தீபம் வைத்தாளாம்
சின்ன பிள்ளை போல துள்ளி நின்றாளாம்

சிவனும் வந்தானாம் அங்கே குமரன் வந்தானாம்
எங்கள் இன்ப வாழ்வை காவல் கொண்டானாம்
கண்ணே பிள்ளை ஒன்று கையில் கொண்டுவா
கண்ணா கொள்ளை இன்பம் அள்ளிக் கொண்டுவா

பொன்னை தந்தாலும் கோடி பொருளை தந்தாலும்
இந்த காதல் தேவன் உள்ளம் போதுமே

என்னை தந்தேன் நான் என்றும் உன்னை தந்தாய் நீ
இந்த இன்பம் போதும் கால காலமே

நானும் ராமன் கண்ணில் சீதை அல்லவோ
வாழ்க்கை கீதை சொல்லும் பாதை அல்லவோ

இல்லம் சங்கீதம்
அதில் ராகம் சம்சாரம்
அவள் நாயகன் பாவம்
பிள்ளை சிங்கார ராகம்

திங்கள், 6 பிப்ரவரி, 2012

சிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான்


நல்லதொரு தமிழிலில் இளையராஜா இசையில் இதுவும் ஒரு அழகானப் பாடல்.

திரைப் படம்: நல்லதொரு குடும்பம்
குரல்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை: இளையராஜா
நடிப்பு: சிவாஜி, வாணிஸ்ரீ




http://www.divshare.com/download/16670526-4b2



http://www.divshare.com/download/16670617-686

சிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவை போல சூடினான்
சிந்து நதி கரை ஓரம்

சிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி பாடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்
சிந்து நதி கரை ஓரம்

மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
சொல்லி கொடுத்தேன் கதை கதை
அள்ளி கொடுத்தாள் அதை அதை
காதல் கண்ணம்மா

சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினான்
என்னை பூவைப் போல சூடினான்
சிந்து நதிக்கரை ஓரம்

தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்து கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வானவெளியில் இதம் இதம்
சோலை வெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா

சிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவை போல சூடினாள்
சிந்து நதி கரை ஓரம்

சனி, 4 பிப்ரவரி, 2012

தெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூ பூத்தது


தன் மழலைக்கு காத்திருக்கும் தம்பதியரின் இனிமையானப் பாடல். மிகச் சரியான இசையுடனும் சரியான வேகத்துடனும் இருக்கும் இந்தப் பாடலை அனுபவித்து கேட்கலாம்.

திரைப் படம்: புதிய ராகம் (1991)
நடிப்பு: ரஹ்மான், ஜெயசித்ரா
இசை: இளையராஜா
இயக்கம்: ஜெயசித்ரா
குரல்கள்: மனோ, ஜானகி
பாடல்: கங்கை அமரன்



http://www.divshare.com/download/16643712-330



தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூ பூத்தது
பூவொன்று சேயானது
பெண்ணொன்று தாயானது

ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே கை வந்து சேரும்
வேரென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்
தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூ பூத்தது

பிள்ளை இல்லாத வீடு
முல்லை இல்லாத காடு
தொட்டில் இல்லாத இல்லம்
தென்றல் இல்லாத மன்றம்
சின்ன பொன்வண்டு வண்ண கண் ரெண்டு
ஆகாய நீலம் காட்டும்
கன்னம் பூச்செண்டு கட்டிக் கற்கண்டு
செந்தூரக் கோலம் தீட்டும்
மார்போடு சேர்த்து முந்தானை மூடி
பாலூட்டும் தாயின் ஆனந்தம் கோடி
வேரென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்

பூவொன்று சேயானது
பெண்ணொன்று தாயானது
ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே கை வந்து சேரும்
வேரென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்
பூவொன்று சேயானது
பெண்ணொன்று தாயானது

அன்னை என்றான பின்பு
துன்பம் முன்னூறு நாட்கள்
பிள்ளை கை வந்தப் பின்பு
கண்ணில் சந்தோஷப் பூக்கள்
பிள்ளை செல்வங்கள் பேசும் தெய்வங்கள்
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
தாய்மை இல்லாத பெண்மை என்னாளும்
காணாது அன்பின் எல்லை
கை வீசி ஆடும் வைகாசி மேகம்
என் வீடு சேர நான் செய்த யோகம்
வேரென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்

தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூ பூத்தது
பூவொன்று சேயானது
பெண்ணொன்று தாயானது
ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம்
தாலாட்டத் தானே கை வந்து சேரும்
வேரென்ன வேண்டும்
ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம்
தெய்வங்கள் கண் பார்த்தது
தோட்டத்தில் பூ பூத்தது