பின்பற்றுபவர்கள்

S P B லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
S P B லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஜூன், 2012

பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு


இந்த படத்திற்கு இசை V குமார் அல்லது M S விஸ்வனாதன். யாரென்று தெரியவில்லை. ஆனால் இசையமைப்பு விதத்தை பார்த்தால் குமார் போலவே தெரிகிறது. நல்லதொரு பாடல்.

திரைப் படம்: கண்ணாமூச்சி (1978)
குரல்: S P B
நடிப்பு: சிவகுமார், லதா
இயக்கம்: R பட்டாபிராமன்




http://www.divshare.com/download/17927663-f6c




பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

இந்த பூமியின் இந்த தேவதை
அன்பு ராகம் நீயே தான்
எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம்
காதல் தீபம் நீயே தான்

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா
தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா

எனது கைவீணை ராகங்களே
என்னுயிரே உன் வார்த்தைகளே
பாடுவது என் மனது
ஆடுவது உன் மனது

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது
மாப்பிள்ளை ஊர்க்கோலப் பொன்னாள் எது
மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது
மாப்பிள்ளை ஊர்க்கோலப் பொன்னாள் எது
குங்குமச் சாந்து கோலமிட்டு
நீ வரும் காலம் நேரம் எது
வாழியவே ஓவியங்கள் ஏழை நெஞ்சின் காவியங்கள்

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

ஞாயிறு, 27 மே, 2012

அழகே உன் பெயர்த்தானோ அமுதே உன் மொழிதானோ


இறைவன் இருக்கின்றான் திரைப் படத்தில் ‘’எந்தன் தேவனின் பாடல் என்ன’’ பாடல் பிரபலமானது
போல் இந்தப் பாடல் ஆகவில்லை ஆனாலும் இனிமையான பாடல்.
S P B மற்றும் P சுசீலாவின் குரல்களில் இனிமை வழிந்தோடுகிறது.
 

திரைப் படம்: இறைவன் இருக்கின்றான்
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்: G S மணி
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: P சுசீலா, S P B   


அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
நடந்தால் சிந்து கவியோ
நடந்தால் சிந்து கவியோ
நீ அருந்தேன் தந்த சுவையோ

தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்
தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்
இதுதான் பெண்ணின் மனமோ
இதுதான் பெண்ணின் மனமோ
இது இயற்கை தந்த குணமோ
அழகே உன் பெயர்தானோ

பொன் பார்த்து மயங்கும் உன் மேனி அழகை
கண்டாலும் போதை தரும்
என் கையோடு குலுங்கும் சங்கீத வளையல்
சிங்காரம் பாடி வரும்

கம்பன் இன்று இருந்தால்
அவன் உன்னை அறிந்தால்
மனம் என்னன்ன பாட நினைக்கும்
அதை இன்றிங்கு பாட அழைக்கும்
தலைவா என்றது நெஞ்சம்
தனியே நின்றது கொஞ்சம்
அழகே உன் பெயர்த்தானோ

நில்லென்று நிறுத்தி உன்னை
ஜில்லென்று தழுவிக் கொண்டு
பாடும் ராகங்கள் என்ன

புன்னகை இதழ் விரிக்கும்
மல்லிகை சரம் தொடுத்து
சூட்டும் காலங்கள் என்ன
கன்னிப் பூ உடலோ
அன்னத்தின் சிறகோ
பிள்ளைச் சொல் மழலை பேசுவதோ
அழகே உன் பெயர்தானோ
அமுதே உன் மொழிதானோ
அழகே உன் பெயர்தானோ

வெள்ளி, 11 மே, 2012

குத்து விளக்காக குல மகளாக நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்


நீண்ட இடைவேளைக்குப் பின் சந்திப்பதில் சந்தோஷம். இனி இடைவெளி இன்றி பாடல் தரமேற்றுதல் இடம் பெறும் என நான் நம்புகிறேன்.
இந்த இனிமையான பாடலுடன் நிகழ்ச்சியை தொடருவோமாக. பாடகர்களின் அனுபவ முதிர்ச்சி பாடலில் தெரிகிறது. இனிமை சேர்க்கிறது.

திரைப் படம்: கூலிக்காரன் (1987)
நடிப்பு: விஜயகாந்த், ரூபிணி
குரல்கள்:   S P B, S ஜானகி
இசை: T ராஜேந்தர்
இயக்கம்: ராஜசேகர்    



http://www.divshare.com/download/17114641-6be




http://www.divshare.com/download/17114552-4c2

குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஒளி சிந்த வந்த தேரே
என் உள்ளந்தன்னில் ஓடும் தேனே
   
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது
அது நீ பூயென்குது

பூவிலூறும் வண்டு போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது
போதை தான் பண்பாடுது

சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்
காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய்

நீ நேசம் தர அதில் நான் வாசம் பெற
குத்து விளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம்
எனை ஏற்ற நேரம்

ரகசிய கனவு கண்ட இந்த இரவு
ஏன் நம்மை வாட்டுது
அது ஏன் சூடேற்றுது

பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு
இன்று ஏன் தடுமாறுது
சுகம் தான் பரிமாறுது

பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம் தான்
பைங்கிளி முத்தம் பெற

கூச்சம்தான்

நானும் மெல்ல அள்ள
நானம் உன்னை கிள்ள

குத்து விளக்காக குல மகளாக
உன் நெஞ்சின் ஓரம்
எனை ஏற்ற நேரம்

என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா

உனக்கென பிறந்தேனே
உன் தோளில் என்றும் தவழ்வேனே  
   
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்



புதன், 2 மே, 2012

நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை


ஒரு அரிய S P Bயின் ஆரம்ப காலக் குரலில் நல்லதொரு பாடல்

திரைப் படம்: நான்கு சுவர்கள் (1971)
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: S P B, P சுசீலா
இயக்கம்: K பாலசந்தர்
நடிப்பு: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ



http://www.divshare.com/download/15725591-de8




நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
வின் மீனால் பூவொன்று சீர்க்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

காமதேனு வந்து
கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை
அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம்
தெய்வ வீணை நாதம்
கேட்கும்போது மெல்ல
கிள்ள வேண்டும் கன்னம்

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
லா லா லா லா ஆ ஆ ஆ

தேவ மாதர் கூட்டம்
காம தேவன் ஆட்டம்
ஆடும்போது நாமும்
ஆடிப் பார்க்க வேண்டும்
ஆகாய கங்கை
அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும்
ஒளிந்து பார்க்க வேண்டும்

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
வின் மீனால் பூவொன்று சீர்க்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும் ஒன்றென்ன நூறாய்

நல்லதொரு இளமை பாடல்.


அம்மன் அருள் (1973)
பாடியவர்கள்: S P B, P சுசீலா,
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: பட்டு
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி


ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான் தானே

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

பட்டுத் தளிர் கொடியில் பச்சை பசும் கிளிகள்
தொட்டு கொண்டு பேசும் சிந்து
புன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
ஓடை நீரில் வாளை மீன்கள்
ஜாடையில் சொல்லும் நாடகம் என்னென்ன
ஓடும் தென்றல் பூவை பார்த்து
கூறும் கதைகள் என்னென்ன

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

உன்னைக் கண்டு எனக்கு என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா
இன்னும் என்ன மயக்கம் நெஞ்சில் உள்ள வரைக்கும்
அள்ளி அள்ளி எடுப்போம் ஒண்ணா
நாலில் ஒன்று நாணம் என்று
பெண் மனம் கொஞ்சம் அஞ்சுவதென்னென்ன
அச்சம் என்ன ஆசை கொண்டு
துள்ளிடும் உள்ளம் பூப்பந்து..

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹ்
ல ல ல ல

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

காலத்திற்கேற்ற நல்ல இளமை துள்ளும் பாடல் நல்ல தமிழில்.


திரைப் படம்: தங்க மகன் (1983)
இயக்கம்: A ஜெக நாதன்
நடிப்பு: ரஜினி, பூர்ணிமா பாக்யராஜ்
இசை:இளையராஜா
குரல்கள்: S P B, S ஜானகி
பாடல்: வாலி



ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ


வீணை என்னும் மேனியிலே
தந்தி என்னை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வீணை என்னும் மேனியிலே
தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

திங்கள், 16 ஏப்ரல், 2012

காத்திருந்தேன் கட்டியணைக்க கன்னி இதழில் முத்து பதிக்க...

எல்லா வகையிலும் இளமை ததும்பும் ஒரு பாடல். வசீகிக்கிறது.


திரைப் படம்: பெண்னொன்று கண்டேன் (1974)
நடிப்பு: முத்துராமன், பிரமிளா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: S P B , சுசீலா
இயக்கம்: கோபு












காத்திருந்தேன் கட்டியணைக்க கன்னி இதழில் முத்து பதிக்க...

காத்திருந்தேன் கட்டியணைக்க கன்னி இதழில் முத்து பதிக்க...

இன்னும் என்ன தட்டிக் கழிக்க இதயம் உண்டு கொட்டியளக்க...


வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது...

வாரிக் கொடுக்கும் வஞ்சி மனது வாங்க துடிக்கும் நெஞ்சம் உனது...

ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டது உறவில் இன்பம் அள்ளித் தந்தது...

காத்திருந்தேன் கட்டியணைக்க...

கன்னி இதழில் முத்து பதிக்க...

பூந்துகில் மூடிய பைங்கிளி மேணியை நான் தொடும் வேளையில் நாணம் பிறந்தது ஏன் ஏன் ஏன்...

மாதுளம் என்பது மாங்கனி போன்றது காதலன் கைப் பட பொங்கி வழிந்தது தேன் தேன் தேன்...

தேன் சுவையோ இல்லை நான் சுவையோ என்று நான் துடித்தேன் இந்த வேளையிலே...

நான் தரவோ இல்லை நீ தரவோ என ஏங்கி நின்றேன் அந்தி மாலையிலே

காத்திருந்தேன் கட்டியணைக்க...

கன்னி இதழில் முத்து பதிக்க...

மானிடை ஊறிடும் திராச்சையை போல் இரு சேல் இடை பார்த்ததும் காதல் பிறந்ததோ சொல் சொல் சொல்...

பாதரசம் என ஓடிடும் பார்வையில் காதல் ரசம் தரும் கன்னி என் அருகே நில் நில் நில்...

ஆத்திரமோ இல்லை அவசரமோ எனை அணைத்திடவே இந்த நாடகமோ...

நீ அறிவாய் அதை நான் அறிவேன் இதில் கேள்விகள் நூறு கேட்கனுமோ...

காத்திருந்தேன் கட்டியணைக்க

கன்னி இதழில் முத்து பதிக்க...

இன்னும் என்ன தட்டிக் கழிக்க

இதயம் உண்டு கொட்டியளக்க...

காத்திருந்தேன் கட்டியணைக்க

வியாழன், 12 ஏப்ரல், 2012

மாலை மலர் பந்தலிட்ட மேகம்


நல்ல அழகான குரல்கள் மற்றும் இசையுடன் ஒரு பாடல்.


திரைப் படம்: அக்கா (1976)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெய் கணேஷ், K R விஜயா
இயக்கம்: மதுரை திருமாறன்




http://www.divshare.com/download/17382421-187




ஆ ஆ ஹா ஹா ஹா ஹா
தஸ தஸ மக தஸ மக தஸ
மக தஸ மக தஸ
ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ
மகரி மகரி பமம மகர
மகரி மகரி பமம மகர
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்

கரி மக கரி கரி மக கரி
தப நித தப தப நித தப
ஸா நிதனீ சரிக சனிதபா
கார் கமலக் கூந்தலிலே
இளந்தென்றல் விளையாடி ஓட
களிப் பாக்கு வெற்றிலையை போலே
வரும் செவ்வாயில் இசை பாடல் பாட
கம கக கச ம ம ம ம ம
ம ம தப பப சானீ ச தானீ தானா
இவள் திருமகள் புகழ் தரும் அவள்
துணை என் வாழ்வில் அவன்
தந்த தெய்வீகம்

மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்
தம பத நிஸ தனி தப ம தப நீ
தப மக தா தப மக
ரி ரி த த
தம பதனீ நிஸ நித ர தரிஸ
நிதனீ தனி நி பத பத நிஸ
தப ப மக ர ரா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ல ல ல ல

ஞான மழை வீணையுடன்
மகராணி கலைவாணி வந்தாள்
நடமாடும் திருக் கோவில் தந்தாள்
கலை நதியாக ரதியாக நின்றாள்
க க கக கக
ம ம ம ம ம ம
ம ம பப பா பா பாரீ ரீ
கா நீ சாரி
நகை ஒரு வகை இசை அவள் கதை
அவள் நான் மீட்டும் ஸ்ருங்கார கல்யாணி

மாலை மலர் பந்தலிட்ட மேகம்
மங்கையிடம் சங்கொலிக்கும் ராகம்
கோடி நகை பின்னலிட்ட தேகம்
கோபுரத்தில் ஏற்றி வைத்த தீபம்





செவ்வாய், 10 ஏப்ரல், 2012

முத்தம் போதாதே சத்தம் போடாதே ரத்தம் சூடானதே நாணமே நாணுதே


இனிமையான இளையராஜா இசையில் S P Bயும் ஜானகி அம்மாவும் அடக்கி வாசித்திருக்கும் பாடல்.

திரைப் படம்: எனக்குள் ஒருவன் (1984)
நடிப்பு: கமல், ஷோபனா
இசை: இளையராஜா
இயக்கம்: S P முத்துராமன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: S P B,S ஜானகி





Free Music - Upload Audio Files - Mutham Pothathe














முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு
ஆ ஆ ஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதிவிலக்கு
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று

இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
புடவை புதையல் உனக்கே படையல்
இனி நீ தானே என் வள்ளல்

போதாதே முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே

இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்

போதாதே
ம் ம் ம்
முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே
சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே
நாணமே நாணுதே

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

கற்பனையோ கைவந்ததோ சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்

மிக லாவகமாகவும் எளிமையாகவும் இசையமைத்து சிறப்பாக பாடி இருக்கிறார்கள்.


திரைப் படம்: மாலதி (1970)
பாடியவர்கள்: S P B, P சுசீலா
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: ஜெமினி, சரோஜாதேவி

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்
அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்

உந்தன் கையில் விழுந்தேனோ கன்னிக் கனியே - இல்லைக்
கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே
யாரும் சொல்லித் திரியாத இன்பக் கலையே - அதை
அள்ளிக் கொள்ள வந்தேன் தன்னந்தனியே
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா
சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்..

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்

என்னை கட்டி வைத்த விலங்கோ கண்கள் இரண்டும் - அங்கு
வெட்டி வைத்த கரும்போ கன்னம் இரண்டும்
உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னை கொடுத்தேன் - அங்கு
காதல் எனும் அமுதை அள்ளிக் குடித்தேன்
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா
சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்..

கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்...

சனி, 31 மார்ச், 2012

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்


மிக மென்மையான இசையில் அழகாக பாடி இருக்கிறார்கள் பாடகர்கள்.

திரைப் படம்: சலங்கை ஒலி (1984)
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
இயக்கம்: K விஸ்வனாத்
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: கமல், ஜெயபரதா




http://www.divshare.com/download/17052605-1ee



http://www.divshare.com/download/17052811-dbc

ஆ ஆ ஆ ஆ
மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்


இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
காதலான நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
ஆ ஆ ஆ
இதழில் மௌனங்கள்
ஆ ஆ ஆ
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
ம் ம் ம்
இள மனதில் என்ன பாரம்
ம் ம் ம்

திங்கள், 26 மார்ச், 2012

முகம் ஒரு நிலா விழி இரு நிலா அடடா மூன்று நிலா

இசையாலும் பாடும் குரல்களாலும் சிறப்பாகிய பாடல்.


திரைப் படம்: மனசுகேத்த மகராசன் (1989)
பாடியவர்கள்: S P B, K S சித்ரா
நடிப்பு: ராமராஜன், சீதா
இசை: தேவா
இயக்கம்: K தீனதயாளன்



முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இது ஒரு காதல் விழா
அடி பூவை சூடும் பூவே
இடம் கொடு

முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இது ஒரு காதல் விழா

ஒரு பூவை சூடும்
பூவின் இதழ் தொடு
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா

காமன் கோவிலில் ஏற்றும் ஒளி தீபம் மணி விழிகள்
காதல் நோயினை மாற்றும் என் மன்னன் கனி மொழிகள்
மேனியில் பொன் வீணையின் சுக நாதம் கேட்குமோ
கூடலில் விளையாடலில் உனை ஆடை கேட்கவோ
இருவரின் இதயம் இணைகிற சமயம்
சுகமென்னும் மழை வரும்
இளமைகள் நனையும்
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா

காலம் எத்தனை தூரம் தினம் நாமும் போய் வரலாம்
வாழ்வில் எத்தனை இன்பம் அதை நாளும் நாம் பெறலாம்
மார்பிலும் இரு தோளிலும் நான் மாலை ஆகிறேன்
மாலையும் இளங்காலையும் சுக ராகம் கேட்கிறேன்
அறுபது கலைகள் பழகிடும் நிலையில்
எதுவரை சுகம் வரும் அது வரை பயணம்

முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா
இரவினில் வரும் இளமையின் உலா
இது ஒரு காதல் விழா

ஒரு பூவை சூடும்
பூவின் இதழ் தொடு
முகம் ஒரு நிலா விழி இரு நிலா
அடடா மூன்று நிலா

சனி, 24 மார்ச், 2012

நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று. உண்மையிலே ஒரு மெல்லிசை.


திரைப் படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)
குரல்கள்: S P B, S ஜானகி,
இசை: இளையராஜா
பாடல் : கண்ணதாசன்
நடிப்பு: விஜயகுமார், ஸ்ரீபிரியா
இயக்கம்: தேவராஜ்-மோகன்



நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய் மொழி மணி வாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
பட பட படவென வரும் தாபங்கள்

ஆலிலை மீது தழுவிடும் காற்று
சல சல சல வென வரும் கீதங்கள்

குலமகள் நானம் உடன் வரும் போது
மௌனமே இறைவன் தூது
ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை ஆ ஆ ஆ...
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை


கார் குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கல கல கல என வரும் எண்ணங்கள்

ஒவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பள பள பள என வரும் கிண்ணங்கள்

செல் என கண்ணும் நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
விடுகதை ஓர் நாள் தொடர் கதை ஆனால்
அது தான் ஆனந்த எல்லை ஆ ஆ ஆ..
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

வியாழன், 22 மார்ச், 2012

இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம்


மிக மென்மையான சாதாரணமான இசை கருவிகளுடன் இசையும் அழகான குரல்களும் அலங்கரிக்கும் அபூர்வமாகிப் போன இனிமைப் பாடல்.

திரைப் படம்: வைரம் (1974)
இசை: T R பாப்பா
குரல்கள்: S P B, ஜெயலலிதா
இயக்கம்: T R ராமண்ணா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெயலலிதா, ஜெய்ஷங்கர்





http://www.divshare.com/download/17016096-578



http://www.divshare.com/download/17016174-ca9

இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா
பொங்குது நாணம் பார்த்தது போதும்

ஹோ ஹோ ஹோ பார்வைக்கு யோகம்
மங்கல மேளம் குங்கும கோலம் மணவரை மகிமை
ஹா ஹா ஹா அதுவரை பொறுமை
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்

திரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்
அதில் ஓடும் ஜாடையிலே போதையும் பார்த்தேன்
சிரிப்பால் என்னை மாணிக்க பதுமை அழைத்தது கண்டேன்
எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பது கண்டேன்
இன்றே நான் பார்க்கவோ இல்லை நாள் பார்க்கவா
ஹா அவசரம் என்ன
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்

இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே
அதை காமன் வேண்டும் என்றான் அவனிடம் தந்தேன்
கடை கண் வீசும் பனிமொழியாகும் பால் அபிஷேகம்
இடை எனும் பதுமை நடை எனும் தேரில் ஊர்வல கோலம்
மாலை பொன் மாலையா இல்லை பூ மாலையா
ஆ ஆ ஆ ஆ ஆ
கோவிலில் பார்ப்போம்
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
ஓ ஓ ஓ
ஏங்குது மோகம்
ஆ ஆ ஆ
பாடுது ராகம்
ல ல ல
ஏங்குது மோகம்
ம் ம் ம்
பாடுது ராகம்

செவ்வாய், 20 மார்ச், 2012

ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

வழக்கம் போல் T ராஜேந்திரனின் கலக்கல் பாடல் ஒன்று. ஈடு இணை இல்லாத  இசையும் பாடலும். S P B யும் கலக்கி இருக்கிறார்.

திரைப் படம்:  மைதிலி என்னை காதலி
நடிப்பு: அமலா
இசை, இயக்கம், பாடல் வரிகள்: T ராஜேந்தர்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
தத்த தகதிமி தத்த தகதிமி தத்த தகதிமிதோம்
தா குஜ ஜம் தரி தா
தத குத ஜம் தரி தை
தா குஜ ஜம் தரி
தத குத ஜம் தரி
தத்ததீங்கனத்த
ததீங்கனத்த
ததீங்கனத்த தா
தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்தனவோ
இதை கண்ட வேகத்தில் ப்ரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து இரு
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
மனமெங்கும் மணம் வீசுது
எந்தன் மனமெங்கும் மணம் வீசுது
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
தித்தா திகி திகி தித்தா திகி திகி
தித்தா திகி திகி தித்தா திகி திகி
ரிக தான தானதா ரிக தான தானதா
ரிக தான தான

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்
கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு