பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 20 மார்ச், 2012

ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

வழக்கம் போல் T ராஜேந்திரனின் கலக்கல் பாடல் ஒன்று. ஈடு இணை இல்லாத  இசையும் பாடலும். S P B யும் கலக்கி இருக்கிறார்.

திரைப் படம்:  மைதிலி என்னை காதலி
நடிப்பு: அமலா
இசை, இயக்கம், பாடல் வரிகள்: T ராஜேந்தர்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
தத்த தகதிமி தத்த தகதிமி தத்த தகதிமிதோம்
தா குஜ ஜம் தரி தா
தத குத ஜம் தரி தை
தா குஜ ஜம் தரி
தத குத ஜம் தரி
தத்ததீங்கனத்த
ததீங்கனத்த
ததீங்கனத்த தா
தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்தனவோ
இதை கண்ட வேகத்தில் ப்ரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து இரு
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
மனமெங்கும் மணம் வீசுது
எந்தன் மனமெங்கும் மணம் வீசுது
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
தித்தா திகி திகி தித்தா திகி திகி
தித்தா திகி திகி தித்தா திகி திகி
ரிக தான தானதா ரிக தான தானதா
ரிக தான தான

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்
கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக