பின்பற்றுபவர்கள்

K பாலசந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
K பாலசந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்



மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹண த்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன. [ஆரோகணம் ஸ க3 ப நி2 ஸ் அவரோகண்ம் ஸ் நி2 ப க3 ஸ] நாரதர் 
கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர். 

 

இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிரு ஷ்ணா அவர்கள்.
மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான “அதிசய ராகம்; ஆனந்த ராக ம்; அழகிய ராகம்” என்ற பாடல். இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவ ங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறி விடுகின்றது. ஒரு பாடலில் பல ராகங்களும் தொ டர்ந்துவரப் பாடும் ராகத் தொடர்ச்சியே ராகமாலி கை. இந்த அதிசய ராகத்தினைக் இப்போது இங்கே கேளுங்கள்.


மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால், ‘எப்படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவை தானே வைத்துக்கொண்டு வருவார்’, என்று நீங்கள் வியப்பது எனக்கு புரிகின்றது. 
முதன்முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக்கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல்  நாரதர்  இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டு படும் அவஸ்தை பார்த்த ஆர்ட் டைரக்ட ர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பதுபோலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று 
கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, “நாராயண; நாராயண” என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

நன்றி: விபரம் உபயம்  vidhai2virutcham.wordpress.com



திரைப் படம்: அபூர்வ ராகங்கள் (1975)
இசை: M S விஸ்வனாதன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: K J யேஸுதாஸ்
நடிப்பு: கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா
இயக்கம்: K பாலசந்தர்








அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

அதிசய ராகம் 



வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
மோகம்
மோகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
இசை யெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இசை யெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இந்திர லோகத்து சக்கரவாகம் 
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

பின்னிய கூந்தல் கரு நிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது வேகம் 
பின்னிய கூந்தல் கரு நிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது வேகம் 
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் 
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம் 
அது என் யோகம் 

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுரம் பார்த்தால் காவிரி மாதவி 
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுரம் பார்த்தால் காவிரி மாதவி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மழையும் நீயே வெய்யிலும் நீயே நிலவும் நீயே நெருப்பும் நீயே


ஒரு உரை நடையை இனிய பாடலாக்கி இருக்கிறார் பாடும் நிலா பாலு. M S விஸ்வனாதனின் இசை பாணியை மரகதமணியிடம் கொண்டு வந்திருக்கிறார் பாலசந்தர். அழகுப் பாடல்

திரைப் படம்: அழகன் (1991)
நடிப்பு: மம்முட்டி, பானுப்ரியா
இயக்கம்: K பாலசந்தர்
இசை: மரகதமணி
















மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய் சுடுமா
தனிமை நினைவில் அனலாய் சுடுமே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளி சேர்த்தாளே
அதுதானா மோக நிலை
இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாக சாலையா

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும்
பருவம் பருவம்
கடலின் அலைபோல் இதயம் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும்
பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரரிவார்
ஏதேதோ சுகம் போதாதோ
இந்த ஏக்கம் யாரரிவார்
முதலாய் முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா
உனைத்தான்
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா


புதன், 18 ஜூலை, 2012

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்


76களில் இளையராஜாவின் வரவு M S விஸ்வனாதனின் இசையமைப்பில் பல மாற்றங்களை கண்டது. அதில் இந்தப் பாடல் போல வசன நடையில் பல பாடல்கள் உருவாகின. சில நன்றாகவே இருந்தன. அவற்றில் இந்தப் பாடலும் ஒன்று.

திரைப் படம்: நூல் வேலி (1979)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: S P பாலசுப்ரமணியம்
நடிப்பு: சரத் பாபு, சுஜாதா, சரிதா, கமல் ஹாசன்
இயக்கம்: K பாலசந்தர்



Music File Hosting - Audio Hosting -








ம் ம் ம் ம் ம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்  போராட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹ
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

பூந்தோட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
பூந்தோட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
ஹா ஹா ஹா ஹா ஹா
சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும்
சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும்
எண்ண எண்ண சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும்
எண்ண எண்ண சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்

புதன், 2 மே, 2012

நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை


ஒரு அரிய S P Bயின் ஆரம்ப காலக் குரலில் நல்லதொரு பாடல்

திரைப் படம்: நான்கு சுவர்கள் (1971)
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: S P B, P சுசீலா
இயக்கம்: K பாலசந்தர்
நடிப்பு: ஜெய்ஷங்கர், வாணிஸ்ரீ



http://www.divshare.com/download/15725591-de8




நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
வின் மீனால் பூவொன்று சீர்க்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

காமதேனு வந்து
கறந்த பாலைத் தந்து
அருந்தும்போது உன்னை
அணைக்க வேண்டும் கண்ணே
வானவீதி ஓரம்
தெய்வ வீணை நாதம்
கேட்கும்போது மெல்ல
கிள்ள வேண்டும் கன்னம்

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
லா லா லா லா ஆ ஆ ஆ

தேவ மாதர் கூட்டம்
காம தேவன் ஆட்டம்
ஆடும்போது நாமும்
ஆடிப் பார்க்க வேண்டும்
ஆகாய கங்கை
அருகில் இந்த மங்கை
குளிக்கும்போது நானும்
ஒளிந்து பார்க்க வேண்டும்

நினைத்தால் நான் வானம் சென்று
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

மேகம் கொண்டு வீடொன்று
மின்னல் கொண்டு விளக்கொன்று
வின் மீனால் பூவொன்று சீர்க்கொண்டு
உன்னோடு நானும் வருவேன்
நிலவில் ஓடி ஆடி உன்னை
நெருங்கி நெருங்கிப் பாடுவேன்