பின்பற்றுபவர்கள்

சனி, 31 மே, 2014

மனமே முருகனின் மயில் வாகனம்

மறைந்த திருமதி (ராதா) ஜெயலக்ஷ்மி அவர்களின் குரல் என்றாலே தனி ஈர்ப்புதான். அதுவும் கொத்தமங்கலம் சுப்புவின் கவிதையில் அவர் பாடிய இந்த பாடல் சிறப்பான கவனம் பெரும் பாடல்.

இவர் சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன், 27ந் தேதி (மே-2014)  காலமானார் என்று எனக்கு செய்தி கிடைத்தது.

திரைப் படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966)
இசை: M S விஸ்வனதன்
பாடியவர்: ராதா ஜெயலக்ஷ்மி
பாடல்: கொத்தமங்கலம் சுப்பு
இயக்கம்: பாலு
நடிப்பு: சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெயலலிதா.








ராதா ஜெயலக்ஷ்மி சகோதிரிகளின் பழைய புகைப் படம்.



மனமே முருகனின் மயில் வாகனம்
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்

மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்

என் குரலே செந்தூரின் கோவில் மணி
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
குரலே செந்தூரின் கோவில் மணி
அது குகனே ஷன்முகனே
என்றொலி கூயினீ
அது குகனே ஷன்முகனே
என்றொலி கூயினீ

மனமே முருகனின் மயில் வாகனம்

நின் நி த ப நி மயில் வாகனம்
த நி த த நி நி த த ப த நி நி ப ப
த த க க ப ப த த ம ம த த ம ம
த த ச ர க த த க ம ம த
முருகனின் மயில் வாகனம்
க க த ம த ம க ம நி க த ம நி நி
த க நி ந நி த ம க ப த ம க த த
நி த நி த நி த க த ம க த த
நி த நி த நி த க
மனமே முருகனின் மயில் வாகனம்

வியாழன், 29 மே, 2014

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

மறைந்த இசையமைப்பாளர் சந்திரபோஸிடமிருந்து இனிமையான பாடல் வழக்கம் போல. K J யேசுதாசும் K S சித்ராவும் தனித்  தனியே பாடியிருக்கும் பாடல்கள் கீழே.

திரைப் படம்: வசந்தி (1988)
பாடியவர்கள்: K J யேசுதாஸ் மற்றும் K S சித்ரா
இசை: சந்திரபோஸ்
பாடல்: வைரமுத்து
இயக்கம்: சித்ராலயா கோபு
நடிப்பு: மோகன், மாதுரி
















சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆளுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்
தென்னையின் கீற்று விழவில்லை என்றால்
தென்னைக்கு என்றும் வளர்ச்சி இல்லை
தங்கத்தை தீயில் சுடவில்லை என்றால்
மங்கையர் சூட நகையுமில்லை
பிறப்பதில் கூட துயரிருக்கும்
பெண்மைக்கு பாவம் சுமை இருக்கும்
வலி வந்துதானே வழி பிறக்கும்.
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
ஊருக்குச்சிந்தும் வான்மழை தன்னில்
உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு
நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்
நாளைகள் இன்றே வருவதுண்டு
பகல் வந்தபோது வெளிச்சமுண்டு
இருள் வந்த போது விளக்கு உண்டு
எறும்புக்கும் கூட சுகங்கள் உண்டு
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
பாசங்கள் போதும் பார்வைகள் போதும்
பாலையில் நீரும் சுரந்து வரும்
புன்னகை போதும் பூ மொழி போதும்
போர்களும் கூட முடிந்துவிடும்
பாதையை அன்பே திறந்து விடும்
பாறையும் பழமாய் கனிந்துவிடும்
வாழ்க்கையின் ஆழம் விளங்கிடும்.
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா
சங்கீதம் பாடாத ஆளுண்டா
ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று
எண்ணி வாழ்ந்து விட்டால்
சந்தோஷம் காணாத வாழ்வுண்டா


செவ்வாய், 27 மே, 2014

கண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே

தெளிவான உச்சரிப்புடன் குரலும் அர்த்தமுள்ள பாடல் வரிகளும், கவனத்தை சிதறடிக்காத இசையும் இந்தப் பாடலுக்கு வலிமை. சிற்பியின் பெருமை சொல்லும் பாடல். சிறிய பாடலானாலும் வீரியமிக்க பாடல்.

திரைப் படம்: காஞ்சித் தலைவன் (1963)
நடிப்பு: எம் ஜி யார், பானுமதி, பத்மினி
இயக்கம்: A காசிலிங்கம்
இசை: K V மகாதேவன்
பாடல்: K D சந்தானம்
பாடியவர்: டி எம் எஸ்



http://asoktamil.opendrive.com/files/Nl8xMDQ1MDQyNl9aZ2ZOT19kYjQ5/kan%20kavarum%20silaiye.mp3













ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

பகை முடிக்க பலவகையாம்
படைக்கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க
சிறு உழியும் இருகரமும் போதும்
பகை முடிக்க பலவகையாம்
படைக்கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க
சிறு உழியும் இருகரமும் போதும்

முகை வெடிக்கும் முறுவலென
பெண்ணிதழில் தெரிவாய்
 முகை வெடிக்கும் முறுவலென
பெண்ணிதழில் தெரிவாய்
சினம் மூண்டெழுந்தால் ஆண்டவன்
பேய் தாண்டவமும் புரிவாய்
தாண்டவமும் புரிவாய

கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

படிக்குமுன்னே செவியினில்
தேன் பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்குமுன்னே
பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்
படிக்குமுன்னே செவியினில்
தேன் பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்குமுன்னே
பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்
எனக்குமுன்னே வாழ்ந்தவர்கள்
எத்தனையோ கோடி
எனக்குமுன்னே வாழ்ந்தவர்கள்
எத்தனையோ கோடி
அந்த இடம் பெயர்ந்தார்
பெருமை எல்லாம் தொடர்கதைபோல் தருவாய்

கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

ஞாயிறு, 25 மே, 2014

என்னை எடுத்து தன்னை கொடுத்து போனவன் போனாண்டி

உச்சஸ் தாயிலும் உடனடியாக கீழேயிறங்கியும் பாடலை பிரமாதப் படுத்தியிருக்கும் திருமதி P சுசீலா அம்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பாடலின் அர்த்தம் புரிந்து உள்வாங்கி ரொம்பவும் சிரமப்பட்டு இனிமை சேர்த்து பாடியிருக்கிறார். அழகான பாடல் வரிகள்.
காதலன் தன்னை விட்டு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற ஏக்கத்தை குரலிலும் சரி சரோஜாதேவியின் நடிப்பிலும் சரி மிக அருமையாக படம் பிடித்திருக்கிறார்கள்.
இசை மட்டும் இடையினில் பழனி படத்தின் ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் பாடலை நினைவுப்படுத்துகின்றது.
படகோட்டியில் எந்தப் பாடலும் சோடை போகவில்லை. அனைத்தும் அருமையான பாடல்கள்.

திரைப்படம்: படகோட்டி (1964)
இசை: விஸ்வனாதன்
பாடல்: வாலி
இயக்கம்: பிரகாஷ் ராவ்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி









ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய்
ஹொய்யா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

என்னை எடுத்து தன்னை கொடுத்து
போனவன் போனாண்டி
தன்னை கொடுத்து என்னை அடைய
வந்தாலும் வருவாண்டி
ஹோ ஹோ ஹோய்
போனவன் போனாண்டி

ஹொய்யா ஹொய் ஹொய்யா
என்னை எடுத்து தன்னை கொடுத்து
போனவன் போனாண்டி
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்
ஹொய்யா ஹொய்யா ஹொய்
ஹொய்யா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்து
போனவன் போனாண்டி போனவன் போனாண்டி
ஏக்கத்தை தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும்
வருவாண்டி ஹோய்
வந்தாலும் வருவாண்டி ஹோ ஹோ ஹோய்
போனவன் போனாண்டி

என்னை எடுத்து தன்னை கொடுத்து
போனவன் போனாண்டி
ஹொய ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா
ஹொய்யா ஹொய்
ஹொய்யா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து
போனவன் போனாண்டி ஹோய்
நீரை எடுத்து நெருப்பை அணைக்க
வந்தாலும் வருவாண்டி ஹோய்
வந்தாலும் வருவாண்டி ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனாண்டி

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹொய் ஹொய்யா ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்
ஹொய்யா ஹொய்யா ஹொய்
ஹொய்யா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆசை மனசுக்கு வாசலை வைத்து
போனவன் போனாண்டி
போனவன் போனாண்டி
வாசலை தேடி வாழ்த்துக்கள் பாடி
வந்தாலும் வருவாண்டி ஹோய்
வந்தாலும் வருவாண்டி ஹோய் ஹோய் ஹோய்
போனவன் போனாண்டி

என்னை எடுத்து தன்னை கொடுத்து
போனவன் போனாண்டி
தன்னை கொடுத்து என்னை அடைய வந்தாலும்
வருவாண்டி ஹோ ஹோ ஹோய்
போனவன் போனாண்டி

ஹொய்-ஹொய்யா ஹொய்யா
 ஹொய்-ஹொய்யா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹொய்-ஹொய்யா ஹொய்யா
ஹொய்-ஹொய்யா
 ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

வெள்ளி, 23 மே, 2014

முத்தமிழில் பாட வந்தேன்

ஒரு அயல் நாட்டுப் பெண்ணை தமிழ்ப் பாட்டுக்கு அழகாக அபிநயம் பிடிக்க வைத்திருப்பது அழகுதான். இந்தப் பாடலை பலர் கேட்டிருக்க மாட்டார்கள். அபூர்வமான பாடல்.
பூவை செங்குட்டுவன் அவர்களின் அழகான கவிதை. வாணி அவர்களின் பளீச் குரலில் காதில் தேன் பாய்கிறது. 

திரைப்படம்: மேல் நாட்டு மருமகள் (1975)
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடல்: பூவை செங்குட்டுவன்
பாடியவர்: வாணி ஜெயராம்
நடிப்பு: சிவகுமார், ஜெயசுதா, கமல்ஹாசன்
இயக்கம்: A P நாகராஜன்










முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்

வேலன் என்றால் வீரம் வரும்
கந்தன் என்றால் கருணை தரும்
 வேலன் என்றால் வீரம் வரும்
கந்தன் என்றால் கருணை தரும்
ஷன்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஷன்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்

ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
ஸ்வாமி நாதனே சரவணனே
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
ஸ்வாமி நாதனே சரவணனே
ஆறு முகம் கொண்டு ஆறுதல் தந்து
கோடி நலம் காட்டும் குருபரனே

முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்

பாரத தாய் மடியினிலே
பண்புடனே தவழுகின்றேன்
பாரத தாய் மடியினிலே
பண்புடனே தவழுகின்றேன்
பழமை எல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகின்றேன்
பழமை எல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகின்றேன்

கால வரலாறு போற்றி புகழ் பாடும்
கவிதை யாவுமே தனி தமிழே
கால வரலாறு போற்றி புகழ் பாடும்
கவிதை யாவுமே தனி தமிழே

நாளும் முறையோடு நன்மை பல தேடி
வாழ வழி கூறும் திருக்குறளே

முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்

கோச்சடையான்......

கோச்சடையான்...... சிறுவர்களுக்கும் அல்லாமல்  பெரியவர்களுக்கும் அல்லாமல் ஓர் இரண்டும் கெட்டான் படம். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் குழந்தைகளும் கொட்டாவி  விட ஆரம்பித்துவிட்டார்கள். பெரியவர்களும்  நெளிய ஆரம்பித்து விட்டார்கள். நல்ல வேளையாக 2 மணி நேரத்தில் படத்தை முடித்து மரியாதையை காப்பாற்றிக் கொண்டார்கள்.
மொத்தத்தில் ஒரு நாட்டிய நாடகம் பார்த்த அனுபவம்தான்.
நவீன தொழில் நுட்பத்தை முழுமையாக உபயோகித்திருக்கிறார்கள்.
கோச்சடையான்......சடையான்?

புதன், 21 மே, 2014

தென்றல் அது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ

 அந்த 7 நாட்கள் இனிமையான பாடல்கள் நிறைந்த திரைப் படம். இன்று ஒரு இனிமையான பாடல்.

திரைப் படம்: அந்த 7 நாட்கள் (1981)
குரல்கள்: P ஜெயசந்திரன், S ஜானகி
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: K பாக்யராஜ், அம்பிகா
இயக்கம்: K பாக்யராஜ்








ச க ம ப க ம க ச
நி ச நி ப க ம நி ப ச ச
ச க ம ப க ம க ச
நி ச நி ப க ம நி ப ச 

க க ரி ம ம க ப ப ம த ரி நி ச

தென்றல் அது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
தென்றல் அது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ

தென்றல் அது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ

உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை
இன்று தங்கரதம் ஏறியது

உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை
இன்று கங்கை என மாறியது
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை
இன்று கங்கை என மாறியது

இது வரை கனவுகள் இளமையின் நினைவுகள்
ஈடேறும் நாளின்று தான்

எது வரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும்
என்னாசை உன்னோடுதான்

பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ

தென்றல் அது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ

சந்தம் தேடி சிந்து பாடி
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்

தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்
தஞ்சை கோவில் சிற்பம் போலே
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்

அனுதினம் இரவெனும் அதிசய உலகினில்
ஆனந்த நீராடுவோம்

தினமொரு புது வகை கலைகளை அறிந்திடும்
ஏகாந்தம் நாம் பாடுவோம்


பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ

தென்றல் அது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ


திங்கள், 19 மே, 2014

டேய் வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம்

கவிஞர் வித்தியாசமான முறையில் கவிதை எழுதியிருக்கிறார். காதலனும் காதலியும் ஒருத்தரை ஒருத்தர் குழந்தையாக பாவித்து பாடுவது போல அமைந்துள்ளது. இனிமையான இசையும் பாடிய குரல்களும் பாடலுக்கு வளம் சேர்கின்றன.

திரைப் படம்: கை நிறைய காசு (1974)
இசை: சங்கர் கணேஷ்
நடிப்பு: நாகேஷ், பிரமிளா, ஸ்ரீகாந்த்.
இயக்கம்: A B ராஜ்
பாடியவர்கள்: எஸ் பி பி, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்



http://asoktamil.opendrive.com/files/Nl8zNTU2NDgxNF9hbG9ma182ZmU3/De%20Vada%20Raja%20Vada%20Kannu.mp3










டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்

வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்

உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்


ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்

இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆடவேண்டும் கூட வேண்டும்


கூடும் போது பாட வேண்டும்


கொடி விட்ட பூவினில்
மோதுது காற்று
காரணம் கேட்டு விடு

மணி மின்னும் கைகளைத்
தோள்களில் போட்டு
மயக்கத்தில் தீர்த்துவிடு

மயக்கத்தில் தீர்த்துவிடு


பொன் மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்

பொன் மலர் செண்டுகள்
கண்களில் கண்டதும்

பொய்கையின் வண்டுகள் ஆடாதோ

பொய்கையின் வண்டுகள் ஆடாதோ


டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்

வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்

உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்

நாட்டியப் பாவையின் பூட்டிய மேனி
தீட்டிய ஓவியமோ


அது காட்டிய நாடகம் மாப்பிள்ளை கண்களில்
கூட்டிய காவியமோ

கூட்டிய காவியமோ


ஊற்றிய பாலிடை


ஊறியத் தேனென
ஊற்றிய பாலிடை

ஊறியத் தேனென


நாளைய இன்பங்கள் ஆயிரமோ


நாளைய இன்பங்கள் ஆயிரமோ


டேய் வாடா ராஜா வாடா கண்ணு
கண்கள் உன் பக்கம்

வண்ணப் பூ வனம்
முத்து மாணிக்கம்

உன் முகம்
உன் முகம்
உன் முகம்
உன் முகம்


ஏய் வாடி கண்ணே வாடி இங்கே
கைகள் உன் பக்கம்

இந்த மாங்கனி உந்தன் மார்பினில்
ஆடவேண்டும் கூட வேண்டும்


கூடும் போது பாட வேண்டும்


லா லாலாலாலாலாலாலா ல ல ல லா லா லா 

சனி, 17 மே, 2014

சங்கே முழங்கு சங்கே முழங்கு

இது எந்தக் காலத்திற்கும் ஏற்ற பாடல். எப்போதும் என்றும் உடல் முருக்கேற்றக் கூடிய பாடல்.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு"

இனி நமது மக்களுக்கு நாட்டுப் பற்று தொடரும் என நம்பலாம். இது இந்தியனே இந்தியனை ஆளும் காலம்.
நாம் தமிழன் என்பதை விட நாம் இந்தியன் என நம்பும் காலமாகட்டும்.

இந்திய நாட்டு மக்களுக்கு எனது salute.

திரைப்படம்: கலங்கரை விளக்கம் (1965)
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
பாடல் இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
இயக்கம்: K சங்கர்
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி.










சங்கே முழங்கு
சங்கே முழங்கு

சங்கே முழங்கு
சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ


பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

சங்கே முழங்கு
சங்கே முழங்கு
சங்கே முழங்கு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்

ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே
சங்கே முழங்கு
ஆஆஆ ஆஆஆஆஆ


வெங்கொடுமைச் சாக்காட்டில்
விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்
ஆஆஆஆஆஆஆஆஆஆ

கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம்
எங்கள் உள்ளம்

வெங்குருதி தனிழ்கமழ்ந்து
வீரஞ்செய்கின்ற தமிழ்
எங்கள் மூச்சாம்

தமிழ் எங்கள் மூச்சாம்

வியாழன், 15 மே, 2014

எங்கே என் ஜீவனே

அருமையான ஜனரஞ்ஜகமான காதல் பாடல். இளையராஜாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. காட்சி மட்டும் சிறிது Adults only.
ஏனோ ஒரு வாரமாக தமிழ்வெளியில் எனது பதிவு இணைய மறுக்கிறது.

திரைப் படம்: உயர்ந்த உள்ளம் (1985)
இயக்கம்: S P  முத்துராமன்
நடிப்பு: கமல், அம்பிகா
பாடல்:வைரமுத்து?
பாடியவர்கள்: யேஸுதாஸ், ஜானகி




http://asoktamil.opendrive.com/files/Nl8zNzc0NzAyMF9wRkpLN182NGI3/Enge%20En%20Jeevane.mp3









ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ \

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

தேரில் வந்த தெய்வமே
தேவபந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

கையில் தீபம் இருந்தும் நான்
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்

கண்ணை தந்தும் உன்னை நான்
அன்னை போல காப்பேன்

வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா
வாழ்க்கை என்னும் பள்ளியில்
என்னை சேர்க்க வா

விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்

மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

தேரில் வந்த தெய்வமே
தேவபந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

முத்தம் போடும் வேளையில்
சத்தம் ரொம்ப தொல்லை

பூக்கள் பூக்கும் ஒசைகள்
காதில் கேட்பதில்லை

காமபானம் பாய்வதால்
காயம் ஆகுமே
 காமபானம் பாய்வதால்
காயம் ஆகுமே

கலசம் இங்கு கவசம் ஆகும்
காமன் அம்பு முறிந்து போகும்

மலர்ந்த தேகம்
சிவந்து போகும்

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவபந்தமே

எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே

திங்கள், 12 மே, 2014

தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்

 K V மகாதேவனின்  அட்டகாசமான ஆரம்ப இசையுடன் அருமையான பாடல். இனிமையான குரல்கள், தெளிவான குரலில் நல்ல பாடல் ஒன்று .

திரைப் படம்: தாழம்பூ (1965)
நடிப்பு: எம் ஜி யார், K R விஜயா
இயக்கம் : S ராமதாஸ்
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: டி எம் எஸ், P சுசீலா
பாடல்: வாலி

http://asoktamil.opendrive.com/files/Nl8zNTI1MTAwNl9pR09tR18xZTZk/Thazham%20poovin%20narumanathil.mp3










தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்

தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்


அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்


அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்


தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்


பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்

பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்

பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்


உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்

அது ஒரு நாள் வந்து பதிலளிக்கும்
 ஓ ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஹோ  


தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்

அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்


தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்


அழகின் மடியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்

அழகின் மடியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்


குல மகள் நானம் புரிந்துவிடும்
குல மகள் நானம் புரிந்துவிடும்

மனம் கொள்கையின் வழியில் நடந்துவிடும்


ஓ ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஹோ 


தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்


அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்


கடலென்ற மேடையில் அலையோடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்

கடலென்ற மேடையில் அலையோடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்


கடமையும் காதலும் நிறைவேறும்
கடமையும் காதலும் நிறைவேறும்

அந்தக் காலமும் விரைவில் உருவாகும்



ஓ ஓ ஓ ஓ ஓ ஓஹோ ஹோ



தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்



அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்



தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்


அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்


தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்

சனி, 10 மே, 2014

மௌனமே பார்வையால் ஒரு பாட்டு



இந்தப் பாடல் முடியும் நேரத்தில் காதோலியில் இருப்பது போல கடைசி வரி வரையில் படத்திலேயே இல்லை.
பாடலுக்கு  முன் இசையை ஆரம்பித்து பாடலை அதனுடன் இணைத்திருக்கும் விதம் (Synchronization) அருமை. இசையும் பாடகரின் குரலும் இழையோடும் அழகு இது போல சில பாடல்களில் மட்டுமே உண்டு.
பாடலின் ஒவ்வொரு வரியுமே அசத்தல்.

"முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்"




திரைப்படம்: கொடிமலர் (1966)
பாடியவர்: பி. பி. ஸ்ரீநிவாஸ்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

நடிப்பு: முத்துராமன், விஜயகுமாரி 
இயக்கம்: சி வி ஸ்ரீதர்





http://asoktamil.opendrive.com/files/Nl8zODAwMDA0OF84Z1JwbV85M2Zi/mouname%20paarvaiyal.mp3

















மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேச வேண்டும்
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேச வேண்டும்

அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும்
தேனாறு போல பொங்கி வர வேண்டும்
வர வேண்டும்
அல்லிக்கொடியே உன்தன் முல்லை இதழும்
தேனாறு போல பொங்கி வர வேண்டும் 

அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல்
என்னை அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும்
என்னை அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும்
ம்

மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேச வேண்டும்

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் 


முன்னம் இருக்கும் இந்தச் சின்ன முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்
பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்
ம்

மௌனமே பார்வையால்
ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேச வேண்டும்







வியாழன், 8 மே, 2014

ஒருவன் காதலன் ஒருத்தி காதலி

இந்தப் படத்தின் எல்லா பாடல்களுமே classic வகையை சேர்ந்தவைதான். அதுவும் ஸ்ரீதரின் நடிகர்கள் தேர்வு எப்போதுமே விஷேசமாகவே இருக்கும். இந்த படத்தில் அனைவரும் புது முகங்கள். எல்லோருக்கும் முதல் படம். இளமை இளமை இளமைதான். அனைவரும் அழகாக நடித்திருப்பார்கள்.

திரைப் படம்: வெண்ணிற ஆடை (1965)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா
நடிப்பு: ஸ்ரீகாந்த்,ஜெயலலிதா
இயக்கம்: C V ஸ்ரீதர்
பாடல்: கண்ணதாசன்







http://asoktamil.opendrive.com/files/Nl8zODIzOTg2OV9OTUJ3bF8zZjQ2/oruvan%20kathalan.mp3





ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி

உறவு ஹோ ஹோ ஹோ என்றது
என்றதோ
என்றது

அருகில் வா வா வா என்றது
என்றதோ
என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்

அந்த வானத்திலே ஓர் வெண்ணிலவு
மலர் மஞ்சத்திலே ஓர் பெண்ணிலவு
அந்த வானத்திலே ஓர் வெண்ணிலவு
மலர் மஞ்சத்திலே ஓர் பெண்ணிலவு

புது வாழ்க்கையிலே வரும் முதலிரவு
அது மலருக்கும் வண்டுக்கும் தேனிலவு
ஓ ஹோ ஹோ ஹோ ஹோ

உறவு ஹோ ஹோ ஹோ ஹோ என்றது
என்றதோ
என்றது
அருகில் வா வா வா என்றது
என்றதோ
என்றது
ஹோ ஹோ ஹோ ஹோ

ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்

ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற
ஒரு நாளுக்கு நாள் உடல் மெருகேற
அந்த நாடகத்தால் இதழ் நிறம் மாற

அவர் தோளுக்கு தோள் கண்ட சுகம் கூற
அரை தூக்கத்தில் இருந்தார் மனமார
ஹோ ஹோ ஹோ
உறவு ஹோ ஹோ ஹோ  என்றது
என்றதோ
என்றது
அருகில் வா வா வா என்றது
என்றதோ
என்றது

ஒருவன் காதலன்
ஒருத்தி காதலி
ஒருவன் காதலன்

செவ்வாய், 6 மே, 2014

கனாக் காணும் கண்கள் மெல்ல

வழக்கம் போல K பாலசந்தரும் M S விஸ்வனாதனும் இணைந்தால் உண்டாகும் .அற்புதம்தான் .இந்தப் பாடல். எஸ் பி பி இனிமைக்கு இனிமை சேர்த்திருக்கிறார்.
ஆனால் தொடர்ந்து வரும் இந்தி பாடல் ஏனோ இந்த பாடலை லேசாக ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.


திரைப்படம்: அக்னி சாட்சி (1982)
இயக்கம்: K பாலசந்தர்
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: சிவகுமார், சரிதா
பாடல்: வாலி
குரல்: எஸ் பி பி



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU0ODg2Nl9Ic0xZcF9kYjc3/Kana%20kanum%20Kangal-Agni%20Saatchi.mp3















கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ
குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ
நொடியில் நாள்தோரும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி
விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே
நிழல் போலத் தோன்றும் நிஜமே


நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான் உன் நிழல் விழுந்த இடத்தின் மண்ணைக்கூட
நெற்றியில் நீருபோல் திரு நீருபோல் இட்டுக்கொள்கிறேன்

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே

புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
புதிய கவிதை புனையும் குயிலே நெஞ்சில் உண்டான காயம் என்ன
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று நிகழ்காலம் கூறும் கண்ணே
நிகழ்காலம் கூறும் கண்ணே

கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே


ஞாயிறு, 4 மே, 2014

நேரம் பௌர்ணமி நேரம்

 எப்போதும் படப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து படங்களை வழங்கிய எம் ஜி யாரின் இனிமையான பாடல் அழகு குரல்களில்.

திரைப் படம்: மீனவ நண்பன் (1977)
இசை: M S விஸ்வநாதன்
குரல்கள்: எஸ் பி பி, வாணி ஜெயராம்
இயக்கம்: C V ஸ்ரீதர்
பாடல்: வாலி
நடிப்பு: எம் ஜி யார், லதா



http://asoktamil.opendrive.com/files/Nl8zNzg5OTg1OV9qS2pVVF81ZmM2/neram%20pournami%20neram.mp3











நேரம் பௌர்ணமி நேரம்
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

இளம் தென்றல் காற்றும்
குளிர் கொண்டு வாட்டும்
இளம் தென்றல் காற்றும்
குளிர் கொண்டு வாட்டும்
இதயம் கிடந்து தவிக்க

அஹா

இணையும் வரையில் துடிக்க

ஓஹோ
இளமை கவிதை படிக்க
நேரம் பௌர்ணமி நேரம்
உறவு என்னும் சிறு நடனம்
மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

வான் படைத்த மேகம்
தான் கொடுத்த நீலம்
வான் படைத்த மேகம்
தான் கொடுத்த நீலம்
மீன் படைத்த கண்ணில்
மிதப்பது என்ன தாகம்

தேன் படைத்த பூவும்
தேடி வந்த காற்றும்
தேன் படைத்த பூவும்
தேடி வந்த காற்றும்
நான் படைத்த இன்பம்
என்னவென்று காட்டும்

இன்றும் இன்னும் இன்னும்
இன்பரசம் காண வேண்டும்

பெண்மனசு கொஞ்ச கொஞ்ச
நாண வேண்டும்

நேரம் பௌர்ணமி நேரம்

உறவு என்னும் சிறு நடனம்

மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

தென்னை கொண்ட நீரும்
திராட்சை கொண்ட சாரும்
தென்னை கொண்ட நீரும்
திராட்சை கொண்ட சாரும்
உன்னிடத்தில் ஊறும்
என்னிடத்தில் சேரும்

பூவிதல்கள் நான்கும்
பார்த்து பார்த்து எங்கும்
பூவிதல்கள் நான்கும்
பார்த்து பார்த்து எங்கும்
பால் முகத்தில் தேங்கும்
பழரசத்தை வாங்கும்

மிச்சம் என்ன உள்ளதென்று
பார்க்க வேண்டும்

அச்சம் வெட்கம் விட்டபின்பு
கேட்க வேண்டும்

நேரம் பௌர்ணமி நேரம்

உறவு என்னும்
சிறு நடனம்

மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்

வெள்ளி, 2 மே, 2014

எத்தனை எத்தனை இன்பமடா இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

கல்யாண் குமார் எழுபதுகளில் எல்லாவற்றையும் இழந்து விட்டு சொந்த வீடு கார் எதுவும் இல்லாமல் நான் சந்தித்த தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமாக இருந்தவர் . சாகும் வரை அதே நிலை தான் . நாற்பது வருடங்களுக்கு மேல் சென்னையிலேயே தான் கல்யாண் குமார் வாழ்ந்திருக்கிறார் .
அதே சமயம் ஸ்ரீதர் அந்தஸ்திலிருந்த பிற கதாநாயகர்கள் ஜெமினி ,சிவாஜி , எம்ஜியார் ஆகியோருடன் மட்டுமல்ல கமல் ,ரஜினி என்ற வரை “Rapport” சரியாக Maintain பண்ணியிருக்கிறார். சினிமாவில் மனித உறவுகள் இந்த அளவுக்கு தான் என்கிறார் திரு R P ராஜநாயஹம் தனது பதிவில்.

வைர வரிகள் கொண்ட பாடல். யார் எழுதியது எனத் தெரியவில்லை.

திரைப் படம்: யாருக்கு சொந்தம் (1963)
இசை: K V மகாதேவன்
இயக்கம்: K V  ஸ்ரீனிவாசன்
பாடியவர்: பி பி ஸ்ரீனிவாஸ்
நடிப்பு: கல்யாண்  குமார், தேவிகா
பாடல்: 

http://asoktamil.opendrive.com/files/Nl8zNjcwOTY1OF9KdHVEUV82MWE0/Ethanai%20Ethanai%20Inbamada-Yarukku%20Sontham.mp3







எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
எத்தனை எத்தனை இன்பமடா

இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

மரம் படைத்தான் ஒரு கொடி படைத்தான்
அந்த மரத்தைத் தழுவி அதை படர வைத்தான்
படர வைத்தான்
மரம் படைத்தான் ஒரு கொடி படைத்தான்
அந்த மரத்தைத் தழுவி அதை படர வைத்தான்


மலர் படைத்தான் நறு மணம் கொடுத்தான்
அதில் வடியும் தேனையும் உனக்களித்தான்
மலர் படைத்தான் நறு மணம் கொடுத்தான்
அதில் வடியும் தேனையும் உனக்களித்தான்

எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

உன்னை படைத்தான் ஒரு பெண்ணை படைத்தான்
காதல் உறவு கொள்ளவும் வழி வகுத்தான்
வழி வகுத்தான்
பொன்னை படைத்தான் பல பொருள் படைத்தான்
இந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான்
பொன்னை படைத்தான் பல பொருள் படைத்தான்
இந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான்

எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

கண் கொடுத்தான் நீ காண்பதற்கு
பல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு
களிப்பதற்கு
கண் கொடுத்தான் நீ காண்பதற்கு
பல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு
 
மனம் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு
நல்ல மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு
மனம் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு
நல்ல மதி கொடுத்தான் எண்ணிப் பார்ப்பதற்கு

எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
ஹா ஹ ஹ ஹ ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ