பின்பற்றுபவர்கள்

வாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்

ரொம்ப சிரமமான பாடலிது. பாடிய இருவரும் வெற்றிகரமாக பிரமாதமாக்கிவிட்டார்கள் . இவர்களின் வயதில் இப்படி பாடுவது ஒரு சாதனைதான்.
ஆனால் பாடலுக்கேற்ற உடையமைப்பில்லை. கர்னாடக இசையின் அடிப்படையில் அமைந்த பாடலுக்கு இந்த மாதிரி உடைகள்.
தமிழ் திரைப் படக் கனவுக் காட்சி. அப்படித் தான் இருக்கும்.

திரைப்படம்: சிரித்து வாழ வேண்டும் (1974)
பாடகர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் , S.ஜானகி
இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
நடிப்பு: எம்.ஜி,ஆர் , லதா
இயக்கம்: S S பாலன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MzkzMF91N2ZKdF85MmFh/Konja%20Neram%20Ennai%20Marandhen.mp3






ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்  
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
ஸ்  ஆ

கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
அந்தப் பார்வை எந்தன் மீதோ
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்
ஸ் ஆ
 

 செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக ஆ...ஆ...ஆ...
ஆ...ஆ...ஆ...
செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக
தந்திட வந்தேன் காணிக்கையாக
காணிக்கை ஏது நான் தரும் போது
காணிக்கை ஏது நான் தரும் போது
காதலில் சுவை ஏது நான் வழங்காது

கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன் ஸ்...ஆ...

நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக
இருப்பவள் இளமேனி எந்நாளும் உனக்காக
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
ஆடவர் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்
 நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்
நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் ஆ...ஆ...ஆ...

வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே
நான் ஒரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே
மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி
மறைப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி

கொஞ்ச நேரம் நம்மை மறந்தே
குளிர் தென்றல் வர இடம் இல்லை என
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்
கொஞ்ச நேரம் நம்மை மறந்தே ஸ்...ஆ....

வியாழன், 27 டிசம்பர், 2012

முத்துப் பல் சிரிப்பென்னவோ முல்லை பூ விரிப்பல்லவோ

நல்ல இனிமையான பாடல்,இசையமைப்பிலும் கவிதை வரிகளிலும், பாடும் குரல்களினாலும்.  ஆனாலும் படக் காட்சி என்னவோ ஒரு மெச்சூரிடி இல்லாத நடனத்துடன் ஏனோதானோவென இருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் எம் ஜி யாரும் முத்துவும் நடித்தால் மக்கள் எப்படி இருந்தாலும் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது.

திரைப் படம்: பூக்காரி (1973)
நடிப்பு:  மு க முத்து, மஞ்சுளா
இசை:  M S விஸ்வனாதன்
இயக்கம்: பஞ்சு கிருஷ்ணன்
பாடல்: வாலி
பாடியவர்கள்: T M சௌந்தர்ராஜன், P சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2NDA3OV9vSjA0T181NWQy/Muththu%20pal%20siripennavo.mp3







முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
தத்தைக்கு தவிப்பென்னவோ
மெத்தைக்கு வரச் சொல்லவோ
தத்தைக்கு தவிப்பென்னவோ
மெத்தைக்கு வரச் சொல்லவோ
தொட்டுப் பேசும் நாள் அல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ

செவ்வல்லிக் கைத் தொட்டு
சிலை வண்ண மெய் தொட்டு
சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ
செவ்வல்லிக் கைத் தொட்டு
சிலை வண்ண மெய் தொட்டு
சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ
கண்ணா உன் தோள் தொட்டு
கதை சொல்லும் நாள் தொட்டு
காணாத ஆனந்தம் வேறென்னாவோ
முத்தங்கள் இடச் சொல்லவோ
சந்தங்கள் வரும் அல்லவோ
முத்தங்கள் இடச் சொல்லவோ
சந்தங்கள் வரும் அல்லவோ
இந்த மோகம் யார் தந்ததோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ

தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ
ஜவ்வாது பொட்டிட்டு
சதிராடும் பூஞ்சிட்டு
செவ்வாழை மேனியில்
தேன் சிந்துதோ
ஜவ்வாது பொட்டிட்டு
சதிராடும் பூஞ்சிட்டு
செவ்வாழை மேனியில்
தேன் சிந்துதோ
அங்கங்கே நான் தொட்டு
அடையாளம் தானிட்டு
ஆசைகள் ஆயிரம் வேர்விட்டதோ
கண்ணென்ன கலைக் கூடமோ
பெண்ணென்ன பழத் தோட்டமோ
கண்ணென்ன கலைக் கூடமோ
பெண்ணென்ன பழத் தோட்டமோ
வண்ணத் தோகை என் சொந்தமோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ

கன்னங்கள் தென்னங்கள்
கனிவோடு உண்ணுங்கள்
காலங்கள் தோறும் நம் காவியங்கள்
கன்னங்கள் தென்னங்கள்
கனிவோடு உண்ணுங்கள்
காலங்கள் தோறும் நம் காவியங்கள்

முப்பாலில் மூன்றாம் பால்
உருவாகும் உன் அன்பால்
மோகங்கள் காட்டு உன் புன் சிரிப்பால்

அம்மம்மா துடிப்பென்னவோ
அப்பப்பா நடிப்பென்னவோ
அம்மம்மா துடிப்பென்னவோ
அப்பப்பா நடிப்பென்னவோ
இந்த வேகம் ஏன் வந்ததோ

முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
முத்துப் பல் சிரிப்பென்னவோ
முல்லைப் பூ விரிப்பல்லவோ
தங்கப் பாளம் போல் உந்தன் அங்கமோ




வெள்ளி, 30 நவம்பர், 2012

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்

வீரியமிக்க, நாம் கற்பனை செய்ய முடியாத பாடல் வரிகள், கம்பீரமான குரல், அதற்கேற்ற தேவையான அளவு, எந்த விதத்திலும் எரிச்சலை ஏற்படுத்தாத இசை. ஒரு திரை இசை பாடலுக்கு இலக்கணம் வகுத்தப் பாடல். புத்துணர்ச்சியூட்டுகிறது.

திரைப்படம்: படகோட்டி (1964)
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்

http://www.mediafire.com/?czp4zppi85he495



கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மண் குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்
மடி நிறைய பொருளிருக்கும்
மனம் நிறைய இருளிருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று
வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்

செவ்வாய், 20 நவம்பர், 2012

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்


நல்ல கருத்து செறிந்த பாடல். ஒரு நல்ல மனிதரை நினைத்து பாடும் அழகான தெளிவான குரல்.

படம்: அரச கட்டளை (1967)
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா, சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
இயக்கம்:  எம் ஜி சக்கரபாணி
குரல்: P சுசீலா
பாடல் வரிகள்: வாலி

http://www.mediafire.com/?5dovmy3m6q3na6b



என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்
விரிவான்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்
வள்ளல்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

திங்கள், 24 செப்டம்பர், 2012

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்


மென்மையான பின்னனியில் இனிமையான ஸங்கதிகளை தேவையான இடத்தில் புகுத்தி பாடலை மேலும் இனிமையாக்கியிருக்கிறார் இசைதேவன்.

திரைப் படம்: வள்ளி (1993)
இசை: இளையராஜா
குரல்: ஸ்வர்னலதா
பாடல் : வாலி
இயக்கம்: K நட்ராஜ் (ரஜினி என்கிறார்கள் சிலர்)
நடிப்பு: ரஜினிகாந்த், ப்ரியாராமன்



ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்று பட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கனத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

வியாழன், 6 செப்டம்பர், 2012

மலரே பேசு மௌன மொழி மனம் தான் ஒடும் ஆசை வழி


இந்தப் பாடல் தமிழில் சித்ரா அவர்களின் முதல் பாடல் என்பதாக பதிவாகி உள்ளது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி தமிழிலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். எனக்கு பல பெண் பாடகிகளின் குரல்கள் பிடித்தாலும், சுசீலா அம்மாவுக்கு பின் இவர் அவரது இடத்தை நிறைத்ததாகவே உணர்கிறேன்.

திரைபடம்: கீதாஞ்சலி (1985)
நடிப்பு: முரளி, நளினி
இயக்கம்: R சுந்தரராஜன்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
குரல்கள்: இளையராஜா, K S சித்ரா



ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாட வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே

வாசனை பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க

நான் ஒரு பூவோ நீ பறிக்க
நால் வகை குணமும் நான் மறக்க

மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண் கிளியே

மடி மேல் கொடி போல் விழுந்தேனே

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாட வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே


ஏந்திய வீணை நான் இருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க
ராத்திரி நேர ராகம் இது
பூவொடு காற்று பாடுவது
இதழால் இனிமேல் நீ எழுதும்
கதை தான் படிப்பேன் நாள் முழுதும்
படித்தால் எனக்கும் இனிக்காதோ

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஒடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்

மலரே பேசு மௌன மொழி
மலரே

புதன், 29 ஆகஸ்ட், 2012

அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா


மனோ பாடல்களில் ஒரு அழகானப் பாடல். சித்ரா பற்றி சொல்லவே வேண்டாம்.
அரபி இசையின் பின்னனி இனிமை.

திரைப் படம்: மேட்டுகுடி (1996)
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, K S சித்ரா
நடிப்பு: கார்த்திக், நக்மா
இயக்கம்: சுந்தர் C
பாடல்: வாலி அல்லது G தூயவன்



http://www.divshare.com/download/19446192-2df



லல ல ல லல ல ல ஹா  ஹா
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

பனி ரோஜா தோட்டம்தான் ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா
அட இன்னும் தெரியலையா
ஓ ஓ ஓ ஓ
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

என் சேலை சோலைக்குள் முதல் பூவை பறித்தாயே
என்னை மிச்சம் இல்லாமல் நீ அள்ளிக் குடித்தாயே

முதல் பார்வையிலே என்னை நீ கொள்ளை அடித்தாயே
என் உள்ளம் முழுவதிலும் புது வெள்ளை அடித்தாயே
நீ மலரில் பிறந்தவளா
இல்லை நிலவில் வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு
ஒரு ஜன்னல் திறந்தவளா

அட இன்னும் தெரியலையா
நான் உந்தன் துணையில்லையா
ஓ ஓ ஓ ஓ
அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

ஒரு சிற்பியில் முத்தைப் போல் என்னை மூடிக் கொள்வாயா
உன் அழகில் தொலைந்தவனை நீ தேடித் தருவாயா

உன் கனவில் நனைகின்றேன் நீ கொடிகள் தருவாயா
நான் கொஞ்சம் தூங்குகிறேன் நீ தலையனை ஆவாயா

நீ காதல் ஓவியனா
ஒரு கவிதை நாயகனா
நான் தேடும் மன்மதனா
என் அழகின் காவலனா

அட போதும் அம்மம்மா நாம் கைகள் இணைவோமா
ஓ ஓ ஓ ஓ

அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறி போனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா

பனி ரோஜா தோட்டம்தான் ஒரு சேலை கட்டியதா
அட உந்தன் கண் இன்று என் மேலே ஒட்டியதா
நீ கனவா கற்பனையா
அட இன்னும் தெரியலையா
ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ

திங்கள், 30 ஜூலை, 2012

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

மெல்லிய பூங்காற்றுடன் மெல்லிய இசையும், மென்மை குரல்களும் அலுக்காமல் கேட்கலாம்.

திரைப் படம்: வண்டிக் காரன் மகன் (1978)

பாடல்: வாலி
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: அமிர்தம்



Embed Music Files - Free Audio -







http://youtu.be/FOTZBmDgARo









மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

மேனகை போலொரு புன்னகை புது பாட்டே

உன் மேனியின் சாயலோ ஆனந்த நீரூற்றே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே



பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய பழம்

உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய பழம்

உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க தினம்

வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ

ஓடை மீனாட

ஓடை நீர் வேண்டும்

உறவில் நான் ஆட

ஒருவன் நீ வேண்டும்

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே



லா லா ல ல ல ஹா ல ல ல ல ல ல் ல் ல ல ல ல
லா லா ல ல ல

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை

உல்லாச பல்லாக்கில் ஊர்கோலமோ

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை

உல்லாச பல்லாக்கில் ஊர்கோலமோ

நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க இன்னும்

ஊடல்கள் யுவராணி ஒய்யாரமோ

மாலை இடலாமோ

மஞ்சம் வரலாமோ

சேலை தொடலாமோ

கைகள் படலாமோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே



நழுவ நழுவ என்னை தழுவ தழுவ வரும்

வித்தைகள் கன்னா உன் வெள்ளோட்டமோ



மயக்கி மயக்கி பின்பு மறைத்து மறைத்து வைத்தல்

அன்பே உன் செல்வாக்கின் அடையாளமோ



காதல் விளையாட

காவல் கிடையாதோ

காவல் தடைப்போட்டால்

ஆவல் மீறாதோ



மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

வியாழன், 26 ஜூலை, 2012

அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை

திரு கோவை ரவி அவர்களுடன் நாமும் இந்த இனிய பாடலை கேட்டு மகிழ்வோம்.


திரைப் படம்: நட்சத்திரம் (1980)
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல்: வாலி
இயக்கம்: தாசரி நாராயண ராவ்
நடிப்பு: கமல், ஸ்ரீபிரியா





அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவொரு நடமாடும் பொன்மகள்
ரஞ்சனி சிவரஞ்சனி சிவரஞ்சனி

கரும்புகள் தென்மொழி, அரும்புகள் புன்னகை
கரும்புகள் தென்மொழி, அரும்புகள் புன்னகை
என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள் போல் இங்கே எவரும் இல்லை
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ் சங்க கீதம்
ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ் சங்க கீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதிகாலையில் வரும் பூபாள ராகம்
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

அவள் சிங்கார பூங்குழல் ஆவணி மேகம்
தேனுலாவிடும் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் வேகம்
தாமரை பூவின் சூரிய தாகம்
காலமே அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே
தாளமே அவள் கால்கள் கேட்டபடி தாவுமே
மொழியோ ஆலய சங்கொலி
இடையோ அசைந்திடும் கிங்கிணி
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
ஆ ஆ ஆ ஆ
அவள் தஞ்சை தரணியில் கொஞ்சும் அழகிய கோவிலன்றோ
நான் அவள் பக்தனன்றோ
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

ஞாயிறு, 17 ஜூன், 2012

இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள்


இனிமையான கர்னாடக இசை. அழகான குரல்கள் மற்றும் கவிதை வரிகள். அசத்தும் பாடல். அபூர்வ பாடல்.

திரைப் படம்: சவுந்தர்யமே வருக வருக
இசை: விஜயபாஸ்கர்
பாடியவர்கள்: சுசீலா, வாணி ஜெயராம், ஜாலி ஆப்ரகாம்
பாடல்: வாலி
நடிப்பு: சிவசந்திரன், ஸ்ரீப்ரியா.








இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அவள் அவனது அணைப்பில்
அவன் அவளது இணைப்பில்
மோகம் அமோகம்
அம்மாடி இத்தேகம் துயில் கொள்வதேது
தலைவன் தலைவியில் மடியிலே
தலைவி தலைவனின் பிடியிலே
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

சரிகம பமக தமக சனிதப
பமமமமம
இதழ் இதழொடு படிக்க
அதில் சுதிலயம் பிறக்க
கீதம் சங்கீதம்
உண்டாகும் வினோதம்
இசை வெள்ளம் ஓடும்
ஒருவர் ஒருவராய் நனைந்திட
உலகம் முழுவதும் குளிர்ந்திட
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பறிக்காமல் மணக்க
பனித் தாமரை சிரிக்க
அவள் வந்து மயக்க மயக்க
மயக்க மயக்க
அவன் தன்னை மறக்க மறக்க
மறக்க மறக்க
ஒரே போதையில் லயிக்க
ஒரே பாதையில் நடக்க
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அவள் கன்னம் சிவக்க
அவன் முத்திரை பதிக்க
அவள் ஒன்று கொடுக்க கொடுக்க
கொடுக்க கொடுக்க
அவன் ஒன்று எடுக்க எடுக்க
எடுக்க எடுக்க
அதே ஆசைகள் வளர்ந்து
அதில் ஓசைகள் விளைந்து
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

காலத்திற்கேற்ற நல்ல இளமை துள்ளும் பாடல் நல்ல தமிழில்.


திரைப் படம்: தங்க மகன் (1983)
இயக்கம்: A ஜெக நாதன்
நடிப்பு: ரஜினி, பூர்ணிமா பாக்யராஜ்
இசை:இளையராஜா
குரல்கள்: S P B, S ஜானகி
பாடல்: வாலி



ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ


வீணை என்னும் மேனியிலே
தந்தி என்னை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வீணை என்னும் மேனியிலே
தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசி ஆற மாலையிலே பரிமாற

வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழை இலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ

திங்கள், 2 ஏப்ரல், 2012

வந்தாள் மகாலக்ஷ்மியே என்றும் அவள் ஆட்சியே


அருமையான பாடல்.  S P B அனைத்து வித வித்தைகளையும் இந்தப் பாடலில் காட்டியுள்ளார். ஜனரஞ்ஜகமான பாடல். இளையராஜாவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

திரைப் படம்: உயர்ந்த உள்ளம் (1985)
இயக்கம்: S P  முத்துராமன்
நடிப்பு: கமல், அம்பிகா
பாடல்: வாலி






வந்தாள் மகாலக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியெனின் குடி வாழ நலம் வாழ குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்
பண்டிகை நாள் பார்த்து ஹா ஹா பொங்கலிட்டாள்
பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்
காமாட்க்ஷியோ மீனாக்ஷியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து உலவி நடந்து
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே ஹா ஹா

நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூ வண்ணம்
கண்டேன் சிங்கார கை வண்ணம்
தொட்டால் எல்லாமே பொன் வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன்
சபாஷ்
ஆ ஆ ஆ ஆ ஹா ஆ ஆ ஆ ஹா  ஆ ஆ ஆ
தக்தி தரி நிஸா கரி நிஸா கரி நிஸா ரி ரி ரி ரி ரி த்ப ம ச திட தப திட தப சனி  ச ச ச ச சா சா ப ப ப ப ப சரி சரி சரி சரி ரி ரி ரி ரி ரி ரி ரிகரிச ரிகரிச ரிகரிச ப ப ப ப ம ம ம ம ம த த த த நி நி நி நி சப்தப்த  நிசப்த நிசானி ரிகரி நின்னி தன்னிப சனித
ஆகா ஆகா ஆகா
ப ப ப ப ப ப ட ட ட ட ட ட நி நி நி நி நி ச
ப ப ப ப ப ப ட ட ட ட ட ட நி நி நி நி நி ச

என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
தெய்வீகமே பெண்ணானதோ
நான் காணவே தேர் வந்ததோ
மங்களம் பொங்கிடும் மந்திர புன்னகை இதழில் வழிய இளமை விளைய
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே ஹாஹா
அடியெனின் குடி வாழ நலம் வாழ குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ