பின்பற்றுபவர்கள்

ஸ்வர்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்வர்னா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஆகஸ்ட், 2012

முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

10 நாட்கள் திடீர் சென்னை பயணம். கல்யாண வேலைகள், அலைச்சல் காரணமாக இந்த நீண்ட இடைவெளி. அடுத்தவாரம் தொடர்ந்து சந்திப்போம். புதிதாக இணைந்த அன்பர்களுக்கும் தொடர்ந்து பாடல்களை ரசித்து கருத்துகளை வழங்கி வரும் அன்பர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

இன்றும் ஒரு இனிமையான பாடல்.  முழு படமும் இன்று கிடைத்து முழு பாடலையும்  இங்கே  பதிவேற்றி இருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

திரைப் படம்: புத்திசாலிகள் (1968)
நடிப்பு:  ஜெயஷங்கர், M A ராதிகா, மனோரமா
இயக்கம்: அருண்
இசை: V குமார்
பாடியவர்கள்: T M S, Y ஸ்வர்னா
பாடல்: வாலி


Listen Music Files - Embed Audio Files -








முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

நித்தம் நித்தம் தந்தேன் அல்லவோ

கண்ணா கண்ணா உன் வேகமென்ன

கன்னம் கன்னம் புண்ணானதென்ன

இன்னும் தந்தால் பெண் என்னாவதோ

முத்தம் முத்தம்

இதயத்திலே ஒரு கதவிருக்கும்

இரவு பகல் அது திறந்திருக்கும்

விழிகளிலே வரும் வழி இருக்கும்

வாவெனவே மனம் அழைத்திருக்கும்

இதழ்ச் சுவையோ இல்லை மதுச் சுவையோ

ஓ  ஓ  ஓ  ஓ  ஓ  ஓ

இதழ்ச் சுவையோ இல்லை மதுச் சுவையோ

பிடி இடையோ இல்லை மலர் கொடியோ

குறு நகையோ அது சிறு கதையோ

குறு நகையோ அது சிறு கதையோ

காலமெல்லாம் வரும் தொடர் கதையோ

முதன் முதலாய் என்ன அறிமுகமோ

ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ

முதன் முதலாய் என்ன அறிமுகமோ

கலைகளிலே நல்ல அனுபவமோ

ரஸிப்பதிலே இது புது விதமோ

ரகஸியமாய்த் தொட சுகம் வருமோ

முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

நித்தம் நித்தம் தந்தேன் அல்லவோ

கண்ணா கண்ணா உன் வேகம் என்ன

கன்னம் கன்னம் புண்ணானதென்ன

இன்னும் தந்தால் பெண் என்னாவதோ

லலா லாலா  லாலா








திங்கள், 16 ஜூலை, 2012

ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு


திரைப் படம்: நங்கூரம் (1979)
பாடியவர்கள்: S P B, ஸ்வர்னா
பாடல்: கண்ணதாசன்
இசை : V குமார் & காமதாசா
இயக்கம்: திமோதி வீரரத்னே
நடிப்பு: முத்துராமன், லக்ஷ்மி


Embed Music Files - Play Audio -











ம் ம் ம் ம் ம் ஆஹா ஆஹா ஆ ஆஹா
ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு
ஆஹா ஆஹஹ .ஹா ஆ ஆ.ஹா
ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

கோடி வார்த்தைகளை சேர்த்து
வைத்துக் கொண்ட உள்ளம்
ஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நினைக்கிறேன் சொல்ல மொழி இல்லை
எனக்குத்தான் என்ன நாணமோ
நீயும் மௌனராகம்
நானும் மௌனகீதம்
நீயும் மௌனராகம்
நானும் மௌனகீதம்
சொன்னால் ஏற்றுக்கொள்வாய்
என்னால் முடியவில்லை

 ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது
மனம் ஓடும் கேள்வி கேட்டு

அந்தி நேரம் உந்தன் மஞ்சள் மேனிதனைக்
கண்டு இந்த நெஞ்சில் அணை போல வந்த சுகம் உண்டு
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மழையிலே கொஞ்சம் நனைகிறேன்
வெயிலிலே கொஞ்சம் காய்கிறேன்
பனியே அதிகமானால் அதுவே அனலுமாகும்
பனியே அதிகமானால் அதுவே அனலுமாகும்
இல்லை என்று சொல்ல நீயும் வேறு அல்ல

 ஒரு பார்வை பார்க்கும் போது
உயிர் பாடும் நூறு பாட்டு
மறு பார்வை பார்க்கும் போது மனம்
ஓடும் கேள்வி கேட்டு
 மனம் ஓடும் கேள்வி கேட்டு