பின்பற்றுபவர்கள்

A பீம்சிங்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
A பீம்சிங்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 டிசம்பர், 2012

தண் நிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க

இன்னுமொரு அழகானப் பாடல் சுசீலா அம்மாவிடமிருந்து. மனதிற்கினிய மெல்லிசை இரட்டையர்கள் இசையில் ஆஹா என்ன சுகம் என்கிறது பாடல்.
இது மாயவனாதனின் மற்றுமொரு பாடல்.

http://www.mediafire.com/?v6apqrd65ykt92e



திரைப் படம்: படித்தால் மட்டும் போதுமா (1962)
பாடியவர்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: மாயவனாதன்
இயக்கம்: பீம்சிங்க்
நடிப்பு: சிவாஜி, பாலாஜி, சாவித்திரி

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்
நாணி நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

நெஞ்சமதில் அலை எழும்ப
தஞ்ச மலர் அடி கலங்க
நெஞ்சமதில் அலை எழும்ப
தஞ்ச மலர் அடி கலங்க
அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள்
அங்கு அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள்
நினைந்து நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

விண்ணளந்த மனம் இருக்க
மண்ணளந்த அடி எடுக்க
விண்ணளந்த மனம் இருக்க
மண்ணளந்த அடி எடுக்க
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள்
ஒரு பூவளந்த முகத்தை கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

ஆஹ ஹா  ஆ ஆ ஆஹ ஹா  ஹோ ஹோ ஹோ ஹோ 

பொட்டிருக்க பூவிருக்க
பூத்த மலர் மணமிருக்க
பொட்டிருக்க பூவிருக்க
பூத்த மலர் மணமிருக்க
கட்டிலுக்கும் மிக நெருங்கி வந்தாள்
இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்

தண் நிலவு தேனிறைக்க
தாழை மரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்

வெள்ளி, 29 ஜூன், 2012

வரச் சொல்லடி அவனை வரச்சொல்லடி அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்


நல்ல தமிழிலில் சுவையான இசையில் அழகான குரலில் ஒரு நல்ல வேகமான பாடல்.

திரைப் படம்: பாதுகாப்பு
குரல்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: A பீம்சிங்க்
நடிப்பு: சிவாஜி, ஜெயலலிதா



http://asoktamil.opendrive.com/files/Nl8zNzYxNTQ0OF9BZmJ6TF83MjRk/varacholladi%20anthi%20maalai.mp3








வரச் சொல்லடி அவனை வரச்சொல்லடி  
அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்லடி 
என் வாயார ஒரு முத்தம் நானாக தர வேண்டும்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி

தெய்வானை போல் என்னை நினைத்தாலென்ன
என் செந்தூரம் கரைந்தோட அணைத்தாலென்ன
கையோடு கைகொஞ்சம் கலந்தாலென்ன
கையோடு கைகொஞ்சம் கலந்தாலென்ன
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தாலென்ன
நான் கல்யாண சுகம் யாவும் அறிந்தாலென்ன
வரச் சொல்லடி
அந்தி மாலைதனில் அவனை வரச்சொல்லடி

மலைக்கோவில் குமரேசன் அறியாததா
என் மடியென்ன கதை சொல்ல தெரியாததா
கலைக்கோவில் அவன் காண முடியாததா
அது கனிவானதா கொஞ்சம் பதமானதா

வந்தானை சேலையொடு முந்தானை
காதலொடு கண்டானை தேனருவி கொண்டானை
வந்தானை சேலையொடு முந்தானை
காதலொடு கண்டானை தேனருவி கொண்டானை
பக்தி சுவையுடன் தித்திதொரு இதழ்
முத்துத் தருமென நின்றானை
வள்ளிக் குறமகள் அள்ளிப் பருகிட
பள்ளித் தலம் வரை சென்றானை
முருகனை குமரனை கந்தனை வேலனை
முருகனை குமரனை கந்தனை வேலனை
வசந்தம் நிறைந்து மயங்கும் இரவில்
மானிவள் ஆனந்த சாலைக்கு
வரச்சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாக தர வேண்டும்
வரச்சொல்லடி அவனை வரச்சொல்லடி
அவனை வரச்சொல்லடி