பின்பற்றுபவர்கள்

T ராஜேந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
T ராஜேந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்


மீண்டும் நமது T ராஜேந்தர். மறக்ககூடியவரா அவர். மற்றவரின் இயக்கத்தில்
T ராஜேந்தர் எழுதி இசையமைத்த பாடல். உயர்ந்த கவிதை வரிகளுடன் ஒரு இனிமையானப் பாடல்.

திரைப் படம்: கிளிஞ்சல்கள் 1981
குரல்கள்: S ஜானகி, Dr கல்யாண்
பாடல், இசை: விஜய  T ராஜேந்தர்
நடிப்பு: மோகன், பூர்ணிமா ஜெயராம்
இயக்கம்: துரை



http://www.divshare.com/download/19482124-b71



ப பப ப பப ல ல ல ல
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
Julee I love you
ஹா ஹா ஹா ஹா
Julee I love you
ஹா ஹா ஹா

ப ப பம் ப ப பம் ப ப பம் ப ப பம்
Julee I love you
ஆஹா ஆஹா ஆஹா
Julee I love you

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம்
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திரு உருவம்
மன வீணயிலே நாதமீட்டி
கீதமாக்கி நீந்துகின்ற தலைவா
இதழ் ஓடையிலே வார்த்தை என்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்
Julee I love you
ஹா ஹா ஹா
Julee I love you
ஆஹ் ஆஹ் ஆஹ்

பப ப ப
நினைவென்னும் காற்றினிலே
மனம் என்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
உன் நினைவென்னும் காற்றினிலே
மனம் என்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

மது மாலையிலே மஞ்சள் வெய்யில் கோலமென
நெஞ்சம் அதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென்ன
உள்ளம் அதில் நீ பொங்க
விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம், அரங்கில் ஏறுதாம்
ஓஹ் ஓஹ்
Julee I love you
Julee I love you
ஹா

புதன், 4 ஜூலை, 2012

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்


மீண்டும் வருகிறார் நமது T ராஜேந்தர். இப்போதும் ஒரு இனிய தமிழிலில் மனதை மயக்கும் இசையில் வளமையான குரல் கொண்ட ஒரு பாடலுடன்.

திரைப் படம்: ரயில் பயணங்களில் (1981)
இயக்கம், பாடல், இசை: T ராஜேந்தர்
பாடியவர்: P ஜெயசந்திரன்
நடிப்பு: ஸ்ரீ நாத்,  ஜோதி




http://www.divshare.com/download/18549245-52f





ல ல ல ல ல ல ல
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதி தனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
ல ல ல ல ல ல ல ல லலா

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனதினில் கமழ்வது தமிழினமோ
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனதினில் கமழ்வது தமிழினமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்
மலையில் நெளியும் மேககுழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோத பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
ல ல ல ல ல ல ல ல லலா

மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா
மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா அம்மம்மா
சுருள்வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடென்னும் கூந்தலை இடைவரை கண்டவளே
சுருள்வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடென்னும் கூந்தலை இடைவரை கண்டவளே
நூல் தாங்கும் இடையாள் கால் பார்த்து நடக்க நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தை போலே தேகத்தை ஆக்கி குழல்கட்டே  ஜாலம்
பாவை சூடும் ஆடை கூட பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி இதழ்கள் ஊறுமடி
இதழ் கள் ஊறுமடி

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதி தனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்

வெள்ளி, 11 மே, 2012

குத்து விளக்காக குல மகளாக நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்


நீண்ட இடைவேளைக்குப் பின் சந்திப்பதில் சந்தோஷம். இனி இடைவெளி இன்றி பாடல் தரமேற்றுதல் இடம் பெறும் என நான் நம்புகிறேன்.
இந்த இனிமையான பாடலுடன் நிகழ்ச்சியை தொடருவோமாக. பாடகர்களின் அனுபவ முதிர்ச்சி பாடலில் தெரிகிறது. இனிமை சேர்க்கிறது.

திரைப் படம்: கூலிக்காரன் (1987)
நடிப்பு: விஜயகாந்த், ரூபிணி
குரல்கள்:   S P B, S ஜானகி
இசை: T ராஜேந்தர்
இயக்கம்: ராஜசேகர்    



http://www.divshare.com/download/17114641-6be




http://www.divshare.com/download/17114552-4c2

குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்
என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா
ஒளி சிந்த வந்த தேரே
என் உள்ளந்தன்னில் ஓடும் தேனே
   
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்

பல வண்ணப் பூக்கள் பாடுது பாக்கள்
அது ஏன் தேன் சிந்துது
அது நீ பூயென்குது

பூவிலூறும் வண்டு போதை ஒன்று கொண்டு
அது ஏன் திண்டாடுது
போதை தான் பண்பாடுது

சோலைக்கொரு வசந்தம் போல் நீ வந்தாய்
காளைக்கென்றும் சொந்தம் என்று நீ ஆனாய்

நீ நேசம் தர அதில் நான் வாசம் பெற
குத்து விளக்காக குலமகளாக
உன் நெஞ்சின் ஓரம்
எனை ஏற்ற நேரம்

ரகசிய கனவு கண்ட இந்த இரவு
ஏன் நம்மை வாட்டுது
அது ஏன் சூடேற்றுது

பொட்டு வைத்த நிலவு புத்தம் புது உறவு
இன்று ஏன் தடுமாறுது
சுகம் தான் பரிமாறுது

பௌர்ணமி முற்றத்திலே வெளிச்சம் தான்
பைங்கிளி முத்தம் பெற

கூச்சம்தான்

நானும் மெல்ல அள்ள
நானம் உன்னை கிள்ள

குத்து விளக்காக குல மகளாக
உன் நெஞ்சின் ஓரம்
எனை ஏற்ற நேரம்

என் வானிலே நீ வெண்ணிலா
நட்சத்திரம் உன் கண்ணிலா

உனக்கென பிறந்தேனே
உன் தோளில் என்றும் தவழ்வேனே  
   
குத்து விளக்காக குல மகளாக
நீ வந்த நேரம் நான் பாடும் ராகம்



செவ்வாய், 20 மார்ச், 2012

ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

வழக்கம் போல் T ராஜேந்திரனின் கலக்கல் பாடல் ஒன்று. ஈடு இணை இல்லாத  இசையும் பாடலும். S P B யும் கலக்கி இருக்கிறார்.

திரைப் படம்:  மைதிலி என்னை காதலி
நடிப்பு: அமலா
இசை, இயக்கம், பாடல் வரிகள்: T ராஜேந்தர்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
தத்த தகதிமி தத்த தகதிமி தத்த தகதிமிதோம்
தா குஜ ஜம் தரி தா
தத குத ஜம் தரி தை
தா குஜ ஜம் தரி
தத குத ஜம் தரி
தத்ததீங்கனத்த
ததீங்கனத்த
ததீங்கனத்த தா
தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்தனவோ
இதை கண்ட வேகத்தில் ப்ரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து இரு
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
மனமெங்கும் மணம் வீசுது
எந்தன் மனமெங்கும் மணம் வீசுது
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
தித்தா திகி திகி தித்தா திகி திகி
தித்தா திகி திகி தித்தா திகி திகி
ரிக தான தானதா ரிக தான தானதா
ரிக தான தான

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்
கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு