பின்பற்றுபவர்கள்

P ஜெயசந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
P ஜெயசந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 நவம்பர், 2012

முத்து ரதமோ முல்லைச் சரமோ


ஜெயசந்திரன் மற்றும் வாணி ஜெயராம் குரலில் மற்றுமொரு இனிமையான பாடல் இங்கே.

திரைப்படம்: பொன்னகரம் (1980)
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: மாதங்கன்
நடிப்பு: சரத் பாபு, ஷோபா














முத்து ரதமோ முல்லைச் சரமோ
முத்து ரதமோ முல்லைச் சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு

முத்து முகமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு

உனது பார்வை எனது பாடல்
தினமும் நான் பாட
நினைவில் கனவில் சுகமோ
உலக நிலையை மறந்து கொஞ்சம்
விண்ணில் நான் ஆட
அமுத கனிகள் தருமோ
இரவுக் காலம் நிலவுக் கோலம்
இதயம் மயங்காதோ
உறவுத் தேரில் உரிமை போரில்
என்னை இழுக்காதோ

முத்து முகமோ மோக சுகமோ
முன்னே வந்த மூன்று தமிழோ
கண்ணா நீ கவிபாடு

வானில் வசந்தம் தேனின் சுவைபோல்
நேரில் வாராதோ
உறவில் கலைகள் வளரும்
மனதில் பேதம் அதிக தூரம்
கண்ணில் தெரியாது
தினமும் சுவைகள் மலரும்
உலக மயக்கம் விலகும் நேரம்
பருவம் விழிக்காதோ
உறவும் என்ன பகையும் என்ன
காலம் மாறாதோ

முத்து ரதமோ முல்லைச் சரமோ
மூன்று கனியோ பிள்ளைத் தமிழோ
கண்ணே நீ விளையாடு
காதல் உறவாடு

புதன், 1 ஆகஸ்ட், 2012

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

வழக்கமான இனிய ஜெயசந்திரன் குரல் தேனொழுகும் சுனந்தா குரலுடன். பாடலின் ஒரு சில வரிகளில் ஒரு vibration இருப்பதை கவனியுங்கள். இனிமை.


திரைப் படம்:என் புருசந்தான் எனக்கு மட்டும்தான் (1989)
இயக்கம்: மனோபாலா
நடிப்பு: விஜயகாந்த், சுஹாஸினி, ரேகா
இசை: இளையராஜா







பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

ஓம் மாங்கல்யம் தந்துனா நென

மமஜீவன ஹெதுனா

கந்தெ பத்ரானி ஷுபகே

த்வம் தீய ஷரதம் ஷுபம்

மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்

கைதீண்டினால்தான் கல்யாணி பாடும்

எழுதாத புது இலக்கியம் உயிர் காதலில் விளையும்

இதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும்

மேளம் முழங்கவும் மாலை வழங்கவும் வேளை வருகையிலே

பாயை விரித்திடும் பாட்டு படித்திடும் கான கருங்குயிலே

ஆசை குளத்தினில் நீந்தி குளிக்கையில் ஆனந்த பூஜை தொடங்குமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாடெழுதும் வண்ணப் புறா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி

நான் கொண்ட கண்கள் நாளாச்சி தூங்கி

நிறுத்தாமல் மலர் கணைகளை விடும் வாலிபம் இதுதான்

அரங்கேற தினம் இரவினில் வரும் நாடகம் இதுதான்

பிள்ளை பிறந்ததும் பள்ளியறைக் கொஞ்சம் மூடிக் கிடக்கட்டுமே

கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம் ஆடிக் கிடக்கட்டுமே

மூச்சு இருக்கின்ற காலம் வரையினில் மோகத்தின் வேகம் குறையுமோ

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா

பூமுடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

வெள்ளி, 20 ஜூலை, 2012

கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை


இந்த திரைப் படம் வெளிவரவில்லை என நினைக்கிறேன். இசையமைப்பாளரும் புதுசு. பாடலும் அரிதானது.

திரைப் படம்: பொம்பள மனசு (1980)
இசை: ரத்னா சூரியன்
குரல்: P ஜெயசந்திரன்




Upload Music - Audio Hosting - Kadal Alai kaalgalai



கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்று தந்தாள் இந்த கன்னி அலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்று தந்தாள் இந்த கன்னி அலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

காதலென்னும் ஒரு ஆல விதை
கருகியே போவது நியாயமில்லை
காதலென்னும் ஒரு ஆல விதை
கருகியே போவது நியாயமில்லை
ஏங்கியே கேட்கிறேன் கோடி முறை
ஏங்கியே கேட்கிறேன் கோடி முறை
ஏனடி நமக்குள்ளே வெட்க திரை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

உள்ளத்தில் நினைக்கையில் இனிப்பு தந்து
உதட்டினில் மட்டும் ஏன் உப்பு தந்தாய்
உள்ளத்தில் நினைக்கையில் இனிப்பு தந்து
உதட்டினில் மட்டும் ஏன் உப்பு தந்தாய்
தித்திக்கும் தேன் தமிழ் புதுக் கவிதை
தித்திக்கும் தேன் தமிழ் புதுக் கவிதை
நீயே சொல்லடி ஓர் பதிலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

கன்னத்தில் நான் இட்ட முத்தங்களை
கை கொண்டு நீயோ துடைத்து விட்டாய்
கன்னத்தில் நான் இட்ட முத்தங்களை
கை கொண்டு நீயோ துடைத்து விட்டாய்
உன் எண்ணத்தில் நான் இட்ட முத்தங்களை
உன் எண்ணத்தில் நான் இட்ட முத்தங்களை
எது கொண்டு நீயும் துடைத்திடுவாய்

கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை
சத்தமில்லாத முத்தங்களை
கற்று தந்தாள் இந்த கன்னி அலை
கடல் அலை கால்களை முத்தமிடும் புதுகலை

புதன், 4 ஜூலை, 2012

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்


மீண்டும் வருகிறார் நமது T ராஜேந்தர். இப்போதும் ஒரு இனிய தமிழிலில் மனதை மயக்கும் இசையில் வளமையான குரல் கொண்ட ஒரு பாடலுடன்.

திரைப் படம்: ரயில் பயணங்களில் (1981)
இயக்கம், பாடல், இசை: T ராஜேந்தர்
பாடியவர்: P ஜெயசந்திரன்
நடிப்பு: ஸ்ரீ நாத்,  ஜோதி




http://www.divshare.com/download/18549245-52f





ல ல ல ல ல ல ல
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதி தனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
ல ல ல ல ல ல ல ல லலா

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா
கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா அம்மம்மா
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனதினில் கமழ்வது தமிழினமோ
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனதினில் கமழ்வது தமிழினமோ
செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள்
ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்
மலையில் நெளியும் மேககுழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோத பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ
நெஞ்சம் தாங்கிடுமோ

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
ல ல ல ல ல ல ல ல லலா

மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா
மாதுளம் இதழாள் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா அம்மம்மா
சுருள்வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடென்னும் கூந்தலை இடைவரை கண்டவளே
சுருள்வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடென்னும் கூந்தலை இடைவரை கண்டவளே
நூல் தாங்கும் இடையாள் கால் பார்த்து நடக்க நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தை போலே தேகத்தை ஆக்கி குழல்கட்டே  ஜாலம்
பாவை சூடும் ஆடை கூட பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவை என்று இதழ்கள் ஊறுமடி இதழ்கள் ஊறுமடி
இதழ் கள் ஊறுமடி

வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதி தனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்
அசைந்து அசைந்து ஆடுங்கள்

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

பாவை நீ மல்லிகை பால் நிலா புன்னகை

மிகச் சாதாரணமான பாடல் தான் ஆனாலும் இனிமையான இசையும் குரலும் பாடலை நன்றாக மெருகேற்றியுள்ளது.



திரைப் படம்: தெய்வீக ராகங்கள் (1980)

இயக்கம்: A வீரப்பன்

இசை: M S விஸ்வனாதன்

பாடல்: புலமைபித்தன்

குரல்கள்: P ஜெயசந்திரன், வாணி ஜெயராம்




பாவை நீ மல்லிகை

பால் நிலா புன்னகை

மான்களில் ஓர் வகை

மங்கையே என்னிடம் அன்பு வை



மாதமோ கார்த்திகை

மையலில் காரிகை

மன்மதன் பண்டிகை

மாலையில் காதலின் ஒத்திகை



அந்த வானோரும் காணாத எழில் மேனகை

தமிழ் தேனூறும் சொல் பேசும் அமுதாம்பிகை

அந்த வானோரும் காணாத எழில் மேனகை

தமிழ் தேனூறும் சொல் பேசும் அமுதாம்பிகை

வானிலோர் தாரகை வந்ததோ கன்னிகை

பூவுடல் மாளிகை தேவையோர் நாழிகை



விழி மை தீட்ட தேடும் கை அது தூரிகை

சுகம் மாறாமல் கூடும் கை மணவாளன் கை

விழி மை தீட்ட தேடும் கை அது தூரிகை

சுகம் மாறாமல் கூடும் கை மணவாளன் கை

பாவையோ ஓர் வகை பண்புகள் நால்வகை

அம்புகள் ஐவகை அல்லவோ என் பகை



பாவை நீ மல்லிகை

பால் நிலா புன்னகை

மான்களில் ஓர் வகை

மங்கையே என்னிடம் அன்பு வை



ஒரு தென்பாண்டி சங்கத்து தமிழ் மூவகை

அதில் தேனூற நீ பாடும் இசை ஏழ்வகை

ஒரு தென்பாண்டி சங்கத்து தமிழ் மூவகை

அதில் தேனூற நீ பாடும் இசை ஏழ்வகை

சேல்விழி வேல்வகை சிற்றிடை நூல்வகை

தாங்கியே வந்த கை வாங்குமோ வாடகை



பாவை நீ மல்லிகை

பால் நிலா புன்னகை

மான்களில் ஓர் வகை

மங்கையே என்னிடம் அன்பு வை



மாதமோ கார்த்திகை

மையலில் காரிகை

மன்மதன் பண்டிகை

மாலையில் காதலின் ஒத்திகை

புதன், 28 மார்ச், 2012

இந்த இரவில் நான் பாடும் பாடல்


தெரியாத படம், தெரியாத புதிய நடிகர்கள். ஆனால் பாடல் இனிமைதான்.


திரைப் படம்: யாரோ அழைக்கிறார்கள் (1985)


இசை: ஷங்கர் கணேஷ்

இயக்கம்/பாடல்: ராஜன் ஷர்மா (யாரிவர்?)

குரல்: P ஜெயசந்திரன்

நடிப்பு: குரு, அனுராதா (எல்லோரும் புதுசு)



ஹும்ம்.. ம்ம்... ம்ம்... ம்ம்... ஆஹா... ஹா

ஹா... ஹா.... ஓஹோ ....ஹோ.... ஹோ




இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

உந்தன் உறவை நாடும் எந்தன் மேனி

நான் உணவை தேடும் ஒரு தேனி

பருவ ராகம் கொண்டு பாடி

என் பக்கம் பறந்து வாடி



இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்



கண்ணே என்று உன்னை அழைக்க

ஒரு காலம் வருமோடி அணைக்க

கண்ணே என்று உன்னை அழைக்க

ஒரு காலம் வருமோடி அணைக்க

பெண்ணே பூவை உனை நினைத்து

படும் பாட்டை எங்கு நான் உறைக்க



இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

உந்தன் உறவை நாடும் எந்தன் மேனி

நான் உணவை தேடும் ஒரு தேனி

பருவ ராகம் கொண்டு பாடி

என் பக்கம் பறந்து வாடி



தொட்டால் சுடுவதிந்த நெருப்பு

நீர் பட்டால் அணைந்துவிடும் அமைப்பு

தொட்டால் அடங்குமென் கொதிப்பு

நீ ..தொட்டால் அடங்குமென் கொதிப்பு

அடி தோழி இன்னுமேன் மிதப்பு

அடி தோழி இன்னுமேன் மிதப்பு



இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்



நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு

நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு

நேயம் வைத்தவனை நெஞ்சில் வைத்துவிடு

நெஞ்சம் இல்லை எனில் நஞ்சை வைத்துவிடு

காயம் அழிவதற்குள் கண்ணே

உன் அழகை கண்கள் பார்த்து வந்த காயம் போக்கிவிடு



இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்

உந்தன் உறவை நாடும் எந்தன் மேனி

நான் உணவை தேடும் ஒரு தேனி

பருவ ராஹம் கொண்டு பாடி

என் பக்கம் பறந்து வாடி



இந்த இரவில் நான் பாடும் பாடல்

என் இளைய நெஞ்சத்தின் தேடல்



அஹஹா ..ஹா ...ஹா.. ஹா ...ஒஹோ

ஹோ ...ஹும்ம்.... ஹும்ம்