பின்பற்றுபவர்கள்

கமல் ஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கமல் ஹாசன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஜனவரி, 2013

புது முகமே சிறு மது குடமே


இசையமைப்பாளர் G தேவராஜனின் அபூர்வ பாடல். கமல் இந்தப் படத்தில்தான் முதன் முதலாக சொந்தக் குரலில் ஞாயிறு ஒளி மழையில் என்ற பாடலைப் பாடினார் என நினைக்கிறேன்.

திரைப் படம்: அந்தரங்கம் (1975)
இசை: G தேவராஜன்
பாடியவர்கள்:  K J யேஸுதாஸ், P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: கமல், தீபா என நினைக்கிறேன்
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl80OTM2NDc3X2lpeGVCX2NiMDM/puthu%20mugame%20siru.mp3







புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே
அனுபவமே

எழில் முகமே இளமதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது என் முகமே
என் முகமே

புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே
அனுபவமே

கால்களின் அழகினை கவிஞர் கண்டால்
ஒரு காவியம் பிறக்கும் தமிழினிலே
தீபா தீபா

காவியம் பிறந்து லாபமில்லை
உன் கைகள் சொல்லட்டும் கவிதைகளை
காந்தா காந்தா

சங்கு முழங்கிடும் கோவிலிலே
அது வந்தது எப்படி மேனியிலே

கண்டதில்லை இது மழலையிலே
இது கனியாய் கனிந்தது பருவத்திலே

ஒருவரும் இதுவரை தொட்டதில்லை
அதில் ஒரு முத்தம் இதுவரை பட்டதில்லை

காயம் படாதது உன் இதழே
அதை கண்டதும் புரிந்தது என் மனமே
தீபா தீபா

காயம் படா இதழ் காய்கின்றது
உனை கண்டதும்தான் இன்று கனிகின்றது

கனிகின்ற இதழுக்கு ஒன்று சொல்வேன்
அதை கல்யாணம் ஆனதும் கண்டு கொள்வேன்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்



மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹண த்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன. [ஆரோகணம் ஸ க3 ப நி2 ஸ் அவரோகண்ம் ஸ் நி2 ப க3 ஸ] நாரதர் 
கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர். 

 

இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிரு ஷ்ணா அவர்கள்.
மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான “அதிசய ராகம்; ஆனந்த ராக ம்; அழகிய ராகம்” என்ற பாடல். இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவ ங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறி விடுகின்றது. ஒரு பாடலில் பல ராகங்களும் தொ டர்ந்துவரப் பாடும் ராகத் தொடர்ச்சியே ராகமாலி கை. இந்த அதிசய ராகத்தினைக் இப்போது இங்கே கேளுங்கள்.


மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால், ‘எப்படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவை தானே வைத்துக்கொண்டு வருவார்’, என்று நீங்கள் வியப்பது எனக்கு புரிகின்றது. 
முதன்முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக்கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல்  நாரதர்  இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டு படும் அவஸ்தை பார்த்த ஆர்ட் டைரக்ட ர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பதுபோலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று 
கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, “நாராயண; நாராயண” என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

நன்றி: விபரம் உபயம்  vidhai2virutcham.wordpress.com



திரைப் படம்: அபூர்வ ராகங்கள் (1975)
இசை: M S விஸ்வனாதன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: K J யேஸுதாஸ்
நடிப்பு: கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா
இயக்கம்: K பாலசந்தர்








அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

அதிசய ராகம் 



வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
மோகம்
மோகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
இசை யெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இசை யெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இந்திர லோகத்து சக்கரவாகம் 
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

பின்னிய கூந்தல் கரு நிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது வேகம் 
பின்னிய கூந்தல் கரு நிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது வேகம் 
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் 
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம் 
அது என் யோகம் 

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுரம் பார்த்தால் காவிரி மாதவி 
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுரம் பார்த்தால் காவிரி மாதவி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

வியாழன், 26 ஜூலை, 2012

அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை

திரு கோவை ரவி அவர்களுடன் நாமும் இந்த இனிய பாடலை கேட்டு மகிழ்வோம்.


திரைப் படம்: நட்சத்திரம் (1980)
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல்: வாலி
இயக்கம்: தாசரி நாராயண ராவ்
நடிப்பு: கமல், ஸ்ரீபிரியா





அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவொரு நடமாடும் பொன்மகள்
ரஞ்சனி சிவரஞ்சனி சிவரஞ்சனி

கரும்புகள் தென்மொழி, அரும்புகள் புன்னகை
கரும்புகள் தென்மொழி, அரும்புகள் புன்னகை
என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள் போல் இங்கே எவரும் இல்லை
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ் சங்க கீதம்
ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ் சங்க கீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதிகாலையில் வரும் பூபாள ராகம்
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

அவள் சிங்கார பூங்குழல் ஆவணி மேகம்
தேனுலாவிடும் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையின் வேகம்
தாமரை பூவின் சூரிய தாகம்
காலமே அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே
தாளமே அவள் கால்கள் கேட்டபடி தாவுமே
மொழியோ ஆலய சங்கொலி
இடையோ அசைந்திடும் கிங்கிணி
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
ஆ ஆ ஆ ஆ
அவள் தஞ்சை தரணியில் கொஞ்சும் அழகிய கோவிலன்றோ
நான் அவள் பக்தனன்றோ
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி

ஞாயிறு, 22 ஜூலை, 2012

பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ

சங்கர் கணேஷ் இசையமைப்பில்  ஒரு சில அருமையானப் பாடல்களில் இதுவும் ஒன்று. பாடியவர்களே இந்தப் பாடலின் வெற்றிக்கு முக்கியமானவர்கள். தங்கள் அனுபவங்களை நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.

திரைப் படம்: நட்சத்திரம் (1980)
பாடியவர்கள்: P சுசீலா, S P B
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: கமல் ஹாசன், ஸ்ரீபிரியா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: தசரி நாராயண ராவ்


http://www.mediafire.com/?qh7vd99pp4apsy44tp4pmduppsfs7ml

http://www.mediafire.com/?pxnmd7umypn6ksg


பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது அம்மா
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே

பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது கண்ணா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது கண்ணா

ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே

காதலிக்கு வீடு கட்டி கண்ணாலே மெத்தையிட்டு
கூடு கட்டி ஜோடியிட்டு கொண்டாட வா

சேலை கட்டி கொண்டையிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மாலையிட்டு தாலி கட்டி நீயாட வா

காதலிக்கு வீடு கட்டி கண்ணாலே மெத்தையிட்டு
கூடு கட்டி ஜோடியிட்டு கொண்டாட வா

சேலை கட்டி கொண்டையிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மாலையிட்டு தாலி கட்டி நீயாட வா

கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும்
என்னோட நீ வந்தா நல்லாருக்கும்
கண்ணாலே பாத்தாலே எல்லோருக்கும்
என்னோட நீ வந்தா நல்லாருக்கும்

வெகு நாளா ஆச வச்சேன் ஒம்மேல நான்
வெகு நாளா ஆச வச்சேன் ஒம்மேல நான்

பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது அம்மா

ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே

ஆயர்க்குடி மாமனுக்கு மானை போல பொண்ணிருக்கு
அத்த விட்டு உங்கிட்ட நான் ஆசை வச்சேன்
காரைக்குடி அத்தை கிட்ட கண்ணு போல புள்ள ஒண்ணு
என் கண்ண விட்டு உன்னையேதான் காதலிச்சேன்
ஆயர்க்குடி மாமனுக்கு மானை போல பொண்ணிருக்கு
அத விட்டு உங்கிட்ட நான் ஆசை வச்சேன்
காரைக்குடி அத்தை கிட்ட கண்ணு போல புள்ள ஒண்ணு
என் கண்ண விட்டு உன்னையேதான் காதலிச்சேன்

எல்லார்க்கும் புரியாது தாளக்கட்டு
எழுதாமே சேராது தாலிகட்டு
எல்லார்க்கும் புரியாது தாளக்கட்டு
எழுதாமே சேராது தாலிகட்டு

அட நல்லா சொன்னே சாமி மனச விட்டு
அட நல்லா சொன்னே சாமி மனச விட்டு

அட ட ட
பொன்னாங்கண்ணி பூத்து வந்ததோ
புன்னகையில் தெரியுது அம்மா
ஹா ஹா ஹா
பல்லாங்குழி சோழிகள் எல்லாம்
பல் வடிவில் வந்தது அம்மா

ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
ஆத்தா உன்ன நானே
பாத்தா புள்ளி மானே
லலலல லலலலல லலல லலலல

புதன், 18 ஜூலை, 2012

தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்


76களில் இளையராஜாவின் வரவு M S விஸ்வனாதனின் இசையமைப்பில் பல மாற்றங்களை கண்டது. அதில் இந்தப் பாடல் போல வசன நடையில் பல பாடல்கள் உருவாகின. சில நன்றாகவே இருந்தன. அவற்றில் இந்தப் பாடலும் ஒன்று.

திரைப் படம்: நூல் வேலி (1979)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: S P பாலசுப்ரமணியம்
நடிப்பு: சரத் பாபு, சுஜாதா, சரிதா, கமல் ஹாசன்
இயக்கம்: K பாலசந்தர்



Music File Hosting - Audio Hosting -








ம் ம் ம் ம் ம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்  போராட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹ
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம்
என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம்
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
சின்ன சின்ன நடை திண்டாட்டம்
அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்

பூந்தோட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
பூந்தோட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம்
பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
ஹா ஹா ஹா ஹா ஹா
சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும்
சேலாட்டம் விழி சீராட்டும்
இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும்
எண்ண எண்ண சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும்
எண்ண எண்ண சுகம் உள்ளோட்டம்
எனை இந்திர லோகத்தில் தாலாட்டும்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்

ஞாயிறு, 6 மே, 2012

காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்


அழகான காலை பொழுதில் அழகான ஒரு பாடலை கேட்பதில் இன்பம்தான்.

திரைப் படம்: உயர்ந்த உள்ளம் (1985)
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வைரமுத்து
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: கமல் ஹாசன், அம்பிகா
இயக்கம்: S P முத்துராமன்



http://www.divshare.com/download/17572841-354

Download video song:
http://www.divshare.com/download/17573106-e8b







ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்

குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்
தினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
இந்த இன்பம் இதம் பதம்
இது ஒன்றே ஜீவிதம்

காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்

உறங்கும் மானிடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை
நெஞ்சில் ஒரே பூ மழை.

காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்
காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம், ராகம் ஒரு ராகம்

வெள்ளி, 14 அக்டோபர், 2011

பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்தது எனக்கொரு


திரு கணேஷ் அவர்களின் விருப்பப் பாடல். நடிகர் மோகனுக்காக கமல் குரல் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது. அழகானப் பாடல்.

திரைப் படம்: ஓ மானே மானே (1984)
நடிப்பு: மோகன், ஊர்வசி
இயக்கம்: ஜெகன்னாதன்
இசை: இளையராஜா
பாடல்: மூ. மேத்தா
பாடியவர்: கமல் ஹாசன்



http://www.divshare.com/download/15919221-77c

பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
பூஞ்சோலை ரப பப்ப ரப பப்ப
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே

மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம்
வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம்
மடிகளில் பூக்கும் மல்லிகை கொடியினில் தோரணம்
இலக்கனம் மீறும் பாடலில் இரு விழி மோகனம்
தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும்
பிரிவின் நினைவில் நிழலும் எரியும் - அழகே
ரப பப்ப ரப பப்ப

பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
பூஞ்சோலை ரப பப்ப ரப பப்ப
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே

உனை நான் பார்க்கிறேன் தேவதை போலவே
எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே
நடந்திடும் காலம் யாவுமே நமதென ஆகுமே
உனக்கென பாடும் பாடலில் உலகமும் ஆடுமே
நதியின் தொடக்கம் கடலில் கலக்கும்
எனக்கும் உனக்கும் இளமை அடக்கம் தமிழே
ரப பப்ப ரப பப்ப

பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
உன் பார்வை தொடுத்தது எனக்கொரு
பூமாலை சுகம் தர நடந்தது
பூஞ்சோலை ரப பப்ப ரப பப்ப
பொன் மானை தேடுதே
என் வீணை பாடுதே
ரிபப றீபப துதுத்து ருருரு