பின்பற்றுபவர்கள்

K J யேஸுதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
K J யேஸுதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஜனவரி, 2013

புது முகமே சிறு மது குடமே


இசையமைப்பாளர் G தேவராஜனின் அபூர்வ பாடல். கமல் இந்தப் படத்தில்தான் முதன் முதலாக சொந்தக் குரலில் ஞாயிறு ஒளி மழையில் என்ற பாடலைப் பாடினார் என நினைக்கிறேன்.

திரைப் படம்: அந்தரங்கம் (1975)
இசை: G தேவராஜன்
பாடியவர்கள்:  K J யேஸுதாஸ், P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: கமல், தீபா என நினைக்கிறேன்
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl80OTM2NDc3X2lpeGVCX2NiMDM/puthu%20mugame%20siru.mp3







புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே
அனுபவமே

எழில் முகமே இளமதி முகமே
உன் இதயத்தில் விழுந்தது என் முகமே
என் முகமே

புது முகமே சிறு மது குடமே
நான் புரிந்து கொண்டேன் ஒரு அனுபவமே
அனுபவமே

கால்களின் அழகினை கவிஞர் கண்டால்
ஒரு காவியம் பிறக்கும் தமிழினிலே
தீபா தீபா

காவியம் பிறந்து லாபமில்லை
உன் கைகள் சொல்லட்டும் கவிதைகளை
காந்தா காந்தா

சங்கு முழங்கிடும் கோவிலிலே
அது வந்தது எப்படி மேனியிலே

கண்டதில்லை இது மழலையிலே
இது கனியாய் கனிந்தது பருவத்திலே

ஒருவரும் இதுவரை தொட்டதில்லை
அதில் ஒரு முத்தம் இதுவரை பட்டதில்லை

காயம் படாதது உன் இதழே
அதை கண்டதும் புரிந்தது என் மனமே
தீபா தீபா

காயம் படா இதழ் காய்கின்றது
உனை கண்டதும்தான் இன்று கனிகின்றது

கனிகின்ற இதழுக்கு ஒன்று சொல்வேன்
அதை கல்யாணம் ஆனதும் கண்டு கொள்வேன்

புதன், 7 நவம்பர், 2012

என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம்


என்ன சுகம் என்ன சுகம்? இனிமையான பின்னனி இசையும், பாடும் இனிமையான குரல்களும் காட்சிக்கு பொருத்தமான கவிதை வரிகளும் என்ன சுகம் என்ன சுகம் ?

திரைப் படம்: பல்லாண்டு வாழ்க (1975)
இசை: K V  மகாதேவன்
இயக்கம்: K ஷங்கர்
நடிப்பு: M G ராமசந்திரன், லதா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: K J யேஸுதாஸ், P சுசீலா



http://www.divshare.com/download/16163553-ee0




என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்

ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை
உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை
மானிடம் பெற்ற விழி
மதியிடம் பெற்ற முகம்
தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை
எழுதா
ஹூ ஹூ ஹூம்
கவிதை
ஹா ஹா ஹா
இவள் தான் அடடா

என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆ ஹா ஹா ஹா

சந்தன மேனிகளின் சங்கம வேளையிலே
சிந்திய முத்துக்களை சேர்த்திடும் காலமிது
தேங்கனி கோட்டையிலே சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில் தோன்றிய கோலமிது

என்ன சுகம் என்ன சுகம்
ஆ ஹா ஹா ஹா
உன்னிடம் நான் கண்ட சுகம்

மார்கழி நள்ளிரவில் மங்கிய வெண்ணிலவில்
கார்க்குழல் சீர் திருத்தி கைகளில் சேர்த்தணைத்து
மங்கையின் நெஞ்சினிலே மன்மதன் நீ எழுதும்
குங்கும கோலங்களின் மங்கல வண்ணங்களை
மறைவாய்
ம் ம் ம்
ரசித்தேன்
ஹூ ஹூ ஹூம்
எதையோ நினைத்தேன்

என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆ  ஆ ஹா ஹா ஹா ம் ம் ம் ம் ம்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே


பாரதியாரின் இந்தப் பாடலை பல இசையமைப்பாளர்கள் பல திரைபடங்களில் கையாண்டிருந்தாலும் எல்லோரும் பாடலின் சுவை கெடாமல் கொடுத்திருக்கிறார்கள்.
இது மறைந்த பாடகி ஸ்வர்னலதா தமிழிலில் முதன்முதலாக திரைபடத்திற்காக பாடிய பாடல். அழகாக பாடியுள்ளார்.

திரைப் படம்: நீதிக்கு தண்டனை (1987)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்:  S A சந்திரசேகர்
நடிப்பு: நிழல்கள் ரவி, ராதிகா
பாடலை இயற்றியவர்: சுப்ரமணிய பாரதியார்



சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற் சித்திரமே
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற் சித்திரமே
அள்ளி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே
தேனே ஆடி வரும் தேனே
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

உச்சி தனை முகர்ந்தால் கறுவம் ஓங்கி வளருதடி
உச்சி தனை முகர்ந்தால் கறுவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
மேனி சிலிர்க்குதடி
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி
கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி

சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
சின்னஞ்சிறுக் கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
செல்வக் களஞ்சியமே

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்

இது வெளிவராத படங்களில் ஒன்று.
இனிமையான இசையில் இதே வரிகளைக் கொண்ட பாடலை SPB, ஆஷா போன்ஸ்லே பாடியது, முன்னமே நமது இழையில் கொடுத்திருக்கிறேன். அதை கேட்க இதை சுட்டுங்கள்.





பாடல் வரிகளின் தரத்தை பார்த்தால் இது கங்கை அமரன் பாடல் போல தெரிகிறது. மன்னிக்கவும் நான் தவறாகவும் இருக்கலாம்.

திரைப் படம்: கண்ணுக்கொரு வண்ணக் கிளி (1991)
இசை: இளையராஜா
இயக்கம்: R சுந்தரராஜன்



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjU1Njc3OF9yR2djbF83NTJi/unnai%20naan%20parkaiyil%20KJY.mp3





உன்னை நான் பார்க்கையில்

ஊமையாய் போகிறேன்

வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

பொன்மானைப் பெண் என்று பொய் சொல்ல வந்தாயோ

விண்மீனைக் கண் என்று மை தீட்டிக் கொண்டாயோ

என் கண்மணி வீதியில் போகும் நேரங்கள்

உன் பார்வையில் பொன்மணி பாடும் ராகங்கள்

நீ பேசினால் கேட்கும் நாதஸ்வரம்

நீ அல்லவோ எந்தன் காதல் வரம்

நீ மங்கையா ஆசையின் கங்கையா

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்


எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு உன் கோலம்

என்னென்ன கேட்டாலும் எல்லாமும் உன் ராகம்

ஓராயிரம் ஜென்மமாய் வாழ்ந்த சொந்தங்கள்

ஓர் பார்வையில் வந்ததே அந்த எண்ணங்கள்

உன் பார்வையில் தானே நான் பார்க்கிறேன்

உன் வாழ்க்கையில் தானே நான் வாழ்கிறேன்

என் கண்ணிலும் நெஞ்சிலும் உன் முகம்

உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
எங்கெங்குமே ஹோ ஹோ ஹோ ஹோ
போகின்றதே ஹோ ஹோ ஹோ ஹோ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய் போகிறேன்
வார்த்தை தேடும்
காதல் ராகம்
வார்த்தை தேடும்
காதல் ராகம்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்



மஹதி’என்ற அபூர்வ ராகத்தின் ஆரோஹணத்திலும், அவரோஹண த்திலும் நான்கு, நான்கு ஸ்வரங்களே உள்ளன. [ஆரோகணம் ஸ க3 ப நி2 ஸ் அவரோகண்ம் ஸ் நி2 ப க3 ஸ] நாரதர் 
கையிலிருக்கும் வீணைக்கு ‘மஹதி’ என்று பெயர். 

 

இந்த மஹதி ராகத்தினை உருவாக்கியவர் பாலமுரளி கிரு ஷ்ணா அவர்கள்.
மஹதி ராகத்தில் அமைந்த ஒரே தமிழ்த் திரைப்பாடலான “அதிசய ராகம்; ஆனந்த ராக ம்; அழகிய ராகம்” என்ற பாடல். இந்த பாடலின் பல்லவி மஹதியில் துவ ங்கினாலும், பின்னர் ராகமாலிகையாக மாறி விடுகின்றது. ஒரு பாடலில் பல ராகங்களும் தொ டர்ந்துவரப் பாடும் ராகத் தொடர்ச்சியே ராகமாலி கை. இந்த அதிசய ராகத்தினைக் இப்போது இங்கே கேளுங்கள்.


மஹதி என்பது நாரதர் கையிலிருக்கும் வீணையின் பெயராகும். ஆனால், ‘எப்படத்திலும் நாரதர் வீணையின வைத்துக் கொண்டு வருவதாகப் பார்த்ததேயில்லையே! தம்புராவை தானே வைத்துக்கொண்டு வருவார்’, என்று நீங்கள் வியப்பது எனக்கு புரிகின்றது. 
முதன்முதலாகத் திரைப்படத்தில் நாரதர் வீணையை வைத்துக்கொண்டு வருவதாகத்தான் காட்சிகள் அமைக்கப் பெற்றிருந்தன. ஆனல்  நாரதர்  இரண்டு குடங்கள் கொண்ட வீணையினை வைத்துக் கொண்டு படும் அவஸ்தை பார்த்த ஆர்ட் டைரக்ட ர், வீணைக்குப் பதிலாக எளிமையான ஒரே குடம் கொண்ட தம்பூராவினை வைத்துக் கொண்டிருப்பதுபோலக் காட்சிகளை மாற்றிவிட்டாராம். அதற்குப் பிறகு வந்த எல்லாப் புராணப் படங்களிலும், நாரதர் ஏன் என்று 
கேள்வி கேட்காமல் மஹதி என்ற வீணையினைத் தூக்கி எறிந்துவிட்டுத் தம்பூராவை மீட்டிக்கொண்டு, “நாராயண; நாராயண” என்று வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

நன்றி: விபரம் உபயம்  vidhai2virutcham.wordpress.com



திரைப் படம்: அபூர்வ ராகங்கள் (1975)
இசை: M S விஸ்வனாதன்
பாடல் வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: K J யேஸுதாஸ்
நடிப்பு: கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீவித்யா
இயக்கம்: K பாலசந்தர்








அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

அதிசய ராகம் 



வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
மோகம்
மோகம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
இசை யெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இசை யெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இந்திர லோகத்து சக்கரவாகம் 
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

பின்னிய கூந்தல் கரு நிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது வேகம் 
பின்னிய கூந்தல் கரு நிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது வேகம் 
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் 
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம் 
அது என் யோகம் 

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுரம் பார்த்தால் காவிரி மாதவி 
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுரம் பார்த்தால் காவிரி மாதவி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அவள் ஒரு பைரவி
அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

சனி, 25 ஆகஸ்ட், 2012

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்பக் கலையோ


நல்லதொரு இனிமையான பாடல்.

திரைப் படம்: பன்னீர் நதிகள் (1986)
நடிப்பு: சிவகுமார், அமலா, ஜெயஸ்ரீ
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்:  M பாஸ்கர்
பாடல்: முத்துலிங்கம்
பாடியவர்கள்: K J யேஸுதாஸ்




http://www.divshare.com/download/19433117-5f0


பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ

மாலை பொழுதினில் மாய கதைகளை மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே
மாலை பொழுதினில் மாய கதைகளை மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே
ரோஜா செண்டுகள் ராஜா வண்டுடன் சேர்ந்திடும் நேரம் இது
நாளோர் சிற்றிடை காதல் முத்திரை காண்பது எப்பொழுது
அடடா மெல்ல தொடவா என்னை அழைக்கிறதே உயிரோவியம்

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ

கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது வஞ்சியின் பாதத்திலே
கோவைப் பழம் பழுக்க கண்டேன் குமரியின் உதட்டிலே
கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது வஞ்சியின் பாதத்திலே
கோவைப் பழம் பழுக்க கண்டேன் குமரியின் உதட்டிலே
பாதம் பட்டதும் பாறைக் கற்களும் பூமழை சிந்துமடி
பார்வை பட்டதும் பாலை மண்ணிலும் தென்றலும் வீசுமடி
மயிலே அந்தி வெயிலே உந்தன் மலர் உடலோ பிருந்தாவனம்

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ


வெள்ளி, 13 ஜூலை, 2012

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி


ஏதோ  ஒரு இசையில் ஏதோ ஒரு பாட்டு ஆனால் பாடியவர்கள் மிகப் பொறுப்பாக பாடி இருக்கிறார்கள். கங்கை அமரன் இசையில் அவர் எழுதிய பாடல். அது ஒரு காலம்.

திரைப்படம்: இளங்கன்று
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா







பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே
என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே
உயிரில் தீ விதைச்சே
பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி

மானே நாலாம் மாசம் கேட்டேன் உன் சேதி
தேனே கேட்டா பேசி தீரேன் என் வியாதி
காதோரம் ரோசாப்பூவை நீ மோதி நாளாச்சு
பூவாசம் வீசும் காத்து அடடா உன் பெருமூச்சு
பத்து விரலும் உன்னைக் கொத்த வருமே
நெஞ்சுக்குள்ள அந்தப்புரம் வஞ்சிக்கொடி தந்த வரம்

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி

ஏதோ ஏதோ சேதி நானோ பெண் ஜாதி
தானே நூலாய் மாறும் ஆஹா என் மேனி
மேலோடு பார்த்தால் போதும் திகட்டாத அனுபந்தம்
நீ தீண்டும் நேரம்தானே பொருள் மாறும் தலையங்கம்
சின்ன வயசு கொஞ்சம் மெல்லப் பழகு
தன்னனானா என்று வரும் பெண்ணுக்குள்ளே இன்பஸ்வரம்

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே
என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே
உயிரில் தீ விதைச்சே
பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி