பின்பற்றுபவர்கள்

சனி, 3 செப்டம்பர், 2011

சங்கீத ஸுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

இதுவும் உரை நடையில் ஒரு பாடல். சில முயற்சிகள் நன்றாகத் தான் இருக்கின்றன. இது போன்ற பாடல்கள் M S விஸ்வனாதனுக்கு கை வந்த கலை. ஆனால் இதில் திரு மரகத மணி கலக்கி இருக்கிறார்.


திரைப் படம்: அழகன் (1991)
நடிப்பு: பானு ப்ரியா, கீதா, மதுபாலா, மம்மூட்டி
இசை: மரகத மணி
பாடும் குரல்கள்: S P B, சித்ரா






ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சங்கீத ஸுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்லே பகலா எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு

சங்கீத ஸுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்லே பகலா எனக்கும் மயக்கம்

எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸுவரங்கள் துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும் காதல் கடிதம் இன்றுதான் வந்தது

சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்

சங்கீத ஸுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா இல்லே பகலா எனக்கும் மயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக