பின்பற்றுபவர்கள்

சனி, 2 ஏப்ரல், 2011

பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்

S P B தமிழில் முதல் வருடம் பாடிய 5 பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.


திரைப் படம்: கன்னி பெண் (1969)
குரல்கள்: S P B, S ஜானகி
எழுதியவர்: வாலி
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: A காசிலிங்கம்
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி



 http://www.divshare.com/download/14446700-ef6







பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா

மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
கதை கதையாக படிப்போமா

கம்பன் தமிழோ பாட்டினிலே
சங்க தமிழோ மதுரையிலே
பிள்ளை தமிழோ மழலையிலே
நீ பேசும் தமிழோ விழிகளிலே

நெஞ்சம் முழுதும் கவிதை எழுது
கொஞ்சும் இசையை பழகும் பொழுது
துள்ளும் இளமை பருவம் நமது

தொட்டு தழுவும் சுகமோ புதிது
கண் பார்வையே உன் புதுப்பாடலோ
பொன் வீணையே உன் பூமேனியோ

பிள்ளை பருவம் தாய் மடியில்
பேசும் பருவம் தமிழ் மடியில்
கன்னி பருவம் என் வடிவில்
காலம் முழுதும் உன் மடியில்

பன்னீர் மழைதான் விழி மேல் பொழிய
தண்ணீர் அலை போல் குழல்தான் நெளிய
தன்னந்தனிமை தணல் போல் கொதிக்க
தஞ்சம் புகுந்தாள் உன்னைதான் அழைக்க

பொன்னோவியம் என் மனமேடையில்

சொல்லோவியம் உன் ஒரு ஜாடையில்
பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்
கடற்கரை மணலில் இருப்போமா
மௌனத்தின் மொழியில் மயக்கத்தின் நிலையில்
கதை கதையாக படிப்போமா
கதையாக படிப்போமா

1 கருத்து:

மாற்றுப்பிரதி சொன்னது…

வணக்கம்
உங்கள் தளம் தொடர்ந்து வாசிக்கிறேன்.

எனக்கு ''குயிலே குயிலே''
படத்திலிருந்து ''அம்மம்மா அவசரமா அணைத்தாலென்ன பாவமா''
என்ற பாடலைத் தர முடியுமா..?

றியாஸ் குரானா

கருத்துரையிடுக