பின்பற்றுபவர்கள்

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்

K V மகாதேவன்  மற்றும் S P B யின் திறமைகளை வீணாக்கிய பாடல் இது. இந்த படத்திற்கு தேவை இல்லாத பாடல். S P B இந்தளவு உயிர் கொடுத்து பாடிய இந்தப் பாடல் பொது ஜனங்களை அந்த அளவுக்கு சென்றடையவில்லை. மைக் மோஹன் வாயசைத்து பாடினாலும் சங்கராபரணம் சோமயாஜுலு போன்று வருமா? படக் காட்சியும் பாடலுக்கு நடுவே இது போன்ற காட்சியமைப்புக்கள் கொண்ட பாடல்கள் இந்த படம் வெளிவந்த காலகட்டத்தில் நிறையவே வந்து போரடித்து போனது.
ஆனாலும் இனிமையான K V மகாதேவன் ின் இசைக்கும் S P Bயின் குரலுக்கும் இன்றைக்கு மறந்துவிட்டாலும் ரசிக்கும்படியானப் பாடல்.

திரைப் படம்: தூங்காத கண்ணென்று ஒன்று (1983)
இசை: K V மகாதேவன்
பாடல்: முத்துலிங்கம்
நடிப்பு: மோகன், அம்பிகா
இயக்கம்: R சுந்தரராஜன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNzI3MTkyMF9NQld5YV84ZTQ0/Nee%20azhaiththau%20poloru.mp3







நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

தங்க முக செங்கமலம் பூத்திருக்க
நீ தனிமையிலே என் நினைவில் காத்திருக்க
தங்க முக செங்கமலம் பூத்திருக்க
நீ தனிமையிலே என் நினைவில் காத்திருக்க
நீல நயனங்களின் நளினங்களில்
நீல நயனங்களின் நளினங்களில்
போதை கொண்டு கோதை
உன்னை அணைத்திருக்க
அணைத்திருக்க

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

நாளை வரும் புது வசந்த காலமடி
நம் பாதையிலே மனமலரின் கோலமடி
நி ச ரி க ம க ரி ச நி த த ம த ப ச நி நீ ச
நாளை வரும் புது வசந்த காலமடி
நம் பாதையிலே மனமலரின் கோலமடி
காதல் இலக்கியத்தில் சரித்திரத்தில்
காதல் இலக்கியத்தில் சரித்திரத்தில்
நீயும் நானும் கோயில் கொண்டு
நிலைத்திருக்க நிலைத்திருக்க

நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

க ம ப த நி ச ரி க நி ம ப ச க ம ரீ சா ரி நீ நீ ச
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

ம க ம க ரி ச த ப த ப ம க ச நி ச நி த ப
க ரி க ரி ச நி சாரி  நி நி ச தா நி நி ச
ப ம ம ப க க ம ரி க ச
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

க ம கர் கர் ரி க ரிர்  ச ரி சர் சர் நி ச நி
ரி க ரி ரி ச நி ச ச நின் நீ தா நி தா
ம தா ம தன நி நி நி நி நி க ம கத் கத்
க நி ச நிர் நிர்  ப தா நிரி சர் சர் சர்
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்

க ரி கட் கட் கா ம தா நி ச ரி க ப ம கா
ரி க ரி கட் கட் கா ரி ச ரிர் ரீர் ரீர்
க ரி ச ம ரி க ரி க நி க ச ரீர் ரீர் ரீ
க ரி க ம ப தி நி தா ப ம ப தா ம
நி தா ச நி நி தா நி தா நி தா ச நி
தா தா கி ம தா நி க ரி ரி ரி ரி ரி ச நி
தா ரி ரி ரி ரி தா நி ச காக்க ரி க க க
க நி தா ரி க க க காக ரி தா ரி ம ம ம ம
க ரி க ம ம ம ம க நி க தனா   

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு ராகம்...!

காரிகன் சொன்னது…

கே வி மகாதேவனின் இசையில் வந்த அருமையான பாடல் இது.ஆனால் எதற்காக தேவை இல்லாமல் இளையராஜா பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் என்பது புரியவில்லை.

Unknown சொன்னது…

காரிகன், மன்னிக்க வேண்டும் ஒரு flowவில் இளையராஜா என்று எழுதிவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். திருத்திவிட்டேன்.நன்றி ஸார்.

பெயரில்லா சொன்னது…

//K V மகாதேவன் மற்றும் S P B யின் திறமைகளை வீணாக்கிய பாடல் இது. இந்த படத்திற்கு தேவை இல்லாத பாடல். S P B இந்தளவு உயிர் கொடுத்து பாடிய இந்தப் பாடல் பொது ஜனங்களை அந்த அளவுக்கு சென்றடையவில்லை. //

ரொம்ப சரியாக சொன்னீங்க சார். ஸ்வரங்களூக்காகவே பல தடவை கேட்டு ரசித்த பாடல். பகிர்விற்கு நன்றி.

indrayavanam.blogspot.com சொன்னது…

உண்மையான தகவல்....

கருத்துரையிடுக