பின்பற்றுபவர்கள்

திங்கள், 2 ஜூன், 2014

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்

வழக்கமான பி பி எஸ் குரலைவிட மெல்லியதாக கீச்சென வரும் ஜானகி அம்மாவின் குரலே இங்கு சிறப்பு. சில இடங்களில் அவரின் குரல் உச்சஸ்தாயில் போகும் போது நமக்கே சிலிர்க்கிறது.
பின்னர் வந்த அவரது பல பாடல்களில் இந்த மென்மை காணாமல் போனது.

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்
மயங்கிய ஒளியினை போலே
மன மயக்கத்தை தந்தவள் நீயே......வித்தியாசமான கற்பனை.


திரைப் படம்: பாசம் (1962)
இயக்கம்: T R ராமண்ணா
இசை:  M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடியவர்கள்: பி பி எஸ்,  S ஜானகி
பாடல்: கண்ணதாசன் 
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி, கல்யாண் குமார், ஷீலா.









மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்

மயங்கிய ஒளியினை போலே
மன மயக்கத்தை தந்தவள் நீயே


வழியில் வந்தவள் நீயே


ஆ ஆ ஆ ஆ ஆ


மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்

மயங்கிய ஒளியினை போலே
மன மயக்கத்தை தந்தவள் நீயே


வழியில் வந்தவள் நீயே


பூமியில் ஓடிய புது வெள்ளம் போலே
பொங்கி வந்தவன் நீயே

நெஞ்சில் தங்கி வந்தவன் நீயே

எந்தன் தலைவன் என்பதும் நீயே


தாவி தழுவ வந்தாயே


மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்

மயங்கிய ஒளியினை போலே
மன மயக்கத்தை தந்தவள் நீயே


வழியில் வந்தவள் நீயே
ஹஹஹஹஹஹா


காவிரி கெண்டை மீன் போலே

இரு கைகள் படாத தேன் போலே

கோவில் முன்புற சிலை போலே

என்னை கொஞ்சி அணைத்த வெண் மலரே


பூ மழை பொழியும் கொடியாக

ஹா ஹா

பூரண நிலவின் ஒளியாக

ஹோ ஹோ

மாமணி மாடத்து விளக்காக

மார்பினில் அணைத்த மன்னவனே

என்னை மார்பினில் அணைத்த மன்னவனே


மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்

மயங்கிய ஒளியினை போலே
மன மயக்கத்தை தந்தவள் நீயே


வழியில் வந்தவள் நீயே



தலைவன் திருவடி நிழல் தேடி

நான் தனியே எங்கும் பறந்தோடி

ஒரு நாள் அடைந்தேன் உன் கரமே

எந்தன் உயிரும் உடலும் அடைக்கலமே


திங்கள் முகத்தில் அருளேந்தி

செவ்வாய் இதழில் நகை ஏந்தி

இளமை என்னும் படை கொண்டு

என்னை வென்றாய் நீ இன்று

ஆஹா
என்னை வென்றாய் நீ இன்று


மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்

மயங்கிய ஒளியினை போலே
மன மயக்கத்தை தந்தவள் நீயே


வழியில் வந்தவள் நீயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக