பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 6 ஜூன், 2014

ஆரம்பம் யாரிடம் உன்னிடம் தான்

இனிமை பாடல்.  பாடலின் நடுவே ஒரு சில வினாடிகளே வரும் திருமணக் காட்சியில் பின்னாள் நிற்கும் உருவங்கள் பெண் வேடமிட்ட ஆண்கள் என்பதாக கேள்விப் பட்டேன். சிக்கன நடவடிக்கை. அந்தக் காட்சி மிக சில வினாடிகளே இடம்பெறுகிறது.


திரைப் படம்: Mr. சம்பத் (1972)
இசை: V விஸ்வனாதன்
குரல்கள்: P சுசீலா, S P பாலசுப்ரமணியம்
இயக்கம்: சோ ராமசாமி
பாடல்: வாலி
நடிப்பு: முத்துராமன், ஜெயா








ஹும் ஹும் ஹும் ஹும்
ஹும் ஹும் ஹும் ஹும்
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
யா யா யா யா யா

ஆரம்பம் யாரிடம்
உன்னிடம் தான்
ஆரம்பம் யாரிடம்
உன்னிடம் தான்

ஆசை கொண்டு சொல்ல சொல்ல

ஆனந்தம் தான் மெல்ல மெல்ல

ஆரம்பம் யாரிடம்
உன்னிடம் தான்

யாரேனும் பார்த்தால் என்னாவது

காதோடு சொன்னால் தேனாவது

ஆனாலும் வேகம் ஆகாதது

போனாலே காலம் வாராதது

ஆரம்பம் யாரிடம்
உன்னிடம் தான்

ஆசை கொண்டு சொல்ல சொல்ல

ஆனந்தம் தான் மெல்ல மெல்ல

ஆசை துடித்த போதிலும்
அச்சம் விடலாமா
பாவை அச்சம் விடலாமா

நேரம் நல்ல நேரம்
நாணம் வரலாமா
இன்று நாணம் வரலாமா

நானென்ன சொல்வது மேலே
காலம் வர வேண்டும்
எதற்கும் காலம் வர வேண்டும்

நாளை நாடகமானால்
ஒத்திகை தர வேண்டும்
இன்றே ஒத்திகை தர வேண்டும்

மூடித் திறக்கும் பூவிதழ்
முத்திரை இட வேண்டும்
முதல் முத்திரை இட வேண்டும்

மேலும் ஒன்றை கேட்டால்
ஆயிரம் தர வேண்டும்
மீண்டும் ஆயிரம் தர வேண்டும்

பேசிய வார்த்தை போதும்
பழகி பார்ப்போமா
சுகம் பழகி பார்ப்போமா
காலம் முழுதும் காதல்
கவிதை சொல்வோமா
இது போல் கவிதை சொல்வோமா

ஆரம்பம் யாரிடம்
உன்னிடம் தான்
ஆரம்பம் யாரிடம்
உன்னிடம் தான்
ஆசை கொண்டு சொல்ல சொல்ல
ஆனந்தம் தான் மெல்ல மெல்ல
ல ல ல ல
யா யா யா
ம் ம் ம் ம்
ஹோ ஹோ ஹோ ஹோ

2 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
ரசித்தேன்..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிப்பேன் பலமுறை...

கருத்துரையிடுக