பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

வானம் நிறம் மாறும் இள மாலை சுப வேளை மேகம் பனி தூவும்


இளையராஜாவின் இசையில்  M S விஸ்வனாதனின் இசை சாயல் சிறிது மிளிர்கிறது. மெல்லிசையும் கர்னாடக இசையும் கலந்து ஒலிக்கும் போது பாடல்கள் இனிமையாக இருக்கின்றது

திரைப் படம்: தாவணிக் கனவுகள் (1984)
நடிப்பு: K பாக்கியராஜ், இளவரசி
இயக்கம்: K பாக்கியராஜ்
பாடல்: வைரமுத்து
குரல்கள்: S P B, S ஜானகி






http://www.divshare.com/download/15732078-c47








அ அ அ அ அ அ அ அ
ஆஆஆஆஆஆஆஆஆஆ
அ அ அ அ அ அ அ அ அ
ஆஆஆஆஆஆஆஆஆ

<iframe width="420" height="315" src="//www.youtube.com/embed/E0cTefmNzAs" frameborder="0" allowfullscreen></iframe>
இள மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரி பாஷை

நாள்தோரும் வேதங்கள்

பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரி பாஷை

மன்மத கணை
எங்கு விற்பனை
மங்கை இவள் தேகம்
எங்கும் முத்திரை

அந்தி மல்லிகை
சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும்
தேவ கன்னிகை

மன்னவன் தோளோரம்
என் இதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம்
பாடிடுமே

இனி தேவன் கோவில்
பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்

வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரி பாஷை

ல ல ல அ அ அ அ...
ல ல ல அ அ அ அ...
ல ல் அ ல அ அ அ....
ல ல ல ல ல அ அ அ....

பட்டு மெத்தையில்
நித்தம் ஒத்திகை
கற்று தரும் வேளை
ஏது நித்திரை

கற்ற வித்தைகள்
மொத்தம் எத்தனை
அள்ளி தர வேண்டும்
அன்பு கட்டளை

சங்கதி ஏராளம்
என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம்
பாடிடுவேன்

இனி பேசும் பேச்சில்
ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்

வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரி பாஷை

நாள்தோரும்
வேதங்கள்

பாடாதோ தேகங்கள்
வானம் நிறம் மாறும்
இள மாலை சுப வேளை

மேகம் பனி தூவும்
அது காமன் பரி பாஷை

சனி, 17 செப்டம்பர், 2011

வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ வைகை பெருகி வருமோ

நல்ல வளமான இசையுடன் கூடிய பாடல். பின்னனியில் ஆண் குரல் மிக இனிமையாக இசைக்கிறது.

திரைப் படம்: மறக்க முடியுமா (1966)
குரல்கள்: K J Y, P சுசீலா
பாடல்: சுரதா
நடிப்பு: S S ராஜேந்திரன், தேவிகா
இசை: T K ராமமூர்த்தி
இயக்கம்: முரசொலி மாறன்



http://www.divshare.com/download/15712893-c91


வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ
வைகை பெருகி வருமோ, குறை தீருமோ
வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ
வைகை பெருகி வருமோ, குறை தீருமோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆசை அரும்பு மலராகி, நெஞ்சில்
ஆடும் நினைவு கனியாகி
மடி மீதிலே விளையாடவே
கொடி போலவே உறவாடவே
எனையே தேடி...
ஆ..ஆ..ஆ..ஆ..

வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ
வைகை பெருகி வருமோ, குறை தீருமோ

வீணை இருந்தும் பயனேது, வந்து
மீட்டும் வரையில் இசையேது
ஹாஹா ஹாஹா ஹா ஹா
வீணை இருந்தும் பயனேது, வந்து
மீட்டும் வரையில் இசையேது

குயில் கூவுமோ மழை நாளிலே
கயல் நீந்துமோ சுடும் நீரிலே
எனையே தேடி...
ஆ..ஆ..ஆ..ஆ..

வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ
வைகை பெருகி வருமோ, குறை தீருமோ
வசந்த காலம் வருமோ, நிலை மாறுமோ

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ இந்தக் கட்டுக் கரும்பினை


தனது தோழியின் வருங்காலக் கணவனை தோழி கேலி செய்வதும், அதற்கு அவன் காதலி அழகாக பதில் சொல்வதும் நல்ல தமிழில் ஒரு புதிய கவிஞரின் பாடலில் இனிமையான இசையில் வருகிறது.

திரைப் படம்: இதயத்தில் நீ (1963)
குரல்கள்: P சுசீலா, L R ஈஸ்வரி
பாடல்: மாயவ நாதன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: ஜெமினி, தேவிகா
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்



http://www.divshare.com/download/15724571-b40


சித்திரப்பூவிழி வாசலிலே வந்து
யார் நின்றவரோ - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ
யார் நின்றவரோ...
யார் வந்தவரோ..
சித்திரப்பூவிழி வாசலிலே வந்து
யார் நின்றவரோ - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ
யார் நின்றவரோ...
யார் வந்தவரோ..

தென்றல் அழைத்து வர - தங்கத்
தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில்
நின்றவர் என்னவரே - இடம்
தந்த என் மன்னவரே

சித்திரப் பூவிழி வாசலிலே அவர்த்தான்
நின்றவரே - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்தவர்
தான் என்னவரே
யார் நின்றவரோ - அவர்
தான் என்னவரே

கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ - இந்தப்
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ
கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ - இந்தப்
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ

உன்னை
மட்டும் அருகினில் வைத்து தினம் தினம்
சுற்றி வருபவரோ - - நீ
கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ - கலை
முற்றும் அறிந்தவரோ - காதல்
மட்டும் தெரிந்தவரோ

சித்திரப்பூவிழி வாசலிலே வந்து
யார் நின்றவரோ - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்திட
யார் வந்தவரோ

வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி
என்று அழைப்பதுவோ - பசும்
பொன்னிற் புதியதைக் கண்ணன் எனப்
பெயர் சொல்லித் துதிப்பதுவோ
வண்ணக் கருவிழி தன்னில் ஒரு விழி
என்று அழைப்பதுவோ - பசும்
பொன்னிற் புதியதைக் கண்ணன் எனப்
பெயர் சொல்லித் துதிப்பதுவோ

ஒளி
மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி
மன்னவன் என்பதுவோ - இல்லை
தன்னைக் கொடுத்தென்னைத் தன்னில் மறைத்தவர்
வண்ணப் புதுமலரே - அவர்
நெஞ்சம் மலரணையே  - மனம்
எங்கும் நிறைந்தவரே
ஓ..ஓ....ஓ..ஓ...

சித்திரப் பூவிழி வாசலிலே அவர்த்தான்
நின்றவரே - இந்தக்
கட்டுக் கரும்பினை தொட்டுக் குழைந்தவர்
தான் என்னவரே
யார் நின்றவரோ - அவர்
தான் என்னவரே

வியாழன், 15 செப்டம்பர், 2011

ஒரு தரம், ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்


இளமையான இசையும் இளமையான குரல்களும் அருமையான பாடலாய் ஒலிக்கின்றது.

திரைப் படம்: சுமதி என் சுந்தரி(1971)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: C V ராஜேந்திரன்
நடிப்பு: சிவாஜி, ஜெயலலிதா
பாடல்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/15712318-487





http://www.divshare.com/download/15712386-33d


ஒரு தரம், ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேரென்ன லாபம்

ஒரு தரம், ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேரென்ன லாபம்

இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
பெண்மை என்றால் கண்மறைவாய்
மூடி வைத்தால் சுவை இருக்கும்

இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
உள்ளதெல்லாம் அள்ளித் தந்தால்
காலமெல்லாம் சுவை இருக்கும்

ஒரு தரம், ஒரே தரம்
உறவு தேடும் கண்கள் பாவம்
தனிமையில் உருகிடும்
பார்வையில் என்னென்ன பாவம்

வண்ணச் சிலை எதிர் வந்தாளோ
கண்ணுக்கொரு பதில் தந்தாளோ
தொட்டு கொள்ள தடை செய்வாளோ
தத்தி தத்தி மெல்ல செல்வாளோ

தங்க வளைத் தளிர் கையோடு
வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு
முத்து பந்தல் நகை தன்னோடு
மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு

சித்திரத்தின் முகம் கண்டேனே
செம்பவளம் நிறம் என்றேனே
உண்ண உண்ண இதழ் செந்தேனே
உன்னிடத்தில் என்னை தந்தேனே

இல்லை எனும் இடை தள்ளாட
மெல்ல மெல்ல உன்னை மன்றாட
சொல்ல சொல்ல தொட வந்தாயோ
என்ன என்ன சுகம் கண்டாயோ

ஒரு தரம், ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேரென்ன லாபம்
ஒரு தரம்,
ஒரே தரம்

புதன், 14 செப்டம்பர், 2011

தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்


நல்ல இசையும் கவிதையும் குரல் தெரிவும் இங்கே வெளிச்சத்துக்கு வந்தது.
சிறிது நீண்ட பாடல் ஆனாலும் கேட்க அலுக்கவில்லை

திரைப் படம்: சட்டம் ஒரு இருட்டறை (1981)
நடிப்பு: விஜயகாந்த், பூர்ணிமா தேவி
இயக்கம்: S C சந்திர சேகர்
இசை: சங்கர் கணேஷ்
குரல்கள்: சுரேந்திரன், ஷோபா சந்திரசேகர் (S ஜானகி அல்லவா?)








தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
ஹோ    நெஞ்சமே
உன்னிடம் இன்றுதான் மாற்றமே
ஹோ  நெஞ்சமே
உன்னிடம் இன்றுதான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட
இளம் பெண்ணாலும் பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள்
ஆறு போல ஓட வேண்டும்
தனிமையிலே ஒரு ராகம்
ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆ ஆ ஆஹ் ஆஹ் ஆஹ்
ஆ ஆ ஆ ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே
என் உள்ளம் பொன் வாசல் தேடி
இசை பாட்டாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள்
ஊற வேண்டும் சேர வேண்டும்
தனிமையிலே ஹா
ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளமையின் நினைவுகள் பறந்தது
ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி
என்னாளும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இன்னேரம்
பாட வேண்டும் கூட வேண்டும்
தனிமையிலே ஆ ஆ
ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
ஆ ஆ ஆ ஆ ஆ
இளமையின் நினைவுகள் பறந்தது
ஆ ஆ ஆ ஆ ஆ
லலலா ல லலலல் ஆ ஆ லலல லலல் லல்ல லா ஆ