பின்பற்றுபவர்கள்

சனி, 27 செப்டம்பர், 2014

அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னைப் பார்த்து anju viral kenjuthadi

இனிமையான இசையமைப்பு, அழகான குரல் தேர்வில் மனம் மயக்கும் ஒரு பாடல்.

திரைப் படம்: உரிமை கீதம் (1988)
நடிப்பு: கார்த்திக், பிரபு, ரஞ்சிதா, பல்லவி
இயக்கம்: R V உதயகுமார்
இசை : மனோஜ்-கியான்
குரல்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
பாடல்: தெரியவில்லை

















அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உன்னைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கொஞ்சுதடி அஞ்சுகமே
மிஞ்சுதடி சஞ்ஜலமே
கொஞ்சுதடி அஞ்சுகமே
மிஞ்சுதடி சஞ்ஜலமே

சிட்டு இடை கட்டிக்கொள்ள துடிக்கிறது
வெட்கம் வந்து தடுக்கிறது

அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உன்னைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து

செந்தேனே என்னைத் தந்தேனே
இன்னும் சந்தேகம் என்ன பெண் மானே

சந்தேகம் இல்லை என்னோடு
இந்தப் பெண் தேகம் என்றும் உன்னோடு

காதலுக்கு காவல் தொல்லை
ஆ ஆ
காத்திருந்தால் லாபம் இல்லை
ஹா

பள்ளியறை வாசல் வரை
நீ நடந்தால் தீரும் தொல்லை

கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க
ஆ ஆ
பக்கம் வந்து முத்தமொன்று தா

அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உன்னைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து

கள்ளூறும் இதழ் தேனாறு
அதை அள்ளாமல் சுகம் தீராது

தள்ளாடும் உடல் பூந்தேரு
அதை கிள்ளாமல் வந்து நீ சேரு

கூந்தலுக்கும் வாசம் உண்டு
ஆ ஆ
ஆதரிப்பேன் நானும் இன்று

ஹேய் ஜன்னலுக்கும் கண்கள் உண்டு
காப்பாற்று சேதி சொல்லு

சத்தமின்றி வித்தைகளைப் படித்திடவா
ஆ ஆ
முத்த கதை முடித்திட வா


அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உன்னைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து

கொஞ்சுதடி அஞ்சுகமே
மிஞ்சுதடி சஞ்ஜலமே
கொஞ்சுதடி அஞ்சுகமே
மிஞ்சுதடி சஞ்ஜலமே


கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க
பக்கம் சென்று முத்தமொன்று தா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக