பின்பற்றுபவர்கள்

சனி, 9 ஜூலை, 2011

கொஞ்சும் மலர் மஞ்சம்...அதில் தஞ்சம் இரு நெஞ்சம்

இது கர்னாடக சங்கீதமா, மெல்லிசையா இல்லை குத்துபாட்டு ரகமா விஸ்வனாதனுக்கு மட்டுமே இந்தக் கலை கை வண்ணம். பாடகர்களை ரொம்பவும் சிரமப் படுத்தியிருக்கும் இந்தப் பாடல். ஆனால் மிக எளிமையாக பாடி இருக்கிறார்கள். (மலையாள டப்பிங்க் படமோ?)


திரைப் படம்: ஜனனி (1985)
குரல்கள்: ,வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம், பாடல்: நேதாஜி
நடிப்பு: ஜெயராம், பவ்யம்



http://www.divshare.com/download/15255992-0fe

கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ
என் உயிரே தங்கம்
உனது அங்கம் அதில் எங்கும்
இசை பொங்கும் அதை தாராயோ
நான் இன்புறவே
கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ
என் உயிரே தங்கம்
உனது அங்கம் அதில் எங்கும்
இசை பொங்கும் அதை தாராயோ
நான் இன்புறவே

பொன் மேனி நாதஸ்வரம்
அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்

நான் ஆட
எந்தன் மணிச் சலங்கை ஆடும்
நீ ஒரு தேவதை
நாட்டிய தாரகை
நூலாக எந்தன் இடை மெலிந்து போகும்
இடை என்ன இறைவனா
உள்ளதா இல்லையா
வானூறும் வண்ண மணிப் புறா உன் தேகம்
ஆடிடும் பாடிடும்
ஆனந்தம் தேடிடும்
நாள் தோறும் என் மேல் மலர் சிறகை மூடும்
தழுவிடும் நழுவிடும்
அது தரும் புது சுகம்
வான் நிலவொளி பரவிடும்
தாழ் மழை அது பொழிந்திடும்
பார் இனிமைகள் துளிர்விடும்
வா இளமைகள் பறந்திடும்
நாள் பார்த்து பாய் போடவா
அந்த நாள் தேடி நான் வாடவா

பொங்கும் புது இன்பம்
இனி எங்கும் ஆரம்பம்
இங்கு வாராயோ நீ
என் உயிரே எங்கும்
மலர் பொங்கும் மகரந்தம்
தேன் சிந்தும் அதை தாராயோ
நான் இன்புறவே
நதியாக நான் ஆடினேன்
தாகம் தணியாமல் நான் வாடினேன்

ஹா...ஹா ஹா
ஹா ஹா ஹா
தீயாக
உடல் கொதிப்பெழுந்து மோதும்
நான் உன்னை தழுவிடும்
நாள் வரை பொறுத்திடு
போராடும் இளம் உடல் இரண்டும் கூடும்
வேர்வையின் போர்வையில்
வேள்விகள் புகுந்திடும்
பால் அருவியில் குளித்திட
நான் தினம் உன்னை அழைத்திட
நீ தனிமையில் அணைத்திட
நான் ஒரு கணம் சிலிர்த்திட
தேன் ஊற்று நீராட்டுது
நம்மை பூங்காற்று தாலாட்டுது

கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ
என் உயிரே தங்கம்
உனது அங்கம் அதில் எங்கும்
இசை பொங்கும் அதை தாராயோ
நான் இன்புறவே
அதை தாராயோ
நான் இன்புறவே
அதை தாராயோ
நான் இன்புறவே

1 கருத்து:

SANKAR THIRUNELVELI சொன்னது…

மலையாள டப்பிங் அல்ல.ஜெமினி நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின் தயாரித்த படம்.கதாநாயகியின் பெயரே"ஜெமினி பவ்யா" என்று தான் விளம்பரம் செய்தனர்.நீண்ட இடைவெளிக்கு பின் எம்ஸவி இசை

கருத்துரையிடுக