பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 8 ஜூலை, 2011

நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே

மனைவியின் அருமை அதுவும் மழலைத் தரும் நிலையில் மனைவி. அருமையான பாடல் அளவான இசை மற்றும் குரல்கள்.

திரைப் படம்: மாமியார் வீடு (1993)
நடிப்பு: சிதாரா, சரவணன்
இசை: இளையராஜா
இயக்கம்: S கணேஷ் ராஜ்



வழக்கமான காதொலி பாடல்:



http://www.divshare.com/download/15255228-dbe



நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு

நன்றி சொல்வேனே நான் உனக்கு

உன்னை அடைந்தேன் துணையாக

முன்னம் புரிந்த தவமாக

விட்டு போகாதம்மா உறவு

இது தேயாத வெண்ணிலவு

அன்று போட்டேன் பூமாலை

இன்று படித்தேன் பாமாலை



நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு

நன்றி சொல்வேனே நான் உனக்கு



வான் பார்த்ததே நீர் வார்த்திட

சிப்பி ஒன்று வண்ண சிப்பி ஒன்று

நீர் வார்த்ததும் உண்டானதே

முத்து ஒன்று சின்ன முத்து ஒன்று

ஆறேழு மாதங்கள் போனால்

ஆராரோ பாட்டிங்கு கேட்கும்

ஆவாரம் பூப்போன்ற கண்ணால்

அப்பாவை என் பிள்ளை பார்க்கும்

நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்

பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம்

ஒன்றிரண்டு வேண்டுமென்று

உன்னை நான் கேட்பேன்



சம்சாரம் ஆனதற்கு

நன்றி சொல்வேனே தெய்வத்துக்கு

உன்னை அடைந்தேன் துணையாக

முன்னம் புரிந்த தவமாக

விட்டு போகாதையா உறவு

இது தேயாத வெண்ணிலவு



ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

பொன் மானையும் செம்மீனையும்

கண்ணில் கண்டேன் உந்தன்

கண்ணில் கண்டேன்

பாலாற்றையும் தேனாற்றையும்

உன்னில் கண்டேன்

கண்ணே உன்னில் கண்டேன்

உன்னோடு நான் வாழும் வீடு

ஆனந்த பூ பூக்கும் காடு

அன்றில்கள் ஒன்றான கூடு

ஆகாது வேறேதும் ஈடு

தாரம் வந்தாள் கொஞ்சும் தென்றல் என்று

பிள்ளை வந்தான் வண்ண முல்லை என்று

பெண்ணரசி பொன்னரசி உன்னைப்போல் ஏது



சம்சாரம் ஆனதற்கு

நன்றி சொல்வேனே தெய்வத்துக்கு

உன்னை அடைந்தேன் துணையாக

முன்னம் புரிந்த தவமாக

விட்டு போகாதையா உறவு

இது தேயாத வெண்ணிலவு

அன்று போட்டேன் பூமாலை

இன்று படித்தேன் பாமாலை



உந்தன் சம்சாரம் ஆனதற்கு

நன்றி சொல்வேனே தெய்வத்துக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக