பின்பற்றுபவர்கள்

சனி, 25 ஆகஸ்ட், 2012

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்பக் கலையோ


நல்லதொரு இனிமையான பாடல்.

திரைப் படம்: பன்னீர் நதிகள் (1986)
நடிப்பு: சிவகுமார், அமலா, ஜெயஸ்ரீ
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்:  M பாஸ்கர்
பாடல்: முத்துலிங்கம்
பாடியவர்கள்: K J யேஸுதாஸ்




http://www.divshare.com/download/19433117-5f0


பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ

மாலை பொழுதினில் மாய கதைகளை மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே
மாலை பொழுதினில் மாய கதைகளை மை விழி சொல்கிறதே
மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே
ரோஜா செண்டுகள் ராஜா வண்டுடன் சேர்ந்திடும் நேரம் இது
நாளோர் சிற்றிடை காதல் முத்திரை காண்பது எப்பொழுது
அடடா மெல்ல தொடவா என்னை அழைக்கிறதே உயிரோவியம்

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ

கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது வஞ்சியின் பாதத்திலே
கோவைப் பழம் பழுக்க கண்டேன் குமரியின் உதட்டிலே
கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது வஞ்சியின் பாதத்திலே
கோவைப் பழம் பழுக்க கண்டேன் குமரியின் உதட்டிலே
பாதம் பட்டதும் பாறைக் கற்களும் பூமழை சிந்துமடி
பார்வை பட்டதும் பாலை மண்ணிலும் தென்றலும் வீசுமடி
மயிலே அந்தி வெயிலே உந்தன் மலர் உடலோ பிருந்தாவனம்

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ
இது என்ன இளமை குலுங்கும் ரதமோ
இதயத்தில் அமுதம் பொழிய வருமோ சுவை தருமோ
எனது விழிகள் கனவில் மிதக்குதே

பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே
சிலையோ சிற்பக் கலையோ


வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

யாரது யாரது தங்கமா... பேரெது பேரெது வைரமா


நல்ல கவித்துவமான பாடல். மேற்கத்திய இசையை தேவையான இடத்தில் புகுத்தி இனிமையான குரல்களைக் கொண்டு பாடவைத்து இனிமைக்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள்.

திரைப் படம்: என் கடமை (1964)
நடிப்பு: எம் ஜி ஆர், சரோஜா தேவி
இயக்கம்: எம் நடேசன்
இசை:  M S விஸ்வனாதன், T K ராம மூர்த்தி
பாடல்: இந்த படத்தின் எல்லா பாடல்களும் கண்ணதாசனால் எழுதப் பட்டவை. இதுவும் அவராகத் தான் இருக்கனும். திரு நாகராஜன் தெளிவுபடுத்தவேண்டும்.

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MjI4NV9pc2o0cl81MGMy/yaarathu%20yaarathu.mp3







யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது வைரமா
ஊரெது ஊரெது சொர்கமா
ஊறிடும் தேன் அது வெட்கமா

யாரது யாரது சிங்கமா
ம்
பேரெது பேரெது செல்வமா
ஆஹா
ஊரெது ஊரெது வீரமா
ஊறிடும் தேன் அதன் சாரமா

யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா

1 2 3 1 2 3
ல ல லம்பம் ல ல லம்பம்
ல ல லம்பம் ல ல லம்பம்

ல ல லம்பம் ல ல லம்பம்
ல ல லம்பம் ல ல லம்பம்


கல்லூறும் மலரென்ன பெண்ணானதோ
கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ

கல்லூறும் மலரென்ன பெண்ணானதோ
கரு நாவல் பழம் என்ன கண்ணானதோ

தள்ளாடி தள்ளாடி நடை போடுதோ
தனியாத சுகம் என்னும் தடை போடுதோ

ஆஹா ஓஹோ
ஆஹா ஓஹோ


யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா
ஊரெது ஊரெது சொர்கமா
ஊறிடும் தேன் அதன் சாரமா
யாரது யாரது தங்கமா
123 123

முதிராத கனியென்ன முகமானதோ
முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
முதிராத கனியென்ன முகமானதோ
முளைக்காத கரும்பென்ன மொழியானதோ
சிதராத முத்தென்ன நகையானதோ
சிங்கார ரசம் எந்தன் துணையானதோ

யாரது யாரது தங்கமா

அனைத்தாலும் அனையாத தீபம் என்ன
அழித்தாலும் அழியாத எண்ணம் என்ன
மறைத்தாலும் மறையாத மாயம் என்ன
மழைப்போல பொழிகின்ற இன்பம் என்ன
ஆறாது ஆறாது ஆசை வெள்ளம்
அடங்காது அடங்காது காதல் உள்ளம்

தீராது தீராது சேரும் இன்பம்

தெளியாது தெளியாது இருவர் உள்ளம்

யாரது யாரது தங்கமா
பேரெது பேரெது செல்வமா
யாரது யாரது தங்கமா

புதன், 22 ஆகஸ்ட், 2012

முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

10 நாட்கள் திடீர் சென்னை பயணம். கல்யாண வேலைகள், அலைச்சல் காரணமாக இந்த நீண்ட இடைவெளி. அடுத்தவாரம் தொடர்ந்து சந்திப்போம். புதிதாக இணைந்த அன்பர்களுக்கும் தொடர்ந்து பாடல்களை ரசித்து கருத்துகளை வழங்கி வரும் அன்பர்களுக்கும் மீண்டும் என் நன்றிகள்.

இன்றும் ஒரு இனிமையான பாடல்.  முழு படமும் இன்று கிடைத்து முழு பாடலையும்  இங்கே  பதிவேற்றி இருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

திரைப் படம்: புத்திசாலிகள் (1968)
நடிப்பு:  ஜெயஷங்கர், M A ராதிகா, மனோரமா
இயக்கம்: அருண்
இசை: V குமார்
பாடியவர்கள்: T M S, Y ஸ்வர்னா
பாடல்: வாலி


Listen Music Files - Embed Audio Files -








முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

நித்தம் நித்தம் தந்தேன் அல்லவோ

கண்ணா கண்ணா உன் வேகமென்ன

கன்னம் கன்னம் புண்ணானதென்ன

இன்னும் தந்தால் பெண் என்னாவதோ

முத்தம் முத்தம்

இதயத்திலே ஒரு கதவிருக்கும்

இரவு பகல் அது திறந்திருக்கும்

விழிகளிலே வரும் வழி இருக்கும்

வாவெனவே மனம் அழைத்திருக்கும்

இதழ்ச் சுவையோ இல்லை மதுச் சுவையோ

ஓ  ஓ  ஓ  ஓ  ஓ  ஓ

இதழ்ச் சுவையோ இல்லை மதுச் சுவையோ

பிடி இடையோ இல்லை மலர் கொடியோ

குறு நகையோ அது சிறு கதையோ

குறு நகையோ அது சிறு கதையோ

காலமெல்லாம் வரும் தொடர் கதையோ

முதன் முதலாய் என்ன அறிமுகமோ

ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ

முதன் முதலாய் என்ன அறிமுகமோ

கலைகளிலே நல்ல அனுபவமோ

ரஸிப்பதிலே இது புது விதமோ

ரகஸியமாய்த் தொட சுகம் வருமோ

முத்தம் முத்தம் செந்தேன் அல்லவோ

நித்தம் நித்தம் தந்தேன் அல்லவோ

கண்ணா கண்ணா உன் வேகம் என்ன

கன்னம் கன்னம் புண்ணானதென்ன

இன்னும் தந்தால் பெண் என்னாவதோ

லலா லாலா  லாலா








புதன், 15 ஆகஸ்ட், 2012

பொன்னான மனமெங்கு போகின்றது சொல்லுங்கள் மேகங்களே


இனிமையான பாடல். வசந்த மாளிகைக்கு பின் இந்த படம் தயாரித்த விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் அதே செட்டிங்க்ஸில் இந்த படத்தை குறைந்த செலவில் எடுத்ததாக நினைவு.

திரைப் படம்: திருமாங்கல்யம் (1974)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: முத்துராமன், ஜெயலலிதா
குரல்கள்: S P B, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MzU4M19GYzMyQl9hNzFm/Ponnana%20manam%20engu.mp3





பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
ஹே ஹே ஹே ம் ம் ம்
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான்
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
இங்கே வா தென்றலே
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

தாலி கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்
தாலி கட்டி வேலியிட்டு தங்கத்துக்கு நான் கொடுத்தேன்
பந்தம் அது சொந்தம்

சொந்தமென்று வந்த பின்னே
சொர்கமொன்று கேட்கிறது நெஞ்சம்
அது மஞ்சம்

பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

ஹே ஹே ஹே ஆஹாஹா
ஆஹா ஹா ஹா ஹா ஹா ஆஹா ஹா

எங்கோ ஒரு நாதம் அதில் ஏதோ ஒரு ராகம்
எனக்குள்ளே கேட்கின்றது
அது ஆசைகள் தாளாமல் நான் பாடும் கீதம்
என் உள்ளம் சொல்கின்றது
அன்று கோபம் கொண்டு சிவந்த கன்னம்
நாணம் கொண்டு சிவந்ததென்ன மானே
சுகம்தானே
இன்று வேண்டுமென்று எண்ணிவிட்டேன்
வெட்கம் கொண்டு மாறியது பெண்மை
அது உண்மை
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

விடிய விடிய சொல்லித் தருவேன் பொன் மாலை நிலாவினில் வேதங்கள்


அன்றைக்கும் இன்றைக்கும் எவ்வளவு மாற்றங்கள்? அன்றைக்கு என்ன தெளிவான குரல்கள், இசை மற்றும் பாடல் வரிகள்? இரவு நேரம் கேட்டால் என்ன இனிமை. இப்போதைய பாடல்கள்...Nightmare...

திரைப் படம்:  போக்கிரி ராஜா (1984)
குரல்கள்: S P B, P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: S P முத்துராமன் என நினைக்கிறேன்
நடிப்பு: ரஜினி, ஸ்ரீதேவி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2Mzc3N19maVJkMF9hZTA2/Vidiya%20Vidiya.mp3





விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்

மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை
ஊரெல்லாம் பார்க்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பார்க்குதே உன்னிடம் கேட்கிறேன்
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்

வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கிடக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காத பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
ல ல ல ல ல ல லலலல

பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்பிலே குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்