பின்பற்றுபவர்கள்

சனி, 9 ஜனவரி, 2016

அங்கே மாலை மயக்கம் யாருக்காக


இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை... இந்த இரண்டு வரிகளில் காதலை சொல்லிவிட்டார் கவிப்பேரரசு கண்ணதாசன். அந்தக் காலத்தில் BOXHIT படமும் பாடலும். இன்றைய தலைமுறைக்கு பிடிக்காதுதான்...



திரைப்படம்: ஊட்டி வரை உறவு (1967)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P சுசீலா, டி எம் எஸ்
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: சிவாஜி, K R விஜயா
















அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

கேட்டுக் கொள்வது காதலின் உரிமை
கேட்டால் தருவது காதலி கடமை
கேட்டுக் கொள்வது காதலின் உரிமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை

லாலா
ஆஹா

அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

வெள்ளி, 1 ஜனவரி, 2016

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....


திரைப்படம்: குடும்பத்தலைவன் (1962)

இசை: கே. வி. மகாதேவன்
நடிப்பு: எம். ஜி. ஆர் சரோஜா தேவி
இயக்கம்: எம். ஏ. திருமுகம் 
பாடியவர்:டி எம் எஸ்

பாடல்: கண்ணதாசன்


உலகில் வாழும் மிருகங்களுக்கும் பிற உயிரினங்களும் இயற்கையாகவே சில குணங்கள் அமைகின்றன. புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு இயல்பாகவே சினத்துடன் சீறும் குணமுள்ளது. யானை அனைத்து விலங்குகளிலும் அதிக பலம் கொண்டதாக விளங்கினாலும் அது பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிறது. புதிய நபர்களையோ வேறு நாய்களையோ கண்டால் குரைக்கும் குணம் எல்லா நாய்களுக்கும் உண்டு. கூடி வாழும் இயல்பு காக்கைகளிடம் அமைந்துள்ளது.  இவ்வாறாக அனைத்து உயிரினங்களுக்கும் பிரத்தியேகமான குணங்களைப் படைத்த இறைவன் மனிதர்களுக்கு மட்டும் மாறுபட்ட குணங்களைக் கொடுத்தது ஏனோ?


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்

என்றாள் ஔவைப் பிராட்டி. இங்கே குலம் என்பது ஒருவர் பிறந்து வளரும் சூழ்நிலையைக் குறிப்பதாகும். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியையோ சேர்ந்தவர் என்று எடுத்துக் கொள்வது தவறு. ஒருவன் இளம் வயது முதலே கல்வியிலும் தர்ம நெறிகளிலும் சிறந்து விளங்கும் நல்லோரின் சேர்க்கையைப் பெற்று வளர்வானாகில் அவன் நல்ல குணங்களையே பெறுதலும், தீய குணங்களும் தீய பழக்க வழக்கங்களும் நிறைந்தவருடன் பழகும் சூழ்நிலையில் வளர்கையில் தீய குணங்களைப் பெறுதலும் இயல்பு.
இயல்பாகவே அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, பொய் நீக்கி உண்மையே உரைத்து வாழும் உத்தமர்கள் என்றும் தீய வழியில் செல்வதில்லை, எத்தகைய துன்பங்கள் நேரிட்டாலும் தீய குணங்களைப் பெறுவதுமில்லை.
இயல்பாகவே காமம், குரோதம், கோபம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் முதலிய தீய குணங்களை வளர்த்துக்கொண்ட மனிதர்கள் பொதுவாகத் தம் வாழ்நாளில் என்றும் திருந்துவதில்லை. அவர்களது தீய குணத்தாலும், தீய செயல்களாலும் விளைந்த தீமைகள் அவர்கள் இறந்து அவர்களது உடல்களைக் கட்டையில் வைத்து எரிக்கையிலும் மறைவதில்லை.

www.thamizhisai.com







மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

ஓஹோஹோஹோஹொஹொஹோ
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

புதன், 30 டிசம்பர், 2015

மாலே. மணிவண்ணா.


எத்தனை பேர் பாடியிருந்தாலும் என்னமோ எனக்கு M S சுப்புலட்சுமி அம்மையாரின் இந்தப் பாடலில்தான் ஒரு ஈர்ப்பு.
எப்போதாவது மார்கழி மாதம் மன்னார்குடி செல்ல நேர்ந்தால் அதி காலையில் ஒத்தைத்  தெரு பிள்ளையார் கோவிலில் ஒலிபரப்பாகும்  இந்தப் பாடலை காலையில் உட்கார்ந்து கேட்பது அலாதி சுகம் தரும். இந்த முறையும் அனுபவித்தேன்.

பொருளுரை...நன்றி: http://balaji_ammu.blogspot.in

அடியார்களை உன் மீது மயக்கங்கொள்ளச் செய்த மாலனே! நீலமணி வண்ணக் கண்ணனே ! எங்கள் குலப்பெரியோர் நீண்ட காலமாக கடைபிடித்து வந்த காரணத்தாலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலைத் தொடர்கிறோம் ! நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நோன்புக்குத் தேவையான,

பால் போன்ற நிறமுடைய, உலகங்கள் எல்லாம் அதிரும் வகையில் ஒலியை ஏற்படுத்த வல்ல (உன் இடக்கையில் உள்ள) பாஞ்ச சன்னியத்தை ஒத்த வெண்சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்களையும், பல்லாண்டு பாடுபவர்களையும், அழகிய விளக்குகளையும், கொடியையும், விதானத் துணியையும் ஆலின் இலையில் துயில்பவனான நீ, கருணை கூர்ந்து எங்களுக்கு அளிப்பாயாக!










மாலே. மணிவண்ணா
திருமாலே மணிவண்ணா
மார்கழி நீராடுவான்
மாலே. மணிவண்ணா
மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள்
வேண்டுவன கேட்டியேல்
மேலையார் செய்வனகள்
வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள்
போய்ப் பாடுடையனவே
போல்வன சங்கங்கள்
போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே
கோல விளக்கே
கொடியே விதானமே
கோல விளக்கே
கொடியே விதானமே
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
மாலே. மணிவண்ணா
திருமாலே மணிவண்ணா
ஆ  ஆ  ஆ  ஆ  ஆ






வியாழன், 24 டிசம்பர், 2015

சத்திய முத்திரை கட்டளை இட்டது

அனைத்து நட்புகளுக்கும் எங்களது இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று இந்த இனிய பாடல்.

திரைப்படம்: கண்ணே பாப்பா ()
இயக்கம்: P மாதவன்
பாடியவர்: P சுசீலா
நடிப்பு:விஜயகுமாரி, முத்துராமன்
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வநாதன்












சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காத்தது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்க்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது
அவன் பாதங்க்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்


செவ்வாய், 22 டிசம்பர், 2015

கூந்தலிலே மேகம் வந்து குடி புகுந்தாளோ கவியெழுத


பாடல் முடியும் போது நமக்கும் இரைக்கிறது. K.J.ஜேசுதாஸ், சரியான குரல் தேர்வு. S.P.ஷைலஜாவும் ரொம்ப சிரமப் பட்டு  ஒத்துழைத்துள்ளார். அருமையாக இசையமைத்துள்ள பாடல். ஆனாலும் கே வி மகாதேவனின் திறமையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்றே தோன்றுகிறது...



படம்: பால நாகம்மா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், S.P.ஷைலஜா
இசை: இளையராஜா
நடிப்பு: சரத் பாபு, ஸ்ரீதேவி.
இயக்கம்: கே ஷங்கர்








கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

செவ்வாழைக் கால்கள் 
சிங்கார தூண்கள்
செவ்வாழைக் கால்கள் 
சிங்கார தூண்கள்
நடந்தால் இடையொரு நடனம்
நடந்தால் இடையொரு நடனம்
மேல்பாதிதனை பார்க்க ஒரு நூறு நாளாகும்
முடியலங்காரம் அடியை அளந்துவரும் கொடியென ஆடும்

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத

தம்தனம்தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தனம் தனம்தனம் தம்தனம்தனம்தனம்
தம்தம்தம்தனம் தம்தம்தம்தனம் தம்தம்தம்
தனம்தம்தம்தம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம்
ஆ ஆ ஆ
தங்கமேனி சிற்பசித்திரம் 
தத்தை பேச்சு முத்து ரத்தினம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

தங்கமேனி சிற்பசித்திரம் 
தத்தை பேச்சு முத்து ரத்தினம்
அங்கமொன்று காதல் மண்டபம் 
அங்கு பேசும் இன்பமந்திரம்

தம்த னம்தனம் தம்த னம்தனம்

அங்கமொன்று காதல் மண்டபம் 
அங்கு பேசும் இன்பமந்திரம்
கோடி மலரில் இவள் குமுதம்
தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்
தன னன னன
கோடி மலரில் இவள் குமுதம்
தன னன
சுவைகூடும் நகையில் இவள் அமுதம்
தன னன னன
கலசம் குலுங்கும் இளமயில் கவிஞன் மயங்கும்
கலைமயில் வீணைமேனிதனில் பின்குடங்கள் என
அசைந்து வரும் அணைக்க வரும் புது நிலவோ

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை

கூந்தலிலே மேகம் வந்து 
குடி புகுந்தாளோ கவியெழுத