பின்பற்றுபவர்கள்

புதன், 28 ஜனவரி, 2015

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ...Pennalla pennalla oothaappoo..

வைரமுத்துவின் பாடல்களில் வைரம் போல ஜொலிக்கும் ஒரு பாடல். கண்ணதாசன்தான் இது  போல எழுதியிருக்கிறார். அனுபவித்துப் பாடியிருப்பார் எஸ். பி. பி.

திரைப் படம்: உழவன்(1993)
இயக்கம்:கதிர்
நடிப்பு: பிரபு, பானுப்ரியா, ரம்பா
பாடியவர்: எஸ் பி பி.
பாடல்:வைரமுத்து
இசை:A R ரஹ்மான்











பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைபூ

சிறு கை வளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கை விரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ

சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் சென்பகப்பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைபூ

தென்றலை போல நடப்பவள்
எனை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன் துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட
மயங்கும் பூங்கொடி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைபூ

சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லென தீண்டும் பனித்துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மைவிழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
நடையை பழகும் பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட
பிறந்த மோதரம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைபூ

திங்கள், 26 ஜனவரி, 2015

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா...kanni venduma venduma..


AVM ராஜன் இனிமையாக சிரித்துக்கொண்டே பாடிய ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று. மற்றபடி எப்போதும் வயிற்றில் ஏதோ கோளாறு உள்ளது போலவே நடித்துக் கொண்டிருப்பார். இதில் ராஜனும் புஷ்பலாதாவும் இளமை அழகு.

திரைப்படம்: பச்சை விளக்கு (1964)
பாடியவர்: பி.பி, ஸ்ரீநிவாஸ், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
நடிப்பு: சிவாஜி, விஜய குமாரி, புஷ்பலதா, AVM ராஜன்





கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா

ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா
வானமண்டலம் போக வேண்டுமா
வண்ணத் தேரிலே ஏறட்டுமா
வானமண்டலம் போக வேண்டுமா
வண்ணத் தேரிலே ஏறட்டுமா

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை
நின்று வாழ்ந்து வரும் இன்பமான சுகம்
இருவர் உறவில் பெறுவோமே

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா

கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா
கொஞ்சிக் கொஞ்சியே பேசட்டுமா
கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா
கொஞ்சிக் கொஞ்சியே பேசட்டுமா

பள்ளி கொள்ளவா பாட்டுப் பாடவா
பக்கம் சாய்ந்த படி தூங்கட்டுமா
பள்ளி கொள்ளவா பாட்டுப் பாடவா
பக்கம் சாய்ந்த படி துங்கட்டுமா

கால தேவன் நம்மைத் தேடும் காலம் வரை
காதல் இன்பம் என்னும் ஊமை நாடகத்தில்
ஆடிப் பாடி மகிழ்வோமே

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா

ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா

ஆஹ ஹா ஹஹா ஹஹா ஹா ஹா
ஓஹொ ஹோ ஹொஹோ ஹொ ஹோ ஹொ

வெள்ளி, 23 ஜனவரி, 2015

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..ninaippathellaam nadanthuvital

"எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது"

இது தெரியாத போதே மனிதன் இந்த ஆட்டம் ஆடுகிறான். எல்லாம் தெரிந்துவிட்டால்.....?
கருத்தாழம் மிக்க ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.

திரைப்படம்: நெஞ்சில் ஓரு ஆலயம் (1962)
இசை: M. S. விஸ்வநாதன், T. K. ராமமூர்த்தி
பாடியவர்: P. B. ஸ்ரீநிவாஸ்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்:  ஸ்ரீதர்
நடிப்பு: முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா







நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதியில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

புதன், 14 ஜனவரி, 2015

கலையே உன் விழி கூட கவி பாடுதே kaliye un vizhi kooda



தமிழர்கள் அனைவருக்கும் எமது இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். நான் வேலை செய்யும் கப்பலில் மோசமான இணைய இணைப்பின் காரணமாகவும் அதைத் தொடர்ந்து எனது தந்தையாரின் மறைவும் என்னை நீண்ட நாட்கள் இணையம் பக்கம் வரவிடவில்லை. அடுத்த வாரம் முதல் சீராக தொடர உத்தேசம். நன்றி. 
இப்போதைக்கு இந்த இனிய பாடலைக் கேட்டு மகிழ்வோம்.

திரைப் படத்தில் பாகேஸ்வரி இராகத்தில் அமைந்த இந்த இனிமையான பாடலை தணிக்கையில்  நீக்கிவிட்டார்கள்.

திரைப்படம்: குணசுந்தரி (1955)
குரல்: A M ராஜா
நடிப்பு: ஜெமினி , சாவித்திரி
இசை: கண்டசாலா
இயக்கம்: K காமேஷ்வரராவ்








கலையே உன் விழி கூட கவி பாடுதே
கலையே உன் விழி கூட கவி பாடுதே
தங்க சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே
ஒளி வீசுதே
கலையே உன் விழி கூட கவி பாடுதே

நிலவோடு விளையாடும் தாரா உன்னாலே
நிலவோடு விளையாடும் தாரா உன்னாலே
அலை மோதும் வேளை வாராய் முன்னாலே
அலை மோதும் வேளை வாராய் முன்னாலே
அனுராக நிலையே பாராய் கண்ணாலே
அனுராக நிலையே பாராய் கண்ணாலே

கலையே உன் விழி கூட கவி பாடுதே
தங்க சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே
ஒளி வீசுதே
கலையே உன் விழி கூட கவி பாடுதே

இளங்காதல் அமுதாகும் ஏகாந்த ராணி
இளங்காதல் அமுதாகும் ஏகாந்த ராணி
இசையோடு பாடும் வேதாந்த வாணி
இசையோடு பாடும் வேதாந்த வாணி
இணை யாரும் இல்லையே எழில் மேவும் மேனி
இணை யாரும் இல்லையே எழில் மேவும் மேனி

கலையே உன் விழி கூட கவி பாடுதே
தங்க சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே
ஒளி வீசுதே
கலையே உன் விழி கூட கவி பாடுதே

புதன், 31 டிசம்பர், 2014

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா

எனது இனிய நண்பர்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நான் இப்பொழுது அவ்வளவாக இணைய வசதியில்லாத அட்லாண்டிக் கடலின் நடுவே எண்ணெய் கப்பலில் இருப்பதால் உங்களுடன் உறவாட முடியாமல் இருக்கிறேன். இன்று போல அவ்வப்போது இணைய வசதிக் கிடைத்தால் பாடலை வழங்குவேன். அடுத்த வாரம் நிலத்திற்கு வந்துவிடுவேன். தொடர முயற்சிக்கிறேன். நன்றி.

இன்றைய புத்தாண்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் நாம் நமது தாய்த் திரு நாட்டையும் மறந்துவிடாமல் இருக்க இந்தப் பாடல். ஆங்கில வழக்கங்களை நாம் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டாலும் நமது சொந்த காலாச்சாரத்தையும் மறக்காமல் இருக்க வேண்டுகிறேன்.

"ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த 
மாமணியைத் தோற்போமோ"


திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் (1961)
குரல்: திருச்சி லோகநாதன்
இசை: G ராமநாதன்
பாடல்: மகா கவி பாரதியார்
நடிப்பு: சிவாஜி, பத்மினி, ஜெமினி
இயக்கம்: பி. ஆர். பந்துலு







தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப் பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப் பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப் பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
           
எண்ணமெல்லாம் நெய்யாக 
எம்முயிரினுள் வளர்ந்த

எண்ணமெல்லாம் நெய்யாக 
எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் 

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த 
மாமணியைத் தோற்போமோ
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த 
மாமணியைத் தோற்போமோ
மாதரையும் மக்களையும் 
வன் கண்மையாற் பிரிந்து

மாதரையும் மக்களையும் 
வன் கண்மையாற் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ

தர்மமே வெல்லுமென்னும் 
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம் 
கண்டதெல்லாம் போதாதோ

தர்மமே வெல்லுமென்னும் 
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம் 
கண்டதெல்லாம் போதாதோ
எந்தாய் நீ தந்த இயற்பொருளெலாமிழந்து
நொந்தார்க்கு நீயின்றி நோவழிப்பார் யாருளரோ

மேலோர்கள் வெஞ்சிறையில் 
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் 
நோவதுவும் காண்கிலையோ
 
மேலோர்கள் வெஞ்சிறையில் 
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் 
நோவதுவும் காண்கிலையோ
 
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி 
இரு கண்ணற்ற சேய் போல் 
கலங்குவதும் காண்கிலையோ