பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 8 ஜூலை, 2012

தென்றல் தாலாட்டும் நேரம் காற்றில் தேனூற்றும் ராகம்



இது வெளிவராத ஒரு திரைப் படப் பாடல். நல்ல சில பாடல்கள் இது போல மறைந்து போயின. திரைப் படத்தின் பெயர் என்னவோ வசந்தம் வரும் ஆனால் திரைப் படம்தான் வரவில்லை.

திரைப் படம்: வசந்தம் வரும் (1981)
குரல்கள்: கே. ஜே யேஸுதாஸ், பி. சுசீலா.
பாடல்: மு. பவணன்.
இசை: வி.குமார்.
இயக்கம்: கே. சோமசுந்தரேஸ்வர்
நடிப்பு: சரத்பாபு, விஜயன்




http://www.divshare.com/download/18591840-d33

தென்றல் தாலாட்டும் நேரம்
காற்றில் தேனூற்றும் ராகம்
எங்கே உன் எண்ணம் ஓடும்
பட்டும் படாத தூரம்
தொட்டும் தொடாத மாயம்
பொன் மேகம்

தென்றல் தாலாட்டும் நேரம்
காற்றில் தேனூற்றும் ராகம்
எங்கே உன் எண்ணம் ஓடும்
பட்டும் படாத தூரம்
தொட்டும் தொடாத மாயம்
பொன் மேகம்

கார் மேகக் கூந்தல் வீணை
மீட்டும் சங்கீதம் தேவை
கார் மேகக் கூந்தல் வீணை
மீட்டும் சங்கீதம் தேவை

வழியோடு சென்ற மானை
தடுக்கின்றதே உன் பார்வை

பொன் வண்ணக் கண்ணில்
உன் சொல்லில்
என் நெஞ்சை இணைப்பேன்

தோட்டத்துப் பூவை
உன் வானில் நீ அள்ளி பதித்தாய்

தேடும் என் ஆசை செல்வம்
பாயும் சங்கீத வெள்ளம்

தென்றல் தாலாட்டும் நேரம்
காற்றில் தேனூற்றும் ராகம்

ஓடைத் தண்ணீரின் மேலே
ஆடும் பூந்தென்றல் போலே
ஓடைத் தண்ணீரின் மேலே
ஆடும் பூந்தென்றல் போலே

நின்றேன் எண்ணங்கள் கோடி
ஒன்றும் சொல்லாமல் வாடி

ஆசைகள் கொண்டு வந்தாலும் தள்ளாடுவதோ
அன்புக்கு வாடும் உன் வாசல் நான் தேடுவதோ

தேடும் என் ஆசை செல்வம்
பாயும் சங்கீத  வெள்ளம்

தென்றல் தாலாட்டும் நேரம்
காற்றில் தேனூற்றும் ராகம்
எங்கே உன் எண்ணம் ஓடும்
பட்டும் படாத தூரம்
தொட்டும் தொடாத மாயம்
பொன் மேகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக