பின்பற்றுபவர்கள்

வியாழன், 1 ஜூலை, 2010

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

SPBயின் ஆரம்ப கால இனிமையான பாடல்களில் ஒன்று.


திரைப் படம்:  குழந்தை உள்ளம்  (1969)

நடிப்பு; ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ

இசை: S P கோதண்டபாணி

இயக்கம்: சாவித்திரி

பாடியவர்கள்: SPB ,P சுசீலா





http://www.divshare.com/download/11862152-869




முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

முதல் நாள் மயக்கம் வரக்கண்டு... மோனத்தில் ஆழ்ந்ததே சுவைக் கொண்டு....

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தலை மகன் செய்தது சோதனையோ... தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ...

கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ... கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ....

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

லா லா லா லா லா லா லா லா ல ல ல ல

முத்தமிட்ட இதழே பாலாக... முன்னிடை இளைந்து நூலாக...

கட்டி வைத்த கூந்தல் அலையாக..கட்டி வைத்த கூந்தல் அலையாக....கன்னங்கள் இரண்டும் விலையாக...

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

தேன் தரும் நிலவே நீ சாட்சி...தென்றல் காற்றே நீ சாட்சி....வானும் நிலவும்
உள்ளவரை வளரட்டும் காதல் அரசாட்சி...
வளரட்டும் காதல் அரசாட்சி...

முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு...கூடி கொண்டதே இன்ப தேன் உண்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக