பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

வாசக் கருவேப்பிலையே என் மாமன் பெத்த மல்லிகையே


இசைக்காகவும், பாடல் picturization காகவும் பாடலை ரசிக்கலாம், ஆனால் பாடல் வரிகள் என்னமோ எனோதானோதான்.

திரைப் படம்: சிறையில் பூத்த சின்ன மலர் (1990)
குரல்கள்: ஜானகி, அருன்மொழி
இசை: இளையராஜா
பாடல்??: புலமைபித்தன்
இயக்கம்: அமிர்தம்
நடிப்பு: விஜயகாந்த், நிஷாந்தி





வாசக் கருவேப்பிலையே
என் மாமன் பெத்த மல்லிகையே

வாசக் கருவேப்பிலையே
என் அத்தை பெத்த மன்னவனே

ஊத குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நெனச்சி தூக்கம் போச்சு போச்சு

ஊத குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நெனச்சி தூக்கம் போச்சு போச்சு

வாசக் கருவேப்பிலையே
என் மாமன் பெத்த மல்லிகையே

நெலவு சேலை கட்டி நடக்குது பொன்னா
உலக அதிசயத்தில் இப்படி ஒன்னா

நடந்தா தென் மதுரை பாண்டியன் போல
நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை

நன்றி கெட்ட சேலை
அது வேனா விட்டுருடீ

கண்ணே உந்தன் சேலை
இனி நான் தான் கட்டிக்கடி

எட்டி நில்லு சாமி
நீ தொட்டா ஒட்டிக்குவே

தொட்டில் ஒன்னு போட
ஒரு தோது பண்ணிக்குவே

இப்போதே அம்மாவா நீ ஆனா
என் பாடு என்னாகும் வாம்மா

வாசக் கருவேப்பிலையே
என் அத்தை பெத்த மன்னவனே

ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல
உதடும் முள் முருங்க பூத்தது போல

கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்
கண்டதும் இளசுக்கெல்லாம் வந்திடும் மோகம்

எந்த பொண்ணு கையும் என்னை இன்னும் தொட்டதில்ல
இன்று மட்டும் கண்ணே நம்ம கற்பும் கெட்டதில்ல

கற்பு உள்ள ராசா நான் உன்ன மெச்சிக்குறேன்
கட்டிக்கைய்யா தாலி உன்ன நல்லா வெச்சிக்குறேன்

கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்
கையோடு கை சேர்த்து போவோம்

வாசக் கருவேப்பிலையே
என் அத்தை பெத்த மன்னவனே

வாசக் கருவேப்பிலையே
என் மாமன் பெத்த மல்லிகையே

ஊத குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நெனச்சி தூக்கம் போச்சு போச்சு

ஊத குளிரு காத்து
அது ஊசி குத்துற போது
உன்ன நெனச்சி தூக்கம் போச்சு போச்சு

வாசக் கருவேப்பிலையே
என் அத்தை பெத்த மன்னவனே

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடல்... நன்றி சார்...

தனிமரம் சொன்னது…

என்றும் பிடிக்கும் பாடல் அருமையான பகிர்வு ! தொடர்ந்து எழுதுங்கள் அண்ணாச்சி பாடல்களுடன் சந்திப்போம்!

கருத்துரையிடுக