பின்பற்றுபவர்கள்

திங்கள், 16 ஜூன், 2014

செந்தமிழ் நாட்டு சோலையிலே சிந்து பாடி திரியும் பூங்குயிலே

wikipedia.org. இந்த தளத்திலிருந்து கீழே  உள்ள விபரங்கள் கிடைத்தன. ஆனால், http://spicyonion.com என்ற தளத்தில், இந்தப் படத்திற்கு இசை வேதா என்றும் படம் வெளியான வருடம் 1958 என்றும் திரு காதிர் இஸ்மாயில் தெரிவிக்கிறார்.
K R ராமசாமியின் வளமான குரலில் பாடல் கேட்கவும் பார்க்கவும் இனிமையாக இருக்கிறது.

திரைப்படம்: சுகம் எங்கே (1954)
இயக்கம்: K ராம்நாத்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடியவர்கள்: ஜிக்கி. K R ராமசாமி
பாடல் எழுதியவர் : தெரியவில்லை
நடிப்பு: K R ராமசாமி, சாவித்திரி









ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

செந்தமிழ் நாட்டு சோலையிலே
சிந்து பாடி திரியும் பூங்குயிலே
செந்தமிழ் நாட்டு சோலையிலே
சிந்து பாடி திரியும் பூங்குயிலே
தென்றல் அடிக்குது என்னை மயக்குது
தேன் மொழியே இந்த வேளையிலே
தென்றல் அடிக்குது என்னை மயக்குது
தேன் மொழியே இந்த வேளையிலே

சிந்தை கவர்ந்த ஆணழகா
உம்மால் எனது வாழ்விலே
சிந்தை கவர்ந்த ஆணழகா
உம்மால் எனது வாழ்விலே
சொந்தம் மிகுந்தது காதலின் புது சுகமும்
என் மனம் காணுதே
சொந்தம் மிகுந்தது காதலின் புது சுகமும்
என் மனம் காணுதே
தென்றல் அடிக்குது என்னை மயக்குது
தேன் அமுதே இந்த வேளையிலே

அன்பில் விளைந்த அமுதே
என் ஆசை கனவும் நீயே
யே யே யே யே
அன்பில் விளைந்த அமுதே
என் ஆசை கனவும் நீயே
இன்ப நிலாவே உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே
இன்ப நிலாவே உனது கண்கள்
இனிய கதைகள் சொல்லுதே
தென்றல் அடிக்குது என்னை மயக்குது
தேன் அமுதே இந்த வேளையிலே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ
உம்மை அன்றி இங்கு இன்பமில்லை
உற்ற துணை வேறு யாருமில்லை
உம்மை அன்றி இங்கு இன்பமில்லை
உற்ற துணை வேறு யாருமில்லை
என்னுயிரே தமிழ் காவியமே
என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்
என்னுயிரே தமிழ் காவியமே
என்றும் ஒன்றாகவே வாழ்ந்திடுவோம்

இன்ப துன்பம் எதிலும்
சம பங்கு அடைந்தே நாமே
இன்ப துன்பம் எதிலும்
சம பங்கு அடைந்தே  நாமே
இல்லரம் ஏதும் பேதமில்லா
எண்ணம் கொண்டு வாழலாம்
இல்லரம் ஏதும் பேதமில்லா
எண்ணம் கொண்டு வாழலாம்
தென்றல் அடிக்குது என்னை மயக்குது
தேன் மொழியே இந்த வேளையிலே

எளிய இந்த ஏழையின் மனம்
இன்ப கனவு காணுதே
தென்றல் அடிக்குது என்னை மயக்குது
தேன் அமுதே இந்த வேளையிலே

4 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

இரசித்தேன் பாடலை

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிகம் கேட்டிராத பாடல்... நன்றி...

Dr.V.K.Kanniappan சொன்னது…

அருமையான பாடல் கே.ஆர்.இராமசாமியின் குரல்; பாடலாசிரியர் யார்’ இப்பாடல் என்ன ராக அடிப்படையில் அமைந்தது என்று தெரிந்தால் மகிழ்வேன்.
வ.க.கன்னியப்பன்

கருத்துரையிடுக