பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 அக்டோபர், 2013

இயற்கை எழில் கொஞ்சுகின்ற


ஜெயசித்ரா நடித்த இப்பாடலின் காணொலி இதுவரை சிக்காமல் இருந்தது.
P சுசீலா அம்மா வழக்கம் போல தூள் பரத்தியிருக்கும் மற்றுமொரு பாடல். இசை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் என நினைத்தேன். ஆனால் V குமார் என்பது எனக்கு ஆச்சரியம்தான். அருமையான பாடல்.

திரைப் படம்: தேன் சிந்துதே வானம் (1975)
குரல்: P சுசீலா
இசை: V குமார்
நடிப்பு : ஜெயசித்ரா, சிவகுமார்
இயக்கம்: R A சங்கரன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yMjQxNjk2N19JVzM0SV9lZjJh/iyarkai%20ezhil%20konsuginra%20nila%20madanthai.mp3







லா ல ல ல லா ல ல லா ல ல ல லா ல ல 
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
இந்த நீரோடை
அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 

பச்சை புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்

இந்தப் பாவைக்கு சூட்டி வைத்த மணி மகுடம்
பச்சை புல்லில் படுத்திருக்கும் பனி வைரம்

இந்தப் பாவைக்கு சூட்டி வைத்த மணி மகுடம்
கொச்சை மொழி பேசுகின்ற பறவையினம்

இவள் கொலுவிருக்கும் மண்டபத்தில் புலவரினம்
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
லா ல ல ல லா ல ல லா ல ல ல லா ல ல 

மலை மேல் தவழ்ந்த மழை நீர் சுமந்து
ஓடும் மேகங்களே
மண்ணில் இறங்கி வந்தால் எல்லார்க்கும்
தீரும் தாகங்களே
மலை மேல் தவழ்ந்த மழை நீர் சுமந்து
ஓடும் மேகங்களே
மண்ணில் இறங்கி வந்தால் எல்லார்க்கும்
தீரும் தாகங்களே
நீங்களும் நானும் ஒன்று 
என் நினைவுகள் பறப்பது உண்டு
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 

அலை போல் எழுந்து நதி போல் நடந்து
உலவும் காலம் இது
மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து
மயங்கும் கோலம் இது
அலை போல் எழுந்து நதி போல் நடந்து
உலவும் காலம் இது
மலர் போல் சிரித்து மனம் போல் நினைத்து
மயங்கும் கோலம் இது
நான் ஒரு சுதந்திரப் பறவை
அந்த ஆண்டவன் எழுதிய கவிதை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
இந்த நீரோடை
அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
இயற்கை எழில் கொஞ்சுகின்ற
மிஞ்சுகின்ற இள மடந்தை 
லா ல ல ல லா ல ல


ஞாயிறு, 13 அக்டோபர், 2013

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

குருவி உட்கார பனம்பழம் விழுந்தக் கதையாக இந்தப் பாடலை இணையத்தில் தவழவிட  நான் முடிவு செய்த இன்று நவராத்திரி காலம் ஆனது.  
அகர முதலியாக வரும் இந்தப் பாடலை போன்று வேறொரு பாடல் தமிழ் திரையுலகில் உண்டா என்பது தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் முழுமையாக இல்லாமல் அ, ஆ, இ, ஈ என்பதோடு முடிந்து மற்ற கதைகளை பேச ஆரம்பித்துவிடலாம்.
என்ன ஒரு இசை? 
என்னவொரு ஆண்மைக் குரலில் ஒரு பாடல்? 
என்னவொரு நடிப்பு?

திரைப்படம்: சரஸ்வதி சபதம் (1966)
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்
நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெமினி, சாவித்திரி, K R விஜயா, தேவிகா

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTU1MTcwNl96UXVTdl9lYzI1/Agara%20muthala%20ezhuthellaam.mp3






அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்
அம்மா பேச வைத்தாய் 
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி

போற்ற வைத்து புகழ் சாற்ற வைத்து
அறிவூற்றினோடு உயராற்றல் தந்தென்னை

அறிஞன் கவிஞன் கலைஞன் இவனென
அருளும் தமிழும் திகழும் கடலென

கற்றவரும் கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட
நின்னருளை தந்தருள்வாய்

உற்றார் சுற்றம் உறவினர் மாந்தர்
யானை சேனை படையுடன் வேந்தரு

பற்றும் பற்றை நீக்கிய ஞானி
பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி

தாயில்லாத பிள்ளையென்று
வாயில்லாத ஊமையென்று
ஆயிரங்களான கல்வி
வாய் திறந்து தந்த செல்வி

அன்னை உன்னை சரணமடைந்தேன்
தேவி

வெள்ளி, 11 அக்டோபர், 2013

உன்னைக்காணாமல் நான் ஏது

உங்களைக் காணாமல் நான் ஏது, உங்களைக் எண்ணாத நாள் ஏது என்றாகிவிட்டது. அன்பர்கள் அனைவரும் நலமா? வாழ்க வளமுடன்.

ஒரு குறுகிய விடுமுறையில் சென்னை வந்து தஞ்சையின் வெளிவட்டப் பகுதியில் இணைய இணைப்பு கிடைக்காமல் 5 நாட்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து இன்று மீண்டும் பரபரப்பான சென்னை வாழ்க்கையில் மீண்டும் உங்களை சந்திக்கும் போது மகிழ்ச்சியே.

இன்றும் ஒரு இனிமையான இசை, குரல்களில்...பாடல் வரிகளில் என்று சொல்ல முடியவில்லை. இளையராஜா அனுசரித்து பாடல்வரிகளுக்கு இசையமைத்திருக்கிறார். கங்கை அமரன் புலவர் இல்லையே ஆகையால் பொறுத்துக் கொண்டு பாடலை ரசிப்போம். அருண்மொழி ஒரு நல்ல பாடகர். அவ்வளவாக தமிழ் படவுலகம் அவரை கவனிக்கத் தவறிவிட்டது.

திரைப்படம் : கவிதை பாடும் அலைகள் (1990)
நடிப்பு: ராஜ் மோகன், ஜனனி
இயக்கம்: T K போஸ்
பாடல்: கங்கைஅமரன்
பாடியவர்கள் : K S சித்ரா , அருண்மொழி
இசை: இளையராஜா

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTYzODUwNF9yaDZpNV85MDBm/UnnaiKaanaamal.mp3







ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ  ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது
உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

கம்பனின் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்
காவிரிக் கரையெல்லாம்
காலடி தேடி நின்றேன்

கவிஞனைத் தேடியே
கவிதை கேட்க வந்தேன்

வானமும் பூமி எங்கும்
பாடிடும் பாடல் கேட்கும்

ஜீவனை ஜீவன் சேரும்
ஆயிரம் ஆண்டு காலம்

இனி எந்நாளும்
பிரிவேது அன்பே

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

ஆயிரம் காலம் தான்
வாழ்வது காதல் கீதம்
கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்

பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது

காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்

காலங்கள் போன போதும்
வானத்தைப்போல வாழும்

இது மாறாது
மறையாது அன்பே

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது


வெள்ளி, 4 அக்டோபர், 2013

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

நல்ல மனிதனாக வாழ கீழ்கண்ட பல வழிகள் இருக்க இந்த இனிய உலகில் நமது பல நண்பர்கள் வாழ மாயமான எவ்வழிகளையெல்லாம் கடைபிடிக்கிறார்கள் என்பதை பார்த்துகொண்டுதானே இருக்கிறோம். 
நல்ல கருத்துள்ள பாடல்.

படம் : சுமைதாங்கி (1962)
பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ்
இசை : M S விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

இயக்கம்: ஸ்ரீதர்
நடிப்பு: ஜெமினி, முத்துராமன், தேவிகா







மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
தெய்வமாகலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்

யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
தெய்வமாகலாம்


புதன், 2 அக்டோபர், 2013

மேகமே தூதாக வா அழகின் ஆராதனை தென்றலே தாலாட்ட வா இளமை முந்தாணையை...

அழகான இளமைப் பாடல். SPBக்கும் இளையராஜாவுக்கும் கிட்டத்தட்ட ஆரம்பக் கால பாடல் எனலாம். SPB தமிழில் பாட ஆரம்பித்து சில வருடங்கள் ஆகியிருந்தாலும் குரல் அதே ஆரம்பக் கால இளமையை கொண்டிருக்கிறது.

திரைப் படம்: கண்ணன் ஒரு கைக் குழந்தை (1978)

இயக்கம்: N வெங்கடேஷ்
நடிப்பு: சிவகுமார், சுமித்ரா
குரல்கள்: S P B, P சுசீலா
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/16125275-755




மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

மஞ்சள் நீர் வண்ணமே
கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்

புள்ளி மான் கூட்டமே
கொஞ்சம் துள்ளுங்களேன்
கன்னன் தேரோடும் சமயம்

நாங்கள் கண்ணம் தொட்டு
பின்னலிட்டு விளையாடும் வரையில்

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

சின்ன வாழைத் தண்டு
என்னும் காலைக் கண்டு
வண்ண மீன் கூட்டம் தழுவ
அன்பு தேனைச் சிந்தி
என்னைக் காணச் சொல்லி
அந்த தேன் கூடு மலர
நாங்கள் நெற்றிப் பொட்டை மாற்றிக் கொண்டு
இதழாலே இணைய

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

கொஞ்சும் மாணிக்கங்கள்
சிந்தும் மணி முத்துக்கள்
உந்தன் செவ்வாயின் அழகு

அந்த காணிக்கைகள்
உந்தன் கண்ணங்களின்
தங்கும் பொன்னென்னும் நிலவு

இன்னும் அச்சம் என்ன வெட்கம் என்ன
கண்ணே வா பழகு

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை

தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தாணையை

மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
ஹ ஹ ஹா ஹா ஹா ஹா