பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்

இனிமையான பாடல், இனிமை குரல்களில். இப் படத்தினைப்  பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. விபரங்கள் ஏதும் என்னிடம் இல்லை. நல்ல பாடல் அவ்வளவுதான்.

திரைப் படம்: தீர்ப்பு என் கையில் (1984)

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
 
வாணிஜெயராம் 

இசை: சங்கர் கணேஷ் 

இயக்கம்: V P சுந்தர் 

நடிப்பு: விஜய காந்த், சசிகலா 


http://asoktamil.opendrive.com/files/Nl8xMTI1NjExNl9oOHNZUV9jNjgz/Mangala%20Kungumam.mp3








மங்கல குங்குமம் 


மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 


சங்கமம் ஆகும் நாளே

திருநாளே 

கல்யாண சங்கீதம் 


கண்ணாலே நீ பாடு

ஓ ஓ 

மங்கல குங்குமம் 


மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 


சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 

கல்யாண சங்கீதம் 


கண்ணாலே நீ பாடு

ஓ ஓ ஓ 


அழகான பூவொன்று 


அமுதூறும் தேன் கொண்டு 

காற்றோடு கதை பேசும் நேரம் 

ஆ  ஆ ஆ   ஆ ஆ ஆ 


அழகான பூவொன்று 

அமுதூறும் தேன் கொண்டு 

காற்றோடு கதை பேசும் நேரம் 


ஆகாய மேகங்கள் 


பனி சிந்தும் காலங்கள் 

ஆசை நெஞ்சம் 


உன்னை நாடி உறவாடுமே 

பூங்கன்னங்கள் தன்னை 


என் இதழாலே மூடவா 




பூங்கன்னங்கள் தன்னை 

என் இதழாலே மூடவா 



மங்கல குங்குமம் 


மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 


சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 


கல்யாண சங்கீதம் 


கண்ணாலே நீ பாடு

ஓ ஓ ஓ 


மங்கல குங்குமம் 


மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 


சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 


நீ பார்க்கும் பார்வைகள் 


என்னாசை தீயினை 

நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு 


ஓ  ஓ ஓ ஓ 



நீ பார்க்கும் பார்வைகள் 

என்னாசை தீயினை 

நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு 




பொன்னான நாள் வரும் 


உன்னாசை தீர்ந்திடும் 

காதல் கண்ணா நீயும் 


கொஞ்சம் பொறுத்தாலென்ன 

நான் நீராடும் கங்கை 


என் பொன்மேனி ஆகுமே 



நான் நீராடும் கங்கை 

என் பொன்மேனி ஆகுமே 



மங்கல குங்குமம் 


மங்கையின் பொன்முகம் 

மன்னவன் மார்பினில் 


சங்கமம் ஆகும் 

நாளே திருநாளே 

கல்யாண சங்கீதம் 


கண்ணாலே நீ பாடு

ஓ ஓ ஓ 

ல ல ல ல ல ல லாலா லாலா 

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா

மறைந்த மலேசிய வாசுதேவன் அவர்களும் நல்ல பாடகர், இசையமைப்பாளர், நடிகர். ஆனால் எதிலும் தமிழ் திரை உலகின் சூட்சமம் தெரியாததால் முழு வெற்றி பெறமுடியாமல் போனவர்.
வித்தியாசமான ஒரு காலகட்டத்தில் அமைதியான வகையில் ஒரு அட்டகாசமான பாடலை வழங்கியிருந்தார் இசை ஞானி.
கண்ணை மூடிக் கொண்டு அனுபவிக்க வேண்டிய பாடல்.


திரைப் படம்: நண்டு (1981)
இசை: இளையராஜா
பாடியவர்: மறைந்த மலேசிய வாசுதேவன்
பாடல்: வைரமுத்து என்று நினைக்கிறேன்.
இயக்கம்: J மகேந்திரன்
நடிப்பு: சுரேஷ், அஷ்வினி
எழுதியவர்: P B ஸ்ரீனிவாஸ் அல்லது கங்கை அமரன்???

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTI1NTk5NF9idlFLcl82NmEz/AlliThandhaBhoomi.mp3





ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஹூ ஹூ ஹூ ஹூ ஹூம் ஹூம் ஹூம் ஹூம்
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

சேவை செய்த காற்றே பேசாயோ
ஷேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா
புரண்டு ஓடும் நதி மகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம் தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் ஆதனம் தேனோ
விரியும் பூக்கள் பாலங்கள்
விசிறியாகும் நானல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ஹூ ஹூம் ஹூ ஹூம் ஹூ ஹு ஹூம் ஹூம் ம்ம்ம்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

காதல் கடல் கரையோரமே என் கண்ணே

சிதம்பரம் சுந்தரம் பிள்ளை ஜெயராமன் ஒரு நல்ல பாடகர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர். அந்தக் காலத்தில் ஒரே ஒரு திறமையை மட்டும் வளர்த்துகொண்டு பிரபலம் அடைந்தவர்கள் குறைவு. உதாரணம் சிவாஜி கணேசன்.
எம் ஜி யார் நடிப்பு+அரசியல், கமல் நடிப்பு+நடனம் இப்படி பலர்.

இன்று சாமானியர்களாகிய  நாம் மட்டுமே multi task or multicraft என அந்த பழைய முறைகளை பின்பற்றி வருகிறோம். அது நமது பிழைப்புக்காக.
நமது அரசியல் வாதிகளுக்கு அந்த தொந்திரவே இல்லை. ஒரே திறமை மக்களை ஏமாற்ற தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவு தான். ஓகே இங்கே எதற்கு அரசியல்.

நல்லதொரு பாடலை கேட்போம்.
இதுவும் இரண்டு பொண்டாட்டி காரன் (!) கதைதான் போலிருக்கிறது.
படத்திற்கு கதை, வசனம்: மு கருணாநிதி. இது அவருடைய சொந்த படம் (மேகலா பிச்சர்ஸ்)

எது எப்படியோ பாடல் அருமை.

திரைப்படம்: குறவஞ்சி (1960)
இசை:T R பாப்பா
பாடியவர்கள்: C S ஜயராமன், P லீலா, ஜமுனா ராணி
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி, மைனாவதி
இயக்கம்: A காசிலிங்கம்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMDkxOTU1MF9WZExhal9kZmYz/KAATHAL%20KADAL%20KARAIYORAMEY%20SSKFILM015%20CSJPLPS%20@%20KURAVANJI[128].mp3





காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காதல் கடல்
இன்பமே
காதல் கடல்
என்றுமே காதல் கடல் கரையோரமே

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காதல் கடல் கரையோரமே

நித்தம் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் மாறிடுவேனே
நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் மாறிடுவேனே

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் வாழ்ந்திருந்தேனே

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ


நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் வாழ்ந்திருந்தேனே

 ஆ  ஆ ஆ ஆ

முத்தமிடும் அலையால் நான் முத்தாகவே மாறி
முத்தமிடும் அலையால் நான் முத்தாகவே மாறி
முழு மதிபோலே வீசிடுவேனே
ஒளி வீசிடுவேனே

காதல் கடல்
இன்பமே
காதல் கடல்
என்றுமே
காதல் கடல் கரையோரமே
கண்ணே
காத்திருந்து நாமே
தவம் புரிந்தோமே
காத்திருந்து நாமே
தவம் புரிந்தோமே
காதல் கடல் கரையோரமே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

புதன், 24 ஏப்ரல், 2013

மலை கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே

ரஜினி படங்கள் ஒரு காலத்தில் பாட்டுக்காகவே ஓடிய படங்களும் உண்டு. அந்த வரிசையில், ரஜினி திரையில் பாட்டு பாடுபவராகவே நடித்திருப்பார். இந்தப் படத்தின் எல்லா பாடல்களுமே சிறந்த பாடல்கள் வரிசையில் வரும்.   ஸ்வர்ணலதாவின்  அழகானக் குரலில் கேட்டு மகிழ்வோம்.

திரைப் படம்: வீரா (1994)
நடிப்பு: ரஜினி, மீனா
இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா
இசை: இளையராஜா 
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
பாடல்: வாலி

http://asoktamil.opendrive.com/files/Nl80OTQ3Mzg3X1drWktoXzBiYmU/MalaiKovil.mp3





ஒ  ஒ  ஒ   ஒ  ஒ  ஒ   ஒ   ஒ   ஒ   ஒ   ஒ   ஒ  
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே 
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே 

 ஒ  ஒ  ஒ   ஒ  ஒ  ஒ   ஒ   ஒ   ஒ   ஒ   ஒ   ஒ  

நாடகம்  ஆடிய  பாடகன்
ஒ  ஒ   ஒ   ஒ  
நீ  இன்று  நான்  தொடும்  காதலன்
ஒ  ஒ   ஒ   ஒ  

நீ  சொல்ல  நான்  மெல்ல  மாறினேன் 
நன்றியை  வாய்  விட்டு   கூறினேன் 

நீர்  அழகும்  செல்ல  பேர்  அழகும் 
உன்னை  சேராதா  உடன்  வாராதா 
மான்  அழகும்  கெண்டை  மீன்  அழகும் 
கண்கள்  காட்டாதா  இசை  கூட்டாதா
பாலாடை  இவன்  மேலாட  
வண்ண  நூலாடை  இனி  நீ  ஆகும் 

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே 
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 
மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

நான்  ஒரு  பூச்சரம்  ஆகவோ 
நீள்  குழல்  மீதினில்  ஆடவோ 
நான்  ஒரு  மேலிசை  ஆகவோ 
நாளும்  உன்  நாவினில்  ஆடவோ 
நான்  படிக்கும்  தமிழ்  கீர்த்தனங்கள் 
இங்கு  நாள்  தோறும்  உந்தன்  சீர்  பாடும் 
பூ  மரத்தில்  பசும்  பொன்  நிறத்தில் 
வலை  பூத்தாடும்  உந்தன்  பேர்  பாடும் 
மா  கோலம்  மழை  நீர்  கோலம் 
வண்ண  நாள்  காணும்  இந்த  ஊர்கோலம் 

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லுதே 
முத்து  முத்து  சுடரே  சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 
முத்து  முத்து  சுடரே சுடரே  கொடு  வேண்டிடும்  வரங்களையே 
வண்ண  வண்ண  கதிரே  கதிரே  தொடு  ஆயிரம்  சுகங்களையே 

மலை  கோவில்  வாசலில்  கார்த்திகை  தீபம்  மின்னுதே 
விளக்கேற்றும்  வேளையில்  ஆனந்த  கானம்  சொல்லு

திங்கள், 22 ஏப்ரல், 2013

மண மேடை மலர்களுடன் தீபம்

P சுசீலா அம்மாவின் குரல் விசேஷமாக ஒலிப்பதாக இந்தப் பாடலில் தெரிகிறது எனக்கு. எவ்வளவு மென்மை. அதற்கேற்ற பாடல் வரிகளை விழுங்காத இசை. கிருஸ்த்துவர்களின் ஆலயத்தில் பயன்படுத்தப் படும் இசைக் கருவிகளையே பெரும்பாலும் உபயோகித்திருக்கிறார் இசையமைப்பாளர். ஒன்றும் சொல்லுவதற்கில்லை. ஒன்றிவிட்டேன் பாடலில். அருமையானப் பாடல்.



திரைப் படம்: ஞான ஒளி (1972)
குரல்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: P. மாதவன்
நடிப்பு: சிவாஜி, சாரதா, ஜெய கௌசல்யா



http://asoktamil.opendrive.com/files/Nl8xMDk3MTQ4NF9xU1NZYV9kOTY0/Mana%20medai.mp3





மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார்
என்றும் வாழ்க மணமங்கை என்பார்

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நான் இரவில் எரியும் விளக்கு
நீ என் காதல் மணிமாளிகை
நீ பகலில் தெரியும் நிலவு
நான் உன் கோவில் பூந்தோரணம்
மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்

என் மடியில் விடியும் இரவு
நம் இடையில் வளரும் உறவு
தேகம் தழுவும் மலர் காற்று
மோகம் பரவும் பெருமூச்சு
நான் பெறுவேன் சுகமே சுகமே

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்

என் தனிமை உலகம் இனிமை
என் தாய் வீடும் நினைவில் இல்லை
நான் உறவில் உனது அடிமை
உன் துணை போல சுகமும் இல்லை
அருள் புரிவார் தேவன் நம் பாதை எங்கும்

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்