பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

தாழம்பூவே வாடா தாயின் வாழ்வே வாடா

சிறந்த படம் என்பதாக கேள்விப் பட்டேன். பார்க்க வாய்ப்பில்லை. இந்தப் பாடலுக்கான காணொளியும் கிடைக்கவில்லை.
பாடல் கேட்க, அந்தக் காலத்தில் பாலசரஸ்வதி பாடிய பாடலோ  என நினைத்தேன்.
நல்ல குரல் வளம், இனிமையான இசை. அம்மாவின் இனிமையான கனவு.


திரைப் படம்: கனவு மெய்ப்பட வேண்டும்
பாடியவர்: ரம்யா கிருஷ்ணன்
இசை: மறைந்த திரு மகேஷ்
பாடல்: தெரியவில்லை
இயக்கம்: ஜானகி விஸ்வனாதன்
நடிப்பு: ரம்யா கிருஷ்ணன், அசின் ஷர்மா






http://asoktamil.opendrive.com/files/Nl8yNzI2MDg2Nl9ZRllCT181ZTBh/thaazham%20poove%20vaadaa.mp3




தாழம்பூவே வாடா
தாயின் வாழ்வே வாடா
கோயில் தேராய் கொண்டாடும் ஊரே
தாழம்பூவே வாடா
தாயின் வாழ்வே வாடா
ஓ ஓ ஓ
தாழம்பூவே வாடா
தாயின் வாழ்வே வாடா
கோயில் தேராய் கொண்டாடும் ஊரே
தாழம்பூவே வாடா
தாயின் வாழ்வே வாடா
ஓ ஓ ஓ ஓஹோ ஹோ ஹோ
ஆனை மேலே அம்பாரி மேலே போக வேண்டும் நீயே
வீதிதோரும் சந்தோஷக் குலவை
போடக் காண்பேன் நானே
வானம் கூட வின்மீன்களாலே
வாழ்த்தி பாடும் நாளை
வானவில்லும் உன் தோளை தேடி
சூடி போகும் மாலை
ஓ ஓ ஓ
தாழம்பூவே வாடா
தாயின் வாழ்வே வாடா
கோயில் தேராய் கொண்டாடும் ஊரே
தாழம்பூவே வாடா
ஓ ஓ ஓ
தாயின் வாழ்வே வாடா
தூர தேச நல்லோர்கள் கூட
போற்ற வேண்டும் உன்னை
சாரல் தூவும் கண்ணாடிப் பூக்கள்
வாழ்த்த வேண்டும் என்னை
ஆயுள் காலம் உன் மூச்சில் தானே
வாழ வேண்டும் அன்னை
சாயும் நேரம் உன் மார்பில் தானே
மூட வேண்டும் கண்ணை
ஓ ஓ ஓ
தாழம்பூவே வாடா
தாயின் வாழ்வே வாடா
கோயில் தேராய் கொண்டாடும் ஊரே
தாழம்பூவே வாடா
ஓ ஓ ஓ
தாழம்பூவே வாடா
தாயின் வாழ்வே வாடா
கோயில் தேராய் கொண்டாடும் ஊரே
தாழம்பூவே வாடா
ஓ ஓ ஓ
தாயின் வாழ்வே வாடா
தாயின் வாழ்வே வாடா
தாயின் வாழ்வே வாடா


புதன், 4 டிசம்பர், 2013

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

என்னதான் இருந்தாலும் திரு A P நாகராஜனை போலவோ திரு S சங்கரைப் போலவோ அல்லது சாண்டோ M M A சின்னப்பா தேவரைப் போலவோ யாரும் தமிழிலில் பக்தி படங்களை கொடுக்க முடியாது.

B R பந்துலு சமூக அக்கறை உள்ள பல படங்களை செய்திருந்தாலும் இந்த ஒரு பாடலிலேயே அவருக்கு சமய படங்களில் ஒரு ஈர்ப்பு இல்லாதிருப்பது தெரிகிறது.

நல்ல பாடல் ஆனால் காட்சி அமைப்பு கேவலமாக இருக்கிறது.

திரைப் படம்: கங்கா கௌரி (1973)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: B R பந்தலு
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், S ஜானகி.
நடிப்பு: ஜெமினி, ஜெயலலிதா, சிவகுமார்.

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDkxMDMxNV92OEl4el9mZDI0/Antharangam%20Naan.mp3






அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே



மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே

மந்திரத்தில் நான் விழுந்தேன் மாதவனின் தோள்களிலே

வந்த வழி நான் அறிவேன் மங்கை என்னை நீ அறிவாய்

வந்த வழி நான் அறிவேன் மங்கை என்னை நீ அறிவாய்

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே



தேடி வந்த சிலையை கண்டு மூடிக் கொண்ட கண்கள்

இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்

தேடி வந்த சிலையை கண்டு மூடிக் கொண்ட கண்கள்

இந்த தேவரையும் விடுவதில்லை ஊடல் கொண்ட பெண்கள்



மணந்தவனை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள்

மணந்தவனை யாரிடத்தும் தருவதில்லை நாங்கள்

தினந்தோறும் நாடகங்கள் ஆடுவது நீங்கள்

என் மன்னவா



உண்மை சொல்லவா



பெண்மை அல்லவா


என்னை வெல்லவா

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

தாமரையில் குடியிருக்கும் தங்க மலர் தேவி உன்னை தானிணைந்து தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி

தாமரையில் குடியிருக்கும் தங்க மலர் தேவி உன்னை தானிணைந்து தழுவிக் கொள்ளும் தேவன் இவன் ஆவி



அறிவேனே சாகஸங்கள் இதுவரையில் போதும்

அறிவேனே சாகஸங்கள் இதுவரையில் போதும்
அலை மோதும் காதலுடம் பூ மகளைப் பாரும்

என் மன்னவா



உண்மை சொல்லவா



பெண்மை அல்லவா



என்னை வெல்லவா

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

அந்தரங்கம் நான் அறிவேன் சிந்தும் இளம் புன்னகையே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆஆ

திங்கள், 2 டிசம்பர், 2013

ஹரிவராசனம் விஸ்வமோகனம்

கார்த்திகை மாதம்,  முருகனுக்கும் சாமி ஐயப்பனுக்கும் உகந்த மாதம். இந்தப் பாடலை பதிவிடுவதில் மனதிற்கு இனிமை.

இசையமைப்பாளர் ஒரு கிறிஸ்துவர், பாடியவரும் ஒரு கிறிஸ்துவர். இருந்தும் நமது மனதில்  திருப்தியான ஒரு தெய்வீக தன்மையை கொண்டுவருவதில் வெற்றியடைந்துவிட்டார்கள்.

எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை. எல்லாமே முழுமை பெற்றது போல ஒரு பாடல்.

திரைப் படம்: சாமி ஐயப்பன் (1975)
இசை: G தேவராஜன்
குரல்: K J யேசுதாஸ்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: P சுப்பிரமணியம்
நடிப்பு: ஜெமினி, M N நம்பியார், ஸ்ரீவித்யா, லக்ஷ்மி

http://asoktamil.opendrive.com/files/Nl8yNDkzMDgzNF9iblI1Nl9kZWYw/Harivarasanam.mp3







ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா


இந்தப் பாடலுக்கு Sha Yamuna அவர்களின் விளக்கம் கருத்துரையில் இருப்பதை விட இங்கே பதிவது அன்பர்களுக்கும் உதவும் என நினைக்கிறேன்.
நன்றி ஷா யமுனா.


பாடல் பற்றிய விவரங்கள்

இசைஅமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடியவர்கள் : கே.ஜே. யேசுதாஸ்

பாடலாசிரியர் : கம்பன்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ஐயர்

பொருள்

ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம்ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம்நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே


மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம்ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும்
தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,
தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம்தேவமாஸ்ரயே

சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

சுவாமியே சரணம் ஐயப்பா

சனி, 30 நவம்பர், 2013

இரவும் நிலவும் வளரட்டுமே

இனிமையான சங்கதிகளுடன் மிக சிரமமான பாடல். நடிப்பால் இமயங்களும் குரலால் இமயங்களும் வழங்கியுள்ள இனிமை கீதம்.

திரைப் படம்: கர்ணன் (1964)
நடிப்பு: சிவாஜி, N T ராம ராவ், சாவித்திரி, தேவிகா
குரல்கள்: டி எம் எஸ், P சுசீலா
இயக்கம்: B R பந்துலு
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yNjM5NDg5MV8wV1NEbV9kODQ5/Iravum%20Nilavum.mp4









ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே

தரவும் பெறவும் உதவட்டுமே
தரவும் பெறவும் உதவட்டுமே
நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஏ ஏ ஏ ஏ

மல்லிகை பஞ்சணை விரிக்கட்டுமே
அங்கு மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
நெஞ்சில் இருக்கின்ற வரையில் எடுக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும் வளரட்டுமே
ஏ ஏ ஏ ஏ

ஆசையில் நெஞ்சம் துடிக்கட்டுமே
அங்கு அச்சமும் கொஞ்சம் இருக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே
அதில் நாணமும் கொஞ்சம் பிறக்கட்டுமே

இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே
இரவும் நிலவும்
வளரட்டுமே
ஏ ஏ ஏ ஏ

வியாழன், 28 நவம்பர், 2013

வா வா என் வீணையே

எஸ் பி பியின் அருமையான இழுத்த இழுப்புகளுக்கு ஈடு கொடுத்து பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். அழகான இனிமையான பாடல். கமழும் நடிப்பில் பிண்ணியெடுத்திருக்கிறார்.


திரைப் படம்: சட்டம் (1983)
பாடல்: வாலி
இசை:கங்கை அமரன்
நடிப்பு: கமல், மாதவி
இயக்கம்: K விஜயன்
பாடியவர்கள்: SP  பாலசுப்ரமணியன் , வாணி ஜெயராம்

http://asoktamil.opendrive.com/files/Nl8yNTY1OTAzM19RQVVJNV81MjQ4/vaa%20vaa%20en%20veenaiye.mp3








வா வா என் வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா
கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா

வா வா வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா ல லா

தண்டோடு தாமரையாட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே
உன்தன்  ஞாபகம் கூட
தண்டோடு தாமரையாட
வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே
உன்தன் ஞாபகம் கூட

துணை தேடுதோ
தனிமை துயர் கூடுதோ

அணை மீறுதோ
உணர்ச்சி அலை பாயுதோ

நாள் தோறும் ராத்திரி வேளையில்
ரகசிய பாஷை தானோ

வா வா உன் வீணை நான்
த ன னா
விரல் மீட்டும் வேளை தான்
த ன னா
மீட்டாமல் காதல் ராகம்
யாவும் விளங்கிடுமா
கிள்ளாத முல்லையே
வந்தாள் உன் எல்லையே
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா

சந்தோசம் மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ என் மனம்
இன்ப நாடகம் போட
சந்தோசம் மந்திரம் ஓத
சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ என் மனம்
இன்ப நாடகம் போட

இரவாகலாம் இளமை
அரங்கேறலாம்

உறவாடலாம் இனிய
ஸுரம் பாடலாம்
கேட்காத வாத்திய ஓசைகள்
கேட்கையில் ஆசைகள் தீரும்

வா வா என் வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா
மீட்டாமல் காதல் ராகம்
ஹோ ஹோ ஹோ

கிள்ளாத முல்லையே
காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும் போது
ஊடல் ஆகுமா

வா வா என் வீணையே
ல லா
விரலோடு கோபமா
ல லா

வா வா உன் வீணை நான்
ல ல ல
விரல் மீட்டும் வேளைதான்
ல ல ல ல