பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 ஏப்ரல், 2012

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும் ஒன்றென்ன நூறாய்

நல்லதொரு இளமை பாடல்.


அம்மன் அருள் (1973)
பாடியவர்கள்: S P B, P சுசீலா,
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: பட்டு
நடிப்பு: ஜெய்ஷங்கர், லக்ஷ்மி


ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான் தானே

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

பட்டுத் தளிர் கொடியில் பச்சை பசும் கிளிகள்
தொட்டு கொண்டு பேசும் சிந்து
புன்னை மர நிழலில் சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
ஓடை நீரில் வாளை மீன்கள்
ஜாடையில் சொல்லும் நாடகம் என்னென்ன
ஓடும் தென்றல் பூவை பார்த்து
கூறும் கதைகள் என்னென்ன

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே

உன்னைக் கண்டு எனக்கு என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா
இன்னும் என்ன மயக்கம் நெஞ்சில் உள்ள வரைக்கும்
அள்ளி அள்ளி எடுப்போம் ஒண்ணா
நாலில் ஒன்று நாணம் என்று
பெண் மனம் கொஞ்சம் அஞ்சுவதென்னென்ன
அச்சம் என்ன ஆசை கொண்டு
துள்ளிடும் உள்ளம் பூப்பந்து..

ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹ்
ல ல ல ல

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு அமர்க்களமான அறிதான பாடல். பகிர்விற்கு மிக்க நன்றி சார். பா.நி.பாவில் தொடர்பு கொடுக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

தொடர்பு இதில் http://myspb.blogspot.in/2012/04/1300.html

கருத்துரையிடுக