பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 18 ஜனவரி, 2013

முத்து முத்து தேரோட்டம்

நல்ல இனிமையான பாடல்களில் ஒன்று.


திரை படம்: ஆணி வேர் (1981)
நடிப்பு: சிவகுமார், சரிதா 
இயக்கம்: கே விஜையன் 
இசைசங்கர் கணேஷ் 
பாடல்: வாலி அல்லது புலவர் புலமைபித்தன் 
பாடியவர்வாணி ஜெயராம் 

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே

நெஞ்ச வானத்தில் நினைவு மேகங்கள்
நாளும் ஊர்கோலம் போகும்
இன்ப ராகத்தில் இரவு நேரத்தில்
பாடும் பாட்டொன்று தேடும்
அதன் பெயர்தான் விரகம்
எந்த தினம்தான் விலகும்
பதில் நீதான் கேளாயோ
பதில் நீதான் கேளாயோ

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே

கடலில் சேராத கங்கை எங்குண்டு
இன்னும் ஏனிந்த மௌனம்
உறவு தேடாத உள்ளம் எங்குண்டு
என்னதான் உந்தன் எண்ணம்
என்றும் இளமை இனிமை
இந்த தனிமை கொடுமை
எந்தன் ஏக்கம் தீராயோ
எந்தன் ஏக்கம் தீராயோ

முத்து முத்து தேரோட்டம்
என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும்
இதை நீ கேட்டு வா தென்றலே
இதை நீ கேட்டு வா தென்றலே
இதை நீ கேட்டு வா தென்றலே

1 கருத்து:

NAGARAJAN சொன்னது…

Lyrics by Pulamaippiththan.

கருத்துரையிடுக