பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

அமைதிப்புறாவே அமைதிப்புறாவே amaithi puraave amaithi purave

உலகின் இன்றைய தேவை இந்த சமாதானமே. பெரும்பாலும் ஈகோ மட்டுமே பல நாடுகளுக்குள் பகையை வளர்த்துவிடுகிறது.
என்ன நேர்த்தியாக உலகின் அமைதிக்கு கவி எழுதியிருக்கிறார் கவிஞர்? பாடிய குரலும் நடித்தவரும் பிரமாதமாக பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். உள்ளத்தை நெகிழச் செய்யும் கே வி மகாதேவனின் மற்றுமொரு பாடல்.

திரைப்படம்: தாயே உனக்காக (1966)
பாடியவர்: P சுசீலா 

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
இயக்கம்: P புல்லையா,
நடிப்பு: சிவாஜி, பத்மினி, தேவிகா, ஜெயலலிதா











அமைதிப்புறாவே அமைதிப்புறாவே
அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே
நான் நேசிக்கின்றேன் உன்னை

அமைதிப்புறாவே அமைதிப்புறாவே
அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே
நான் நேசிக்கின்றேன் உன்னை

அமைதிப்புறாவே அமைதிப்புறாவே
அழைக்கின்றேன் உன்னை

காலங்களாலே தென்றல் வருக
புயலே வர வேண்டாம்
மேகங்களாலே மழையே வருக
வெள்ளம் வர வேண்டாம்
வீடுகள்தோறும் ஒளியே வருக
இருளே வர வேண்டாம்
நாடுகள்தோறும் உறவே வருக
பகையே வர வேண்டாம்

சமாதானமே சமாதானமே
தழுவுகின்றேன் உன்னை
தர்மதேவனே தர்மதேவனே
சரணடைந்தேன் உன்னை

அமைதிப்புறாவே அமைதிப்புறாவே
அழைக்கின்றேன் உன்னை

புத்தன் வழியில் அசோகன் சேவை
புரிந்தது எதற்காக
புன்னகை முகமே தேவனின் வீடென
சொன்னது எதற்காக
சத்திய நெறியைத் தாரணி எங்கும்
தந்தது எதற்காக
சமாதானமாம் சமாதானமாம்
தாயே உனக்காக

அமைதிப்புறாவே அமைதிப்புறாவே
அழைக்கின்றேன் உன்னை
நிம்மதியே நிம்மதியே
நான் நேசிக்கின்றேன் உன்னை

அமைதிப்புறாவே அமைதிப்புறாவே
அழைக்கின்றேன் உன்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக