பின்பற்றுபவர்கள்

திங்கள், 7 நவம்பர், 2011

செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே


இது ஒரு இனிமையான அபூர்வ பாடல். சிறிய பாடலும் கூட.

திரைப் படம்: ஊருக்கு ஒரு ராஜா (1979)
பாடியவர்கள்: மலேஷியா வாசுதேவன், S ஜானகி
இசை: S D சேகர் , A R ரஹ்மான் தந்தை
நடிப்பு: அன்னபூரணி, ஸ்ரீராஜ்
இயக்கம்: S T தண்டபாணி








ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ல ல ல ல ல
ம் ம் ம் ம் ம் ம்
செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே
செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே

என் மன மாளிகையை ஆளும் இளவரசே
கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே
என் மன மாளிகையை ஆளும் இளவரசே
கண்களின் மேடையிலே தோன்றும் உன்னழகே

ராகம் பண்ணோடு இசையோடு உண்டாகும் இதமான ராகம்
மோகம் நெஞ்சோடு நினைவோடு உண்டாகும் சிங்கார மோகம்
நீதானே காதல் தேவன் நீதானே காதல் தேவி

செந்தமிழ் சோலையிலே வளரும் பூங்கொடியே
செவ்விதழ் மேடையிலே தோன்றும் புன்னகையே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ர ர ர ர ர ர ர
ல ல ல ல
ர ர ர ர
வானம் இரவோடு நிலவோடு உறவாடும் அழகான வானம்
வாழ்க்கை ஆணோடு பெண்ணோடு அரங்கேறும் சுகமான வாழ்க்கை
தென்பாண்டி கவிஞன் நீயே தேனூரும் கவிதை நீயே
மன்மத ராகங்களே பாடும் இதயங்களே
மாலைத் தென்றலிலே மயங்கும் பருவங்களே

ல ல  லலல்லல லல்லலல்ல லல்லலலல

1 கருத்து:

பால கணேஷ் சொன்னது…

குறிஞ்சி மலர் சார்! அபூர்வமான பாடல்... கேட்க இனிமை. எப்படித் தான் தேடிப்பிடிக்கிறீர்களோ... வாழ்த்துக்கள். நன்றிகள்.

கருத்துரையிடுக