பின்பற்றுபவர்கள்

புதன், 2 நவம்பர், 2011

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி உன்னை பாராமலே மனம் தூங்காதடி


என்னவொரு செரிவானப் பாடல் என்றே எப்போதும் எண்ணத் தோன்றும் பாடல் வரிகள் T ராஜேந்தர் அவர்களின் பாடல்கள். எதற்கும் அடங்காத ஒரு வகை இசையமைப்பு.

திரைப் படம்: உறவைக் காத்த கிளி (1984)
குரல்கள்: B S சசிரேகா, K J யேசுதாஸ்
பாடல்: விஜய T ராஜேந்தர்
நடிப்பு:  விஜய T ராஜேந்தர், ஜீவிதா
இயக்கம்:விஜய T ராஜேந்தர்
இசை: விஜய T ராஜேந்தர்



http://www.divshare.com/download/16090408-72d




கனவென்னும் ஆலைக்குள் அகப்பட்ட கரும்பே
நினைவென்னும் சோலைக்குள் பூத்திட்ட அரும்பே

எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து
மிஞ்சுதடி வஞ்சி மலரே.... ஓ...
நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு
சொல்லுதடி வைர சிலையே...
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வசந்தம் என்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தம் என்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
பபா  பாபா பபா  பாபா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா....
போதை ஏற்றி கொள்ள
தாளம் போடுதடி அம்மம்மா....
பொய்கை தாமரையில்
புகுந்த வண்டு ஒன்று அம்மம்மா....
போதை ஏற்றி கொள்ள
தாளம் போடுதடி அம்மம்மா....
பொய்கை வண்டாய் உன் கை மாற
மங்கை நான சேவை செய்தாய்
வைகை போல் நானத்தில் வளைகின்றேனே
வை கை நீ என்றுன்னை சொல்கின்றேனே
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராவிடில் நித்தம் உறங்கா விழி
தீம்தன தீம்தன தீம்தன
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா
தீம்தன தீம்தன தீம்தனா

பச்சை அரிசி என்னும்
பற்கள் கொண்ட உந்தன் புஞ்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம்
வேகிறது உன் நினைப்பு
பச்சை அரிசி என்னும்
பற்கள் கொண்ட உந்தன் புஞ்சிரிப்பு
நெஞ்ச பானையிலே நித்தம்
வேகிறது உன் நினைப்பு
வார்த்தை தென்றல் நீ வீசும்போது
ஆடும் பூவாய் ஆனேன் மாது
இதழோரம் சில்லென்று நனைகின்றது
சிந்தும் தேன் கூட சிந்தோன்று புனைகின்றது
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து
மிஞ்சுதடி வஞ்சி மலரே.... ஓ...
நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு
சொல்லுதடி வைர சிலையே...
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னை பாராமலே மனம் தூங்காதடி
வசந்தம் என்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை
வசந்தம் என்னும் ஒரு பாவை
நீ அசைந்து வந்த ஒரு சோலை

3 கருத்துகள்:

shabi சொன்னது…

ithu pol innum niraya t.r padalhalai pahirungal

பால கணேஷ் சொன்னது…

டி.ராஜேந்தரின் மெலடிகள் என்றும் கேட்க சுகமானவை. அதிலும் யேசுதாஸ் இணைந்து கொண்டால்... மிக அருமை!

காரிகன் சொன்னது…

ஒரு காலத்தில் டி ராஜேந்தர் பாடல்களை கேட்காமல் இருந்து விட்டு இப்போது திடீரென கேட்கும் போது இன்றைய பல பாடல்களை விட இவரின் பாடல்கள் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது.இவரின் சில பாடல்கள் கேட்பதற்கு இனிமையாகவே இருக்கும். மூங்கிலிலே பாட்டிசைக்கும் என்ற ஒரு பாடல் கேட்பதற்கு ரம்மியமாக இருக்கும்.

கருத்துரையிடுக