பின்பற்றுபவர்கள்

திங்கள், 23 ஜனவரி, 2012

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு


நல்ல பாடல். மறைந்த  திரு மலேஷியா வாசுதேவன் இனிமையாக பாடி இருக்கிறார். கதா நாயகன் ஏதோ தப்பான எண்ணத்துடன் பாடுவது போல படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

திரைப் படம்: விடியும் வரைக் காத்திரு (1981)
இயக்கம்: K பாக்கியராஜ்
நடிப்பு: K பாக்கியராஜ், சத்யகலா
இசை: இளையராஜா
குரல்கள்: மலேஷியா வாசுதேவன், S ஜானகி
பாடல்: வாலி



http://www.divshare.com/download/16611560-4f4




நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ம்...என்னாங்க அது
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்

மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அது போலவே உன்னை காண நான் அலைபாய்கிறேன்
ல ல ல ல ல ல ல
மழையாக மாறுவேன் மடிமீது சேருவேன்
நீராட்டுவேன் உன் மேனியை
அன்பே உன்னை தினம் அனுபவிப்பேன்

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்
காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்
ஆ ஆ ஆ ஆ ஆ
என்னென்ன சொல் இன்னாளிலே நிறைவேற்றுவேன்
ல ல ல ல ல ல ல
தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக