பின்பற்றுபவர்கள்

புதன், 6 மார்ச், 2013

நீராடும் கண்கள் இங்கே/நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

 நீராடும் கண்கள் எங்கே என்ற இந்தப் பாடல் இநதப் படத்தில் இடம் பெறவில்லை. முதலில் இந்தப் பாடலுக்கு பதிலாக நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் எங்கிற பாடல் பதிவு செய்யப் பட்டது. பாடலின் வரிகளை பார்த்தால் இரண்டும் கிட்டத் தட்ட ஒரே விதத்தில் அமைந்திருப்பதை புரிந்துக் கொள்ளலாம்.
 
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ


நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

ஏனோ இரண்டு பாடல்களுக்கும் இந்தப் படத்தில் இடம் பெற  ராசி  இல்லாமல் போனது. பின்னர் சாந்தி என்கின்ற படத்தில் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் எங்கிற பாடலை இசை மன்னர்கள் இடம்பெற செய்தார்கள். இரண்டுப் பாடல்களையும் சுசீலா அம்மா வழக்கமான இனிமையுடன் அழகாகப் பாடியிருக்கிறார்கள். இரவில் அமைதி நாடுவோர் கேட்கவேண்டிய பாடல்கள்.
இரண்டு  பாடல்களின் ஒலி  வடிவத்தையும்  இங்கே இணைத்திருக்கிறேன்.


திரைப் படம்: வெண்ணிற ஆடை (1965)
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: ஜெயலலிதா, ஸ்ரீகாந்த்
பாடியவர்: P சுசீலா
இயக்கம்: ஸ்ரீதர்




Upload Music Files - Audio Hosting -






நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த போது நிம்மதி ஏது
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெச்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
இனமறியாமல் நானிருந்தேனே
மனமொன்று தந்து மயங்க வைத்தாயே
கனவுகளெல்லாம் நீ வளர்த்தாயே
கையில் வராமல் பறித்து விட்டாயே
பறித்து விட்டாயே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே


 திரைப் படம்: சாந்தி (1966)
பாடியவர்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை:  M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, தேவிகா


Share Music - Audio Hosting -







நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக்கனிகள் ஆசையில் வாட
ஏலப்பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
நிம்மதி ஏது நிம்மதி ஏது

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்


ல ல ல ல ல

லல லல லல லல

காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன் மழையாக
காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன் மழையாக
பாதி விழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம்  போலாட
நீ தர வேண்டும் நான் பெற வேண்டும்
நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்
நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறியாத தகவல் + பாடல்...

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல் மற்றும் பாடல் நன்றி சார்.

கருத்துரையிடுக