பின்பற்றுபவர்கள்

புதன், 11 டிசம்பர், 2013

வண்ண மலர் தன்னைக் கண்டு இன்னிசைப் பண் பாடிக் கொண்டு


இந்திய சுதந்திரம் மற்றும் பாகிஸ்தான் பிரிவினையை பின்புலமாகக்  கொண்டு தயாரிக்கப்பட்ட படம்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் தந்தையை இழந்த எம் ஜி யார் குடும்பம் கராச்சியிலிருந்து சென்னை வந்து சேர்கிறது. இங்கு எம் ஜி யார் அவரது மாமனை (வில்லன்) கண்டுபிடித்து கொல்கிறார். அதனால் ஜெயிலுக்கு போகிறார்.
படம் அப்போது வெற்றிநடை போட்டதாக விக்கி சொல்கிறது.

பாடலில் தமிழ் கோலோச்சுகின்றது. உயர்ந்த இலக்கியத் தமிழில் இது போன்ற பாடல்கள் மிக சொச்சமே.
ஆனால் பாடலுக்கு குரல் கொடுத்தவர்கள் அந்தகால தமிழ் சினிமா வழக்கப் படி தமிழர்கள் அல்லாதவர்கள்.

பலருக்கு இந்த பாடல் அவ்வளவாக ரசிக்காது என நினைக்கிறேன்.

இந்தப் பாடலில் பாலுவாக வருபவர் திக்குறிச்சி சுகுமாரன் நாயர்.
லீலாவாக அழைக்கப் படுபவர் பி.கே.சரஸ்வதி.
எம் ஜி யாருக்கு ஜோடி எம் எஸ் தரௌபதி எனும் நடிகை.




திரைப் படம்: அந்தமான் கைதி (1952)
நடிப்பு: எம்.ஜி.ஆர், பி.கே.சரஸ்வதி
பாடியவர்கள்: மோதி அல்லது கண்டசாலா, பி லீலா
இசை: டி.கோவிந்தராஜுலு நாயுடு
பாடல்: கு.சா.கிருஷ்ணமூர்த்தி
இயக்கம்: வி.கிருஷ்ணன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yNzU2MTgzOV9lQ0FWZF9kM2Y1/vannamalar-ANDHAMANKAIDHI.mp3




ஓ ஓ ஓ ஓ ஓ பாலு

ஓ ஓ ஓ ஓ ஓ லீலா

வண்ண மலர் தன்னைக் கண்டு

இன்னிசைப் பண் பாடிக் கொண்டு

தன்னை மறந்தே பொன் வண்டு

என்ன சொல்லுது
வண்ண மலர் தன்னைக்

கண்டு வண்டு

கன்னி உந்தன் கண்ணைக் கண்டு

தன் இனம் என்றே மருண்டு

தன் நிலை மறந்தே வண்டு

இசை பாடுது

கன்னி உந்தன் கண்ணைக்

கண்டு வண்டு

கான வேடன் போலே வந்து

கண்ணி வைக்கப் பார்க்குறீர்

கான வேடன் போலே வந்து

கண்ணி வைக்கப் பார்க்குறீர்

மானென மருண்டோடும்

பெண் மானே

மானென மருண்டோடும்

பெண் மானே

உன்னை நான் விடேனே

மானிதுவும் அல்லவே பூ மானே

மயங்காதே வீணே

மானிதுவும் அல்லவே பூ மானே

கோவை இதழ் தன்னைக் கண்டு

ஆவல் மீறி வந்தே

கோவை இதழ் தன்னைக் கண்டு

ஆவல் மீறி வந்தே

கொத்தித் தின்னப் பித்தம்

கொண்டதேனோ கிளி போலவே

கொத்தித் தின்னப் பித்தம்

கொண்டதேனோ கிளி போலவே

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி எந்தன்
 
நெஞ்சினைக் கவர்ந்த இன்ப

வஞ்சியை மெய்க் காதல் தந்த

வண்ணக் கிளியே

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் கிளியே

முழு மதியும் முகிலும்

போல் நாம் விளையாடுவோம்

முழு மதியும் முகிலும் போல்
நாம் விளையாடுவோம்

விழி மணியும் இமையும் போலே

உறவாடுவோம்

விழி மணியும் இமையும் போலே
 
உறவாடுவோம்

ஆருயிரே

ஆரமுதே

ஆரமுதெனவே காதல்

இன்பம் காணுவோம்

ஆரமுதெனவே காதல்

இன்பம் காணுவோம்

அன்பில் இணைந் தொன்றாய்

வாழுவோம்

நாமே அன்பில் இணைந் தோன்றாய்

வாழுவோம்

வண்ணமலர் தன்னைக் கண்டு

இன்னிசைப் பண் பாடிக் கொண்டு

தன்னை மறந்தே பொன் வண்டு

காதல் பேசுது

வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லது...

மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

கருத்துரையிடுக