பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 31 டிசம்பர், 2013

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

மீண்டும் A A ராஜ் அவர்களின் ஒரு பாடல். வாசுவின் குரல் கொஞ்சம் வறண்ட குரலாக தெரிகிறது இந்த பாடலில். ஆனாலும் ஆண்மைமிக்க குரல். இனிய பாடல்.
இந்த திரைப் படம் வெளியானதா இல்லையா என்பது தெரியவில்லை.

திரைப்படம்:  தணியாத தாகம் (1982)
நடிப்பு: டெல்லி கனேஷ்,
இசை: A A ராஜ்
இயக்கம் E M இப்ராஹிம்
குரல்: S ஜானகி, மலேஷியா வாசுதேவன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yODI2OTEyNF9XMXh2cV8yMDJm/Poove%20nee%20yaar%20solli.mp3










ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே

நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ

என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
என் தேவன் தேர் ஏறி வருகின்றான்
புன்னகையில் உன்னை அள்ளித் தருகின்றான்
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே

கோவில் கலசம் போல் என் தேவி

கூந்தலில் ஆடிடும் உன் மேனி

கோவில் கலசம் போல் என் தேவி
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
பூவிலும் பூ அவள் பொன் மேனி
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்
பூவே

மாங்கனி இளந்தென்றல் தாலாட்டு
என் மைவிழி மயங்கிட சீராட்டு
பூப்போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
பூப்பொல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு
இவள் பொன்னுடல் சிவக்கட்டும்
என் கரம் பட்டு

பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
இவள் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
புது மலர் புது மலர்
புது மலர் புது மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக