பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

சிந்தனை செய் மனமே

பாடலை கேட்டாலே மனம் அமைதிகொள்ளும். சில பாடல்களுக்கு மட்டுமே இந்த திறம் உண்டு. நிதானமாக நடிகரோடு இணைந்து இனிமையாக உருகிப் பாடியிருக்கிறார் டி எம் எஸ்.
பாடல் வரிகளை எடுத்து எழுதிய போது வரிகளில் ஏதாவது தவறு கண்டால் மன்னிக்க வேண்டும்.

திரைப் படம்: அம்பிகாபதி  (1957)
இசை: G ராமனாதன்
இயக்கம்: P நீலகண்டன்
நடிப்பு: சிவாஜி, பானுமதி
பாடல்: K D சந்தானம்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMDA5OTEwN185aEtjVl9lOTE4/Sinthanai%20sei%20maname.mp3






சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே
தினமே
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே

செந்தமிழ் தருள் ஞான தேசிகனை
ஞான தேசிகனை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
செந்தமிழ் தருள் ஞான தேசிகனை
செந்தில்
ஸ்கந்தனை வானவர் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே

ஸ்தந்ததம் மூவாசை சகதியில் உழந்தனை
ஸ்தந்ததம் மூவாசை சகதியில் உழந்தனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே
அருமரை பரவிய ஷரவணபவ குகனை
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை ஷன்முகனை
சிந்தனை செய் மனமே
மனமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக