பின்பற்றுபவர்கள்

சனி, 4 அக்டோபர், 2014

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம் ellorum kondaaduvom

இந்தப் பாடலை வண்ணத்தில் குழைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கண்ணை உறுத்தாத வண்ணம். அருமை. 
இந்த நன் நாளில் இந்தப் பாடலை நினைவுக் கூறுவதில் பெருமிதம் அடைகிறேன். 
என் இனிய இஸ்லாமிய நண்பர்களுக்கு Eid வாழ்த்துக்கள்.

திரைப் படம் : பாவ மன்னிப்பு (1961)
பாடியவர்: T.M. சௌந்தராஜன், நாகூர் ஹனிபா
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, தேவிகா
 
பாடலாசிரியர்: கண்ணதாசன
இயக்கம்: A பீம்சிங்













எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

கல்லாகப் படுத்திருந்து
கழித்தவர் யாருமில்லை
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பது லாபமில்லை
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே 

ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அதனையும்
ஆண்டவனின் பிள்ளையடா
கறுப்பில்ல, வெளுப்பில்ல
கடவுளுக்கு உருவமில்ல
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம்
முடிவுக்கு தந்தை என்போம்
மண்ணிலே விண்ணை கண்டு
ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமே
ஆடி முடிக்கையில் 

அள்ளி சென்றோர் யாருமுண்டோ
படைத்தவன் சேர்த்து தந்தான்
மதத்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்து கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்..

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

ஆஹா... இந்தப் பாடலை முன்னரே ரசித்திருந்தாலும் இப்படி வண்ணத்தில் பார்த்ததில்லையே.... எங்கய்யா புடிச்சீங்க...? கலெக்ஷன் தர்றதுல உங்களை அடிச்சுக்க ஆளில்லை அசோக். மிகமிக மகிழ்வோட நன்றி.

Unknown சொன்னது…

இது கருப்பு வெள்ளையோ அல்லது வண்ணமோ. நான் அதற்கு காரனதாரியல்ல. யாரோ ஒரு நல்ல மனசுக்காரர் செய்திருக்கிறார். எனக்கு கிடைத்தது. உங்களுக்கு வழங்கினேன். நமது இணைய நண்பர் ஒருவர், என்னமோ எல்லாம் தானே கதை எழுதி படமாக்கி வெளியட்டது போல இதற்கும் என்னை கள்ளர் என்பார். நல்ல மனிதர்.

Unknown சொன்னது…

கண்ணதாசன் சொன்ன ரகசியம்.....

"பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக
படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும்
என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங்.

"மெல்லிசை மன்னர்கள்"
விஸ்வநாதன் - ராமமூர்த்தி, "கவியரசு" கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான
சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள்.

படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார்.

அதன்படி, அந்த
நுட்பத்தை வெளிப்படுத்தும் விதமாக பாட்டு அமைய வேண்டும் என்று விரும்பி
இயக்குனர் ஏ.பீம்சிங் இதை கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி அவர்களிடம்
தெரிவித்தார்.

வழக்கம்போல், "மெல்லிசை மன்னர்கள்" மெட்டமைக்க, கண்ணதாசன் பாட்டு
எழுதிக் கொடுத்தார்.

பாடலை படித்துப் பார்த்த ஏ.பீம்சிங்கிற்கும், விஸ்வநாதனுக்கும் முதலில் ஒன்றும்
விளங்கவில்லை. "இதில் என்ன புதுமை இருக்கிறது, நுட்பம் உள்ளது" என
குழம்பினார்கள்.

திரும்ப, திரும்ப படித்துப் பார்த்துவிட்டு கண்ணதாசனிடம்
தயங்கிக் கேட்டார்கள்.

கண்ணதாசன் வழக்கமான தன்னுடைய குழந்தைப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே "பாடலைப் படித்துக் காட்டுங்கள்" என்றார்.

எம்.எஸ்.வி. உடனே," எல்லோரும் கொண்டாடுவோம்... எல்லோரும்
கொண்டாடுவோம். அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும்
கொண்டாடுவோம்" என்று மெட்டில் பாடினார்.

கண்ணதாசன், "இன்னுமா புரியலை, பிறப்பால்
இந்துவாக பிறந்து வாலிப வயதை எட்டிப் பிடித்தவன் ஒரு முஸ்லீமாக
வளர்ந்திருந்தாலும், அவனை அறியாமல் இந்து மத தத்துவமான "ஓம்" என்ற நாத மந்திரம் அவன் வாயினில் இருந்து வருவதுபோல் பாடலை அமைத்துள்ளேன்.

இப்பொழுது பாருங்கள்" என்று பாடிக் காட்டினார்.

எல்லோரும் கொண்டாடு
" ஓம் "

எல்லோரும் கொண்டாடு "ஓம் "

அல்லாவின் பெயரைச் சொல்லி

நல்லோர்கள் வாழ்வை எண்ணி

எல்லோரும் கொண்டாடு "ஓம் "

வருவதை வரவில் வைப்போ " ஓம் "

செய்வதை செலவில் வைப்போ "ஓம் "

முதலுக்கு அன்னை என்போ "ஓம் "

முடிவுக்கு தந்தை என்போ "ஓம் "

மண்ணிலே விண்ணை கண்டு

இன்பம் காணு " ஓம் "

எடுத்தவன் கொடுக்க வைப் "ஓம் "

கொடுத்தவன் எடுக்க. வைப் " ஓம் "

இன்று போல் என்றும் இங்கே

ஒன்றாய் கூடு " ஓம் "

என்று
முடித்ததுமே, "மெல்லிசை மன்னர்" அவரைக் கட்டிப்பிடித்து "கவிஞரே... இந்த உலகத்தில் உம்மை
ஜெயிக்க யாரய்யா இருக்கிறார்" என்று உச்சி முகர்ந்தார்..

கூடவே இயக்குனர்
ஏ.பீம்சிங்கும் தமக்கு வேண்டியது கிடைத்து விட்டது என்று சந்தோஷக் கடலில்
ஆழ்ந்தார்.

அதே போல இந்தப் பாடல் முழுக்க
" ஓம் " என வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நிகழ்ந்து நம்மை திக்கு
முக்காட வைக்கும்.
அந்தப் பாடல்.

தி கிரேட் கண்ணதாசன்.

கருத்துரையிடுக