பின்பற்றுபவர்கள்

வியாழன், 19 டிசம்பர், 2013

இலங்கையின் இளங்குயில்

இன்று இலங்கையில் 4 நாட்களாக சுற்று பயணத்தில் இருக்கிறோம். இன்னேரத்தில் இந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
நல்ல அழகான ஊர் கண்டி.


திரைப் படம்: பைலட் பிரேம்நாத் ()
பாடியவர்கள்: டி எம் எஸ், வாணி ஜெயராம்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
இயக்கம்:A C திருலோகசந்தர்
நடிப்பு:  சிவாஜி, ஸ்ரீதேவி, மாலினி பொன்சேகா


http://asoktamil.opendrive.com/files/Nl8yNzU2MTIyOF95NmlYR18xNzZj/ilangayinilankuyil.mp3








இலங்கையின் இளங்குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

இலங்கையின் இளம் குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

நாடென்ன மொழியென்ன
உள்ளங்கள் உறவாட
நாடென்ன மொழியென்ன
உள்ளங்கள் உறவாட
ஏடென்ன எழுத்தென்ன
எண்ணங்கள் பறிமாற
இலங்கையின் இளங்குயில்
உன்னோடு இசை பாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

என்றும் இந்த பூமியிலே
உனக்காக நான் பிறப்பேன்
என்றும் இந்த பூமியிலே
உனக்காக நான் பிறப்பேன்
நீதான் என் துணவனென்றால்
நூறு ஜென்மம் நானெடுப்பேன்
நீதான் என் துணவனென்றால்
நூறு ஜென்மம் நானெடுப்பேன்

விலகாத சொந்தமிது
பலகால பந்தமிது
விலகாத சொந்தமிது
பலகால பந்தமிது
இணை சேரும்
நூலிழை போல்
இணைந்தேன்
உன் நூலிடை மேல்
இலங்கையின் இளங்குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ

அன்பு தெய்வம் கௌதமனின்
அருள் கூறும் ஆலயங்கள்
வளரும் நம் உறவுகளை
வாழ்த்துகின்ற வேளையிது

கடல் வானம் உள்ளவரை
கணம் தோறும் காதல் மழை
தமிழ் போலும் ஆயிரம் காலம்
திகட்டாத மோஹன ராகம்

இலங்கையின் இளம் குயில்
என்னோடு இசைபாடுதோ
சலங்கையின் ஒலியெனும்
சங்கீதம் நகையானதோ


ஞாயிறு, 15 டிசம்பர், 2013

பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்

இது ஒரு அபூர்வமான பாடல் என நினைக்கிறேன். இனிமையான பாடல். பாடல் காட்சி கிடைக்கவில்லை. வழக்கமாக சங்கர் கணேஷ் இசையில் இது போன்ற பாடல்கள் கிளப் டான்ஸ் பாடலாகத்தான் அமையும். இடையில் உச்சரிக்கப் படும் ஆங்கில வசனங்கள் அப்படித்தான் தோன்றுகிறது.

திரைப்படம்: அன்பு ரோஜா (1975)
இயக்கம்:தேவராஜ் மோகன்
நடிப்பு: முத்துராமன், லதா
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்கள்:எஸ் பி பி, P சுசீலா
பாடல்:தெரியவில்லை


http://asoktamil.opendrive.com/files/Nl8yNzY5MjMwMV9nMTMzbV9mY2M0/paal%20nilavu%20neram-anbu_roja.mp3



பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா

பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமா
நீ தடுக்கலாமா

ததும்பிடும் மதுக்குடம்
தனையெடுத்தொரு தரம்
பருகிட வருகையில் மறைப்பதென்ன
உதடுகள் எழுதிடும்
புதுப்புது கதைகளை
முதல் முதல் படித்திட மறுப்பதென்ன
படுக்கையறை பாடல்கள்
பழக என்ன ஊடல்கள்
எதற்கு இந்த நாணங்கள்
விருந்தை விடுவேனோ
விலகுவது ஏனோ

HO you can't escape
kiss me
Don't miss me darling

ம் ம் ம் ம் ம்

உடையிலும் நடையிலும்
உருவத்தை மறைத்தொரு
நவரச நாடகம் நடித்ததென்ன
இடை கொண்ட கனிகளை
இடம் கண்டு பறித்திட
இளமனம் இதுவரை துடித்ததென்ன

நடந்த வரை விளையாட்டு
தெரிந்த பின்பு பாராட்டு
மடியில் என்னைத் தாலாட்டு
மயங்கி விட வேண்டும்
மணிவிழிகள் நான்கும்

Ho don't say me
you are a naughty boy

பால் நிலவு நேரம்
பார்க்கவில்லை யாரும்

பூவிதழின் ஓரம்
தேன் எடுக்கலாமே
தீரும் வரை நாமே

வெள்ளி, 13 டிசம்பர், 2013

ச ரி க ம ப பாட்டு பாடுங்க பாட்டில் உள்ள பாடங்களையே

இப்படியும் ஒரு பெண்ணா  என வியக்க வைத்தவர் பி பானுமதி அம்மா அவர்கள்.
சினிமாவின் எல்லா கரைகளையும் தொட்டவர் என்ற பெருமை தமிழ் தெலுங்கு திரைப் படத்துறையில் இவருக்கு மட்டுமே உண்டு.
தலை கணம் மிக்கவர் என்பார்கள். ஒன்றுமில்லாத நமக்கே இருக்கும் போது அவருக்கு இருப்பதில் என்ன ஆச்சர்யம்?
அவரே இசையமைத்து அவரே குழுவினருடன் பாடியுள்ள பாடல் கேளுங்கள்.
இந்த திரைப் படம் இயக்கம் தயாரிப்பு எல்லாமே அவர்தான்.

திரைப் படம்: இப்படியும் ஒரு பெண் (1975)
இசை: பி.பானுமதி
பாடல்: தெரியவில்லை
குரல்: பி.பானுமதி
நடிப்பு: சிவகுமார், பானுமதி


http://asoktamil.opendrive.com/files/Nl8yNjkxMzQxMl9oWDNual8wOWEw/Sa%20ri%20ga%20ma%20pa-IPPADIYUMORUPENN.mp3



ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

பாடலின் பூவுதிர் பாதை உண்டாக்கி
பாடலின் பூவுதிர் பாதை உண்டாக்கி
அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி
அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி

பாடலின் பூவுதிர் பாதை உண்டாக்கி
அப்பாதையில் ஓசையை ஜாதி பூவாக்கி

ஸ்ருதியில் நழுவாது
ஜதியில் பிசகாது
அழகாய் ஒன்றாய்
அசைந்தே நன்றாய்
ஆடியே வாங்க

ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ஆனந்தம் மதுரானந்தம்
அனுபவ ஞானமே சங்கீதம்
ஆனந்தம் மதுரானந்தம்
அனுபவ ஞானமே சங்கீதம்

பசுவுடன் கன்றை
சிசுவதின் நெஞ்சை
பசுவுடன் கன்றை
சிசுவதின் நெஞ்சை

பாம்பதின் கண்ணை
சொக்கச் செய்தே தாலாட்டாக்கும்

ச நி த ப ம க ரி ச
ச நி த ப ம க ரி ச

அப்பப்பப் பா

ச நி த ப ம க ரி ச
ச நி த ப ம க ரி ச

நோ நோ நோ நோ

ச நி த ப ம க ரி ச

ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ச ரி க ம ப
பாட்டு பாடுங்க
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ச ரி க ம ப
ஆ ஆ ஆ ஆ
பாட்டு பாடுங்க
ஆ ஆ ஆ ஆ
பாட்டில் உள்ள பாடங்களையே
கேட்டு கொள்ளுங்க

ல ல ல ல ல ல ல ல

புதன், 11 டிசம்பர், 2013

வண்ண மலர் தன்னைக் கண்டு இன்னிசைப் பண் பாடிக் கொண்டு


இந்திய சுதந்திரம் மற்றும் பாகிஸ்தான் பிரிவினையை பின்புலமாகக்  கொண்டு தயாரிக்கப்பட்ட படம்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையால் தந்தையை இழந்த எம் ஜி யார் குடும்பம் கராச்சியிலிருந்து சென்னை வந்து சேர்கிறது. இங்கு எம் ஜி யார் அவரது மாமனை (வில்லன்) கண்டுபிடித்து கொல்கிறார். அதனால் ஜெயிலுக்கு போகிறார்.
படம் அப்போது வெற்றிநடை போட்டதாக விக்கி சொல்கிறது.

பாடலில் தமிழ் கோலோச்சுகின்றது. உயர்ந்த இலக்கியத் தமிழில் இது போன்ற பாடல்கள் மிக சொச்சமே.
ஆனால் பாடலுக்கு குரல் கொடுத்தவர்கள் அந்தகால தமிழ் சினிமா வழக்கப் படி தமிழர்கள் அல்லாதவர்கள்.

பலருக்கு இந்த பாடல் அவ்வளவாக ரசிக்காது என நினைக்கிறேன்.

இந்தப் பாடலில் பாலுவாக வருபவர் திக்குறிச்சி சுகுமாரன் நாயர்.
லீலாவாக அழைக்கப் படுபவர் பி.கே.சரஸ்வதி.
எம் ஜி யாருக்கு ஜோடி எம் எஸ் தரௌபதி எனும் நடிகை.




திரைப் படம்: அந்தமான் கைதி (1952)
நடிப்பு: எம்.ஜி.ஆர், பி.கே.சரஸ்வதி
பாடியவர்கள்: மோதி அல்லது கண்டசாலா, பி லீலா
இசை: டி.கோவிந்தராஜுலு நாயுடு
பாடல்: கு.சா.கிருஷ்ணமூர்த்தி
இயக்கம்: வி.கிருஷ்ணன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yNzU2MTgzOV9lQ0FWZF9kM2Y1/vannamalar-ANDHAMANKAIDHI.mp3




ஓ ஓ ஓ ஓ ஓ பாலு

ஓ ஓ ஓ ஓ ஓ லீலா

வண்ண மலர் தன்னைக் கண்டு

இன்னிசைப் பண் பாடிக் கொண்டு

தன்னை மறந்தே பொன் வண்டு

என்ன சொல்லுது
வண்ண மலர் தன்னைக்

கண்டு வண்டு

கன்னி உந்தன் கண்ணைக் கண்டு

தன் இனம் என்றே மருண்டு

தன் நிலை மறந்தே வண்டு

இசை பாடுது

கன்னி உந்தன் கண்ணைக்

கண்டு வண்டு

கான வேடன் போலே வந்து

கண்ணி வைக்கப் பார்க்குறீர்

கான வேடன் போலே வந்து

கண்ணி வைக்கப் பார்க்குறீர்

மானென மருண்டோடும்

பெண் மானே

மானென மருண்டோடும்

பெண் மானே

உன்னை நான் விடேனே

மானிதுவும் அல்லவே பூ மானே

மயங்காதே வீணே

மானிதுவும் அல்லவே பூ மானே

கோவை இதழ் தன்னைக் கண்டு

ஆவல் மீறி வந்தே

கோவை இதழ் தன்னைக் கண்டு

ஆவல் மீறி வந்தே

கொத்தித் தின்னப் பித்தம்

கொண்டதேனோ கிளி போலவே

கொத்தித் தின்னப் பித்தம்

கொண்டதேனோ கிளி போலவே

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி எந்தன்
 
நெஞ்சினைக் கவர்ந்த இன்ப

வஞ்சியை மெய்க் காதல் தந்த

வண்ணக் கிளியே

கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் கிளியே

முழு மதியும் முகிலும்

போல் நாம் விளையாடுவோம்

முழு மதியும் முகிலும் போல்
நாம் விளையாடுவோம்

விழி மணியும் இமையும் போலே

உறவாடுவோம்

விழி மணியும் இமையும் போலே
 
உறவாடுவோம்

ஆருயிரே

ஆரமுதே

ஆரமுதெனவே காதல்

இன்பம் காணுவோம்

ஆரமுதெனவே காதல்

இன்பம் காணுவோம்

அன்பில் இணைந் தொன்றாய்

வாழுவோம்

நாமே அன்பில் இணைந் தோன்றாய்

வாழுவோம்

வண்ணமலர் தன்னைக் கண்டு

இன்னிசைப் பண் பாடிக் கொண்டு

தன்னை மறந்தே பொன் வண்டு

காதல் பேசுது

வண்ண மலர் தன்னைக் கண்டு வண்டு

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தேவார பாட்டும் தேன் ஊரும் இசையும்

இந்தப் பாடலின் காணொளி கிடைக்கவில்லை. படமே வெளியிடப்  படவில்லையா என்பதும் தெரியவில்லை. ஆனால் நல்ல பாடல்.

திரைப் படம்: தாளம் தவறிய ராகம் (வருடம்?)
இசை: M S விஸ்வனாதன் -- சந்தேகம்???
பாடல்: எழுதியவர் தெரியவில்லை
பாடியவர்கள்:S P பாலசுப்ரமண்யம், வாணி ஜெயராம்
இயக்கம்:தெரியவில்லை
நடிப்பு:தெரியவில்லை


http://asoktamil.opendrive.com/files/Nl8yNjkxMjczN19mZm1JZF83MjBj/Thevaara%20PaattumThenoorum.mp3





தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


இசை மேளங்களும் சுக நாதங்களும்
இனி நாள்தோறும் நாம் கேட்கவேண்டும் இங்கே


தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


ஒரு கண்ணில் நாணம் மறு கண்ணில் மோகம்
போராட வந்தால் என்ன சொல்ல


இருள் நேரத்திலே இதழோரத்திலே
புது சங்கீதம் ஓயாமல் கேட்பதென்ன


கோடைக்குத் தென்றல் வாடைக்குத் தணலாய்
உன் கைகள் தீண்டும் மாயமென்ன


என்ன மாயங்களோ என்ன ஜாலங்களோ
இளம் மங்கைக்கும் என் கைக்கும் தேவை எதோ

தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


தேனாறு பொங்கும் பூமேனி எங்கும்
ஆனந்த தீர்த்தம் ஆடவந்தேன்


சுவர்க்கலோகங்களே இங்கு வாருங்களேன்
என்று நாள்தோறும் நான் இங்கு பாடவந்தேன்


இளமாலை நேரம் அழகான தேகம்
எங்கெங்கும் கோலம் போடவந்தேன்


உடல் ஒன்றாகவும் உயிர் ஒன்றாகவும்
இன்று உன்னோடு நான் இங்கு கூட வந்தேன்


தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே

இசை மேளங்களும் சுக நாதங்களும்
இனி நாள்தோறும் நாம் கேட்கவேண்டும் இங்கே