பின்பற்றுபவர்கள்

திங்கள், 13 மே, 2013

தத்தித் தத்தித் தவழும் கிளியோ

P சுசீலா அம்மா மற்றும் சீர்காழி S கோவிந்தராஜன்  இந்த இருவர்களின் குரல்களை தமிழ் திரை  உலகம் மிகச் சரியாக உபயோகப் படுத்திக்கொண்டதற்க்கு இந்தப் பாடல் நல்லதொரு எடுத்துக் காட்டு. நின்று கேட்க வைக்கும் பாடல் வகையிது.

மனைவியே மனிதனின் மாணிக்கம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜிநாகைய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்: கே. மதனகோபால்
கே. எம். டி. வி. என். பிக்சர்ஸ்கதை: ராஜகோபால்
நடிப்பு: பாலாஜி, நாகைய்யா, பண்டரிபாய், (மைனாவதி ???) ஈ. வி. சரோஜா


இசையமைப்பு:எச். ஹனுமந்தராவ்
பாடல்: மருதகாசி

நன்றி: http://ta.wikipedia.org/wiki/


http://asoktamil.opendrive.com/files/Nl8xMTU0OTA0MV9JSVdxQ185NWIz/Thaththi%20Thaththi%20Thavazhum%20Kiliyo.mp3







தத்தித் தத்தித் தவழும் கிளியோ
சக்கரைப் பந்தலில் தேன் மழையோ
தத்தித் தத்தித் தவழும் கிளியோ
சக்கரைப் பந்தலில் தேன் மழையோ
முத்துக் கட்டிய பொற்சரமோ
நீ மோகன வண்ணச் சித்திரமோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தங்கம் பொங்கும் திங்கள் வதனம் தாமரையோ செந்தேன் மலரோ
தங்கம் பொங்கும் திங்கள் வதனம் தாமரையோ செந்தேன் மலரோ
சிங்கம் போலும் உங்கள் இளமை செந்தமிழ் வண்ணச் சித்திரமோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சிற்பம் கவிஞர் கற்பனை ஒன்றாய் சேர்ந்துருவான பெண் வடிவோ
சிற்பம் கவிஞர் கற்பனை ஒன்றாய் சேர்ந்துருவான பெண் வடிவோ
அற்புத இளமையில் பற்பல புதுமை அறியும் கலைஞர் என் துணையோ
தத்தித் தத்தித் தவழும் கிளியோ சக்கரைப் பந்தலில் தேன் மழையோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

குமித்த புருவம் கோவைச் செவ்வாய் கொல்லும் இரு விழி மென்மலரே
இனிப்பு மொழியும் அழகும் சுவையும் என்றும் இனி மேல் நம் உரிமை
தங்கம் பொங்கும் திங்கள் வதனம் தாமரையோ செந்தேன் மலரோ
காதல் காதல் காதலிலே
நாம் காண்போம் இன்பம் வாழ்வினிலே
காதல் காதல் காதலிலே
நாம் காண்போம் இன்பம் வாழ்வினிலே
மோதும் அலையில் வாழ்க்கை கடலில்
ஓடும் படகில் ஆடிடுவோம்
மோதும் அலையில் வாழ்க்கை கடலில்
ஓடும் படகில் ஆடிடுவோம்
ஆதரவென்னும் அன்பினில் ஒன்றாய்
அனுபவ கீதம் பாடிடுவோம்
நாம் அனுபவ கீதம் பாடிடுவோம்
தத்தித் தத்தித் தவழும் கிளியோ சக்கரைப் பந்தலில் தேன் மழையோ
முத்துக் கட்டிய பொற்சரமோ நீ மோகன வண்ணச் சித்திரமோ


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எந்தக்காலத்து படம்... அருமையான பாடல்...

நன்றி சார்... வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக